NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரிக்ஸ் மாநாடு: பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திக்க வாய்ப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரிக்ஸ் மாநாடு: பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திக்க வாய்ப்பு 
    2019ஆம் ஆண்டுக்குப் பிறகு, நேரில் நடத்தப்படும் முதல் பிரிக்ஸ் உச்சிமாநாடு இதுவாகும்.

    பிரிக்ஸ் மாநாடு: பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திக்க வாய்ப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 22, 2023
    09:43 am

    செய்தி முன்னோட்டம்

    பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்கா சென்றுள்ள நிலையில், பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்க்கு இடையே இருதரப்பு சந்திப்பு நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் 15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், பிரேசில், சீனா, ரஷ்யா மற்றும் தென்னாப்பிரிக்க தலைவர்களுடன் பிரதமர் மோடியும் கலந்து கொள்கிறார்.

    2019ஆம் ஆண்டுக்குப் பிறகு, நேரில் நடத்தப்படும் முதல் பிரிக்ஸ் உச்சிமாநாடு இதுவாகும்.

    கடந்த மூன்று ஆண்டுகளாக, கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக பிரிக்ஸ் உச்சிமாநாடு ஆன்லைனில் நடத்தப்பட்டது.

    பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துவார்களா என்று வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ராவிடம் கேட்கப்பட்டது.

    இகோவ்

    கிழக்கு லடாக்கில் மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் இந்திய-சீன மோதல் 

    அதற்கு பதிலளித்த அவர், பிரதமர் மோடியின் கால அட்டவணை திட்டமிடப்பட்டு வருவதாகவும், எது வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் திறந்த மனது இந்தியாவுக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    அப்படி இந்த சந்திப்பு நடந்தால், 2020 மே மாதம் இந்திய-சீன எல்லையில் மோதல் தொடங்கிய பின்னர் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துவது இது முதல்முறையாக இருக்கும்.

    கடந்த ஆண்டு நவம்பரில் பாலியில் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ நடத்திய G20 விருந்தில் இரு தலைவர்களும் சுருக்கமாக சந்தித்து கொண்டனர்.

    இந்திய-சீன எல்லையில், குறிப்பாக கிழக்கு லடாக்கில் சில உராய்வு புள்ளிகளில் இந்திய மற்றும் சீன துருப்புக்கள் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மோதலில் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    சீனா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி பிரதமர்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 16 தங்கம் வெள்ளி விலை
    இந்தியா முழுவதும் 9,86,585 ஆசிரியருக்கான காலி பணியிடங்கள் - உடனடியாக நிரப்ப அறிவுறுத்தல்  நாடாளுமன்றம்
    இந்தியாவில் ஐபோன் 15 உற்பத்தியைத் துவக்கிய ஃபாக்ஸ்கான் ஆப்பிள்

    சீனா

    பினான்ஸ் கிரிப்டோ தளத்தின் மீது புகார்களை அடுக்கிய SEC.. என்ன நடந்தது? அமெரிக்கா
    உளவு செயற்கைக்கோளை ஏவ திட்டமிடுகிறது அமெரிக்கா: காரணம் என்ன  ரஷ்யா
    கடைசி இந்தியப் பத்திரிகையாளரையும் வெளியேற்றுகிறது சீனா இந்தியா
    விசா இல்லாததால் சீன விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட லியோனல் மெஸ்ஸி லியோனல் மெஸ்ஸி

    உலகம்

    வாட்ஸ்அப்பில் இதய எமோஜி அனுப்பினால் ஐந்தாண்டு சிறை, 60 லட்சம் ரூபாய் அபராதம் வாட்ஸ்அப்
    UNO விளையாட வாரத்திற்கு ரூ.3.6 லட்சம் சம்பளம் வழங்கும் அமெரிக்க நிறுவனம் அமெரிக்கா
    நண்பர்கள் தினம் : அரசியலில் இருந்தும் தனிப்பட்ட வாழ்வில் நட்பு பாராட்டிய அரசியல் தலைவர்கள் நட்பு
    ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் டேங்கர்களை தாக்கிய உக்ரைன்: பதிலடி கொடுக்க ரஷ்யா முடிவு  ரஷ்யா

    உலக செய்திகள்

    மழையே பெய்யாத ஒரு விசித்திர கிராமம் பற்றி தெரியுமா? உலகம்
    அபுதாபியில் ஆபத்தான புதிய வகை MERS-கொரோனா கண்டுபிடிப்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    பழைய அமைச்சரை காணவில்லை: புதிய வெளியுறவு அமைச்சரை நியமித்தது சீனா  சீனா
    இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு முதல்முறையாக ஒரு பெண்ணை தூக்கிலிட தயாராகும் சிங்கப்பூர் சிங்கப்பூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025