கிருஷ்ண ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம் - வாழை இலையில் கிருஷ்ணர் ஓவியம் தீட்டி அசத்தும் சிறுமி
இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் மிக கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஒன்று கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ணர் அவதரித்த தினமாக கொண்டாடபடும் இந்த பண்டிகை தினத்தன்று குழந்தைகளுக்கு பிடித்த சீடை, அவல், பொறி போன்ற பொருட்கள் கொண்டே பிரசாதங்கள் தயாரிக்கப்படும். மேலும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கிருஷ்ணர், ராதை உள்ளிட்ட வேடங்களையிட்டு, வீட்டிலும், கோயில்களிலும் பூஜை செய்து வழிபடுவர். அதுமட்டுமல்லாமல், வீட்டிலுள்ள குழந்தைகளின் கால் தடங்களை வாசலிலிருந்து பூஜையறை வரை வரைவார்கள். கிருஷ்ணர் வீட்டிற்குள் வந்ததன் அடையாளமாக பக்தர்கள் இவ்வாறு செய்வதனை வழக்கமாக கொண்டுள்ளனர். பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, இன்று(செப்.,6)தமிழ்நாடு, மன்னார்குடியை சேர்ந்த சிறுமி ராகவி என்பவர் வாழை இலையில் கண்ணனை ஓவியமாக வரையும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.