NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தனது மருமகனை அரசியல் வாரிசாக அறிவித்தார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    தனது மருமகனை அரசியல் வாரிசாக அறிவித்தார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி
    பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட முக்கிய கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.

    தனது மருமகனை அரசியல் வாரிசாக அறிவித்தார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி

    எழுதியவர் Sindhuja SM
    Dec 10, 2023
    04:06 pm

    செய்தி முன்னோட்டம்

    பகுஜன் சமாஜ் கட்சி மேலாளரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை(28) அரசியல் வாரிசாக அறிவித்தார்.

    2019 மக்களவைத் தேர்தலின் போது மாயாவதி தரப்பில் இருந்து முக்கிய பிரச்சாரங்களை மேற்கொண்ட ஆகாஷ் ஆனந்த், அவரது கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

    பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட முக்கிய கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு பிறகு, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது வாரிசை அறிவித்தார்.

    பொதுவாக, பரம்பரை அரசியலை கடுமையாக விமர்சிக்கும் மாயாவதி, 2019 இல் தனது சகோதரர் ஆனந்த் குமாரை கட்சியின் தேசிய துணைத் தலைவராக நியமித்தார். அப்போது அவரது மருமகன் ஆகாஷ் தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

    ட்வளின்

    யாரிந்த ஆகாஷ் ஆனந்த்?

    ஆகாஷ் ஆனந்த் 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அரசியலில் நுழைந்தார்.

    அதற்கு முன்பு, மாயாவதி மற்றும் பிற பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களுடன் ஆகாஷ் ஆனந்த் இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது.

    2017 உத்தரபிரதேச மாநில தேர்தல் பிரச்சாரத்திலும் ஆகாஷ் ஆனந்த் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

    ஆகாஷ் ஆனந்த், மாயாவதியின் இளைய சகோதரரான ஆனந்த் குமாரின் மகன் ஆவார்.

    இந்நிலையில், நாடு முழுவதும் எங்களது கட்சி அமைப்பை பலப்படுத்தும் பொறுப்பு ஆனந்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் உதய்வீர் சிங் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    தேர்தல்
    அரசியல் நிகழ்வு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உத்தரப்பிரதேசம்

    உ.பி.யில் கொடூரம்; சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து ஆசனவாயில் மிளகாயை தேய்த்த கும்பல் இந்தியா
    அயோத்தி ராமர் கோவிலுக்காக உலகின் மிகப்பெரிய 400 கிலோ பூட்டை உருவாக்கிய தம்பதி  இந்தியா
    யோகி ஆதித்யநாத்தை அடுத்து அகிலேஷ் யாதவ்வை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்  ரஜினிகாந்த்
    அயோத்தி அனுமார் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் ரஜினிகாந்த்

    தேர்தல்

    வரும் டிசம்பர் மாதம் தமிழ்நாடு பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி  நரேந்திர மோடி
    20 ஆண்டு கால திருமண உறவை முறித்து கொண்டார் சச்சின் பைலட்: தேர்தல் பிரமாணப் பத்திரத்தால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை ராஜஸ்தான்
    அமலாக்கத்துறை விசாரணைக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை அரவிந்த் கெஜ்ரிவால்
    தெலங்கானா பெண்களுக்கு மாதம் ரூ.4,000: தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் ராகுல் காந்தி  ராகுல் காந்தி

    அரசியல் நிகழ்வு

    55 கோடி மதிப்பிளான நிலம் - முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம்! தமிழ்நாடு
    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி அதிமுக
    70% இடஒதுக்கீட்டு பணியிடங்களை நிரப்பாத மத்திய கல்வி நிறுவனங்கள்! தமிழ்நாடு
    ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை: CRPF அளித்த பதில்! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025