NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 14 குறுவை சாகுபடி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு  ஒப்புதல் அளித்தது மத்திய அரசு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    14 குறுவை சாகுபடி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு  ஒப்புதல் அளித்தது மத்திய அரசு 

    14 குறுவை சாகுபடி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு  ஒப்புதல் அளித்தது மத்திய அரசு 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 19, 2024
    08:34 pm

    செய்தி முன்னோட்டம்

    14 குறுவை சாகுபடி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) நரேந்திர மோடி அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னாவ் அறிவித்துள்ளார்.

    "இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் சில மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் நலனுக்காக மிக முக்கியமான முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. குறுவை பருவம் துவங்குகிறது. அதற்காக 14 பயிர்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நெல்லுக்கான புதிய MSP ரூ. 2,300 ஆகும். இது முன்பு இருந்த MSPயை விட ரூ.117 அதிகமாகும்" என்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் வைஷ்ணவ் கூறியுள்ளார்

    "பிரதமர் மோடியின் மூன்றாவது பதவிக்காலம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது விவசாயிகளின் நலனுக்கான மாற்றங்களில் கவனம் செலுத்துகிறது" என்று அமைச்சர் வைஷ்ணவ் கூறியுள்ளார்.

    இந்தியா 

    குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் தொடங்கவுள்ளது புதிய கடலோர காற்றாலைகள்

    இன்றைய முடிவிற்குப் பிறகு விவசாயிகள் சுமார் ரூ.2 லட்சம் கோடியை MSPயாகப் பெறுவார்கள் என்று வைஷ்ணவ் கூறியுள்ளார்.

    "இது முந்தைய சீசனைக் காட்டிலும் ரூ.35,000 கோடி அதிகமாகும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், இன்றைய கூட்டத்தில் இந்தியாவின் முதல் கடலோர காற்றாலை ஆற்றல் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    "இவை 1GW கடலோர காற்றாலை திட்டங்களாக இருக்கும், ஒவ்வொன்றும் 500 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்கக்கூடியதாக இருக்கும். இந்தியாவுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு" என்று வைஷ்ணவ் மேலும் கூறினார்.

    இந்த காற்றாலைகள் குஜராத் மற்றும் தமிழ்நாடு கடற்கரைகளில் அமைக்கப்பட உள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மத்திய அரசு

    சமீபத்திய

    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்
    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்

    இந்தியா

    அமராவதி தான் இனி ஆந்திராவின் தலைநகராக இருக்கும்: சந்திரபாபு நாயுடு ஆந்திரா
    கடும் வெப்பம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறைக்கு மத்தியில் டெல்லியில் மின்சாரம் துண்டிப்பு டெல்லி
    உத்தரபிரதேசத்தில் அதிகார மாற்றமா? 6 இண்டியா கூட்டணி எம்பிக்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள்  உத்தரப்பிரதேசம்
    'மோடியின் குடும்பம்' என்ற முழக்கத்தை அனைவரும் கைவிடலாம் என பிரதமர் மோடி பதிவு  பிரதமர் மோடி

    மத்திய அரசு

    நாளை நடைபெற இருக்கிறது விவசாயிகளுடனான மத்திய அரசின் 4-வது சுற்று பேச்சுவார்த்தை டெல்லி
    பயிர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு விலை கோரிய விவசாயிகளுக்கான மத்திய அரசின் 5 ஆண்டு முன்மொழிவு பஞ்சாப்
    வெங்காய ஏற்றுமதி தடையை மார்ச் 31 வரை நீட்டித்தது மத்திய அரசு இந்தியா
    திருமணம் செய்து கொண்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட இராணுவ செவிலியருக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு  இந்திய ராணுவம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025