NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் பதவிக் காலம் நீட்டிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் பதவிக் காலம் நீட்டிப்பு 
    மேத்தா அக்டோபர் 2018 முதல் இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றி வருகிறார்

    இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் பதவிக் காலம் நீட்டிப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 01, 2023
    04:16 pm

    செய்தி முன்னோட்டம்

    மூத்த வழக்கறிஞரும் சொலிசிட்டர் ஜெனரலுமான துஷார் மேத்தாவின் பதவிக் காலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதோடு, உச்ச நீதிமன்றத்தின் ஆறு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களுக்கும்(ASG) மறு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

    மேத்தாவின் பதவிக்காலம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் உள்ள மற்ற சட்ட அதிகாரிகளின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

    இதனையடுத்து, அமைச்சரவையின் நியமனக் குழு(ஏசிசி) இன்று இந்த முடிவை எடுத்துள்ளது.

    உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பாக வாதிடும் தலைமை வழக்கறிஞர் பொதுவாக சொலிசிட்டர் ஜெனரல் என்று அழைக்கப்படுகிறார்.

    மேத்தா அக்டோபர் 2018 முதல் இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஞ் 

    மூன்று ASGக்கள் மீண்டும் நியமிக்கப்படவில்லை 

    ஏசிசியின் உத்தரவின் படி, சொலிசிட்டர் ஜெனரலின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    விக்ரம்ஜீத் பானர்ஜி, கே.எம். நடராஜ், பல்பீர் சிங், சூர்யபிரகாஷ் வி ராஜு, என். வெங்கட்ராமன் மற்றும் ஐஸ்வர்யா பதி ஆகியோர் மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட ஆறு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்கள் ஆவர்.

    மாதவி திவான், சஞ்சய் ஜெயின் மற்றும் ஜெயந்த் கே சுட் ஆகிய மூன்று ASGக்களை மீண்டும் நியமிப்பதற்கான எந்த உத்தரவும் இன்னும் வெளியிடப்படவில்லை. அவர்களின் பதவிக்காலமும் நேற்றுடன் முடிவடைந்துவிட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உச்ச நீதிமன்றம்

    WFI பாலியல் வன்கொடுமை வழக்கு: டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள்: இன்று உச்ச நீதிமன்றத்தில் என்ன விவாதிக்கப்பட்டது இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள் பற்றி உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கக்கூடாது: கிரண் ரிஜிஜு இந்தியா
    ஒரே பாலின தம்பதிகள் சமூக உரிமைகளை எவ்வாறு பெறுவார்கள்: மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி  இந்தியா

    இந்தியா

    ஊழியர்களின் PF தொகையை தாமதமாகச் செலுத்தும் பைஜூஸ் நிறுவனம் ஸ்டார்ட்அப்
    'காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்': பாதுகாப்புத்துறை அமைச்சர்  ஜம்மு காஷ்மீர்
    'சல்மான் கானை கண்டிப்பாக கொல்வோம்': கனடாவை சேர்ந்த ரவுடி மிரட்டல்  கனடா
    "மூன்றில் இரண்டு பங்கு 2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன" -ரிசர்வ் வங்கி ஆளுநர் ரிசர்வ் வங்கி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025