NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு தர மத்திய, மாநில அரசுகள் மறுக்கக்கூடாது - உச்சநீதிமன்றம் 
    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு தர மத்திய, மாநில அரசுகள் மறுக்கக்கூடாது - உச்சநீதிமன்றம் 
    இந்தியா

    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு தர மத்திய, மாநில அரசுகள் மறுக்கக்கூடாது - உச்சநீதிமன்றம் 

    எழுதியவர் Nivetha P
    April 18, 2023 | 11:51 am 0 நிமிட வாசிப்பு
    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு தர மத்திய, மாநில அரசுகள் மறுக்கக்கூடாது - உச்சநீதிமன்றம் 
    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு தர மத்திய, மாநில அரசுகள் மறுக்கக்கூடாது - உச்சநீதிமன்றம்

    சமூக ஆர்வலர்கள் சிலர் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஓர் மனுவினை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு தரப்படுவதில்லை. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மக்கள் விகிதம் சரியாக பராமரிக்கப்படவில்லை என்னும் காரணத்திற்காக அவர்களுக்கு ரேஷன் கார்டுகள் தரப்படுவதில்லை. இதனால் அவர்களுக்கு ரேஷன் கார்டு கொடுக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசு மறுக்க கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு அண்மையில் விசாரணைக்கும் ஏற்கப்பட்டது. அதன்படி இந்த மனு மீதான விசாரணை நேற்று(ஏப்ரல்.,17) உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா., அசானுதீன், அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

    நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் புலம்பெயர் தொழிலாளர்கள் பங்கு அதிகம் 

    அப்போது மனுதாரர் குறித்த வாதத்தினை கேட்டறிந்த நீதிபதிகள் அதற்கான தீர்ப்பினையும் அளித்துள்ளார்கள். அவர்கள் அளித்துள்ள தீர்ப்பில், நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளில் புலம்பெயர் தொழிலாளர்களின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மக்கள் தொகை விகிதம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்னும் ஒரே காரணத்திற்காக மட்டும் அவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க அனுமதி மறுக்க கூடாது. பசியால் வாடுவோர் எங்கிருந்தாலும் அவர்களை தேடி சென்று அவர்களது பசியினை தீர்க்கவேண்டியது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமையாகும் என்று கூறியுள்ளனர். மேலும், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மக்கள் விகிதம் சரியாக பராமரிக்கப்படவில்லை என்னும் காரணத்திற்காக அவர்களுக்கு ரேஷன் கார்டுகள் தர மறுக்க கூடாது என்று கூறி உத்தரவினை பிறப்பித்துள்ளார்கள்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    மத்திய அரசு
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்

    மத்திய அரசு

    ஆன்லைன் ரம்மி தடை விவகாரம் - நடிகர் சரத்குமார் அவசர கோரிக்கை ஆன்லைன் விளையாட்டு
    ஒரே பாலின திருமணங்களை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது: ஒரு பார்வை   இந்தியா
    'ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை' திட்டம் - தமிழக அரசு எச்சரிக்கை  தமிழக அரசு
    கம்பம் திராட்சைக்கு கிடைத்த புவிசார் குறியீடு - நன்மைகள் என்ன? தமிழ்நாடு

    இந்தியா

    மும்பையில் திறக்கப்பட்ட ஆப்பிள் ஸ்டோர் - பிரதமர் மோடியை சந்திக்கும் டிம் குக்! ஆப்பிள் தயாரிப்புகள்
    உயிரி எரிபொருள் கலந்த பெட்ரோல் பயன்பாடு.. யாருக்கு லாபம்?  ஆட்டோமொபைல்
    ஒன்பது மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை: 45 °Cஐ நெருங்குகிறது வெப்பநிலை  வானிலை அறிக்கை
    பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் வீழ்ச்சி.. 500 கோடி சொத்து மதிப்பை இழந்த ரிஷி சுனக்கின் மனைவி!  பங்குச் சந்தை

    உச்ச நீதிமன்றம்

    அங்கீகரிக்கப்படுமா ஒரே பாலின திருமணங்கள்: ஏன் இந்த போராட்டம்  இந்தியா
    அதிக மரங்களை வெட்ட முற்பட்டதற்காக மும்பை மெட்ரோவிற்கு அபராதம்: உச்ச நீதிமன்றம்  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள்: குழந்தை உரிமைகள் ஆணையம் எதிர்ப்பு  இந்தியா
    தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி - போலீஸ் அனுமதி  தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023