NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஊழல் வழக்கு: ரோல்ஸ் ராய்ஸ் மீது சிபிஐ வழக்கு பதிவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஊழல் வழக்கு: ரோல்ஸ் ராய்ஸ் மீது சிபிஐ வழக்கு பதிவு 
    சுதிர் சௌத்ரி மீதான இரண்டு வழக்குகளும் போதிய ஆதாரம் இல்லாததால் மூடப்பட்டன.

    ஊழல் வழக்கு: ரோல்ஸ் ராய்ஸ் மீது சிபிஐ வழக்கு பதிவு 

    எழுதியவர் Sindhuja SM
    May 29, 2023
    03:45 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆயுத வியாபாரி சுதிர் சௌத்ரி, அவரது மகன் பானு சௌத்ரி, பிரிட்டிஷ் நிறுவனங்களான ரோல்ஸ் ராய்ஸ் Plc, பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ், டிம் ஜோன்ஸ், ரோல்ஸ் ராய்ஸ் இந்தியா இயக்குநர் உட்பட பலர் மீது மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) முறைகேடு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

    ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(HAL)இன் 24 ஹாக், 115 அட்வான்ஸ் ஜெட் டிரெய்னர் விமானங்களை வாங்கியது மற்றும் 2003-2012க்கு இடையில் 42 கூடுதல் விமானங்களை உற்பத்தி செய்வதற்கான உரிமம் தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள், அப்போதைய அரசு ஊழியர்களுடன் இணைந்து கிரிமினல் சதி செய்து விமானங்களை வழங்குவதற்கு தங்கள் அதிகாரப் பதவிகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

    details

    குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது இருக்கும் வழக்குகள் 

    இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(HAL)இன் 42 கூடுதல் விமானங்களைத் தொழில்நுட்ப பரிமாற்றத்தின் மூலம் கூடுதல் தொகைக்கு(308.247 மில்லியன் டாலர்) உற்பத்தி செய்ய உரிமம் வழங்கிய குற்றம்சாட்டும் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

    பிரிட்டிஷ் குடிமகனும் ஆயுத வியாபாரியுமான சௌத்ரி, 2004ல் இஸ்ரேலை தளமாகக் கொண்ட பாதுகாப்பு நிறுவனத்திடம் இருந்து பீரங்கித் துப்பாக்கிகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகம் அவரை விசாரித்தது. ஆனால், அந்த இரண்டு வழக்குகளும் போதிய ஆதாரம் இல்லாததால் மூடப்பட்டன.

    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் 2018-2019ஆம் ஆண்டில் மூன்று அரசு நடத்தும் இந்திய நிறுவனங்களின் ஒப்பந்தங்களை பெற சந்தேகத்திற்குரிய பணம் செலுத்தியது தொடர்பான ஒரு தனி வழக்கில் விசாரிக்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான மத்திய அரசின் வெப்சைட் இந்த வாரத்தில் தொடங்கப்படவுள்ளது வக்ஃப் வாரியம்
    தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு தமிழ்நாடு
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்

    இந்தியா

    பல தடைகளை தாண்டி UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி  இந்தியா
    நாட்டில் துண்டிக்கப்படும் மொபைல் எண்கள்.. விளக்கமளித்த தொலைத் தொடர்புத்துறை! சைபர் கிரைம்
    புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: அழைப்பை ஏற்றுக்கொண்ட 2 எதிர்க்கட்சிகள்  நாடாளுமன்றம்
    இந்திய நிறுவனங்களின் மீது அதிகரித்த ரேன்சம்வேர் இணையத் தாக்குதல்கள்! சைபர் கிரைம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025