NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் மது அருந்தாதவரை அருந்தியதாக காட்டிய ப்ரீத் அனலைசர் மிஷின் விவகாரம் - போக்குவரத்து கூடுதல் ஆணையர் விளக்கம்
    சென்னையில் மது அருந்தாதவரை அருந்தியதாக காட்டிய ப்ரீத் அனலைசர் மிஷின் விவகாரம் - போக்குவரத்து கூடுதல் ஆணையர் விளக்கம்
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    சென்னையில் மது அருந்தாதவரை அருந்தியதாக காட்டிய ப்ரீத் அனலைசர் மிஷின் விவகாரம் - போக்குவரத்து கூடுதல் ஆணையர் விளக்கம்

    எழுதியவர் Nivetha P
    Mar 29, 2023
    07:46 pm
    சென்னையில் மது அருந்தாதவரை அருந்தியதாக காட்டிய ப்ரீத் அனலைசர் மிஷின் விவகாரம் - போக்குவரத்து கூடுதல் ஆணையர் விளக்கம்
    சென்னையில் மது அருந்தாதவரை அருந்தியதாக காட்டிய ப்ரீத் அனலைசர் மிஷின் விவகாரம் - போக்குவரத்து கூடுதல் ஆணையர் விளக்கம்

    சென்னை பெருநகரில் வாகனத்தணிக்கையில் ஈடுபடும் போலீசார் ப்ரீத் அனலைசர்மிஷின் கொண்டு வாகனஓட்டிகள் மது அருந்தியுள்ளார்கள் இல்லையா என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். இக்கருவில் 30mgக்குமேல் காட்டினால் அவரது வாகனம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படும். இந்நிலையில் சென்னையை சேர்ந்த தீபக் என்பவர் நேற்றுமுன்தினம் தனது வீட்டிற்கு காரில் சென்றுகொண்டிருக்கையில் டிடிகே.சாலையில் அவரை போலீசார் மடக்கிப்பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் குடித்ததாக அந்த மிஷின் காண்பித்துள்ளது, ஆனால் தீபக்கிற்கு எவ்வித கெட்டப்பழக்கமும் இல்லை என்று அவர் தொடர்ந்து வாதாடினார். ஒரு மணிநேர வாக்குவாதத்திற்கு பிறகு வேறுஒரு புது ப்ரீத் அனலைசர் கொண்டுவரப்பட்டு சோதனை செய்துள்ளனர். அதில் அவர் மது அருந்தவில்லை என்று காண்பித்துள்ளது. அதன்பின்னரே போலீசார் அவரை அங்கிருந்துச்செல்ல அனுமதித்தனர்.

    2/2

    தனது ஆதங்கத்தை வீடியோ வடிவில் வெளியிட்ட தீபக்

    இந்த வீடியோ வைரலாக பரவியது. போலீசாரின் அத்துமீறல் குறித்து தீபக் வீடியோ ஒன்றினை வெளியிட்டு தனது ஆதங்கத்தை அதில் கூறியுள்ளார். அதில் அவர், மதுஅருந்தியதாக கூறி போலிமிஷினை வைத்து சோதனைசெய்து மோசடி செய்துவருகிறார்கள். பணம் பறிப்பதில் குறியாக உள்ளார்கள். எனவே அனைவரும் விழிப்புடன் இருங்கள் என்று கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது போக்குவரத்து காவல் கூடுதல்ஆணையர் கபில்குமார் சி.சரத்கர் இந்த சம்பவம் குறித்த விளக்கத்தினை அளித்துள்ளார். அதன்படி, சென்னையில் 245 ப்ரீத்அனலைசர் உள்ளது. இதில் தீபக்'கை சோதனை செய்த மிஷின் அவரையும் சேர்த்து 70பேரிடம் சோதனைசெய்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இதுபோல் நடந்திருக்கலாம். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். போலீசார் மீது தவறு இருந்தால் பாரபட்சம் இன்றி கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை
    போக்குவரத்து காவல்துறை

    சென்னை

    மதுரை மெட்ரோ - விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது மதுரை
    சென்னையில் 1 கோடி மதிப்பிலான நகைகளை பறித்து சென்ற வழக்கு - உண்மை அம்பலமானது தமிழ்நாடு
    மீண்டும் உயர்வை நோக்கி சென்ற தங்கம் விலை - விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    சென்னை ஆவடியில் உடற்பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு உடற்பயிற்சி

    போக்குவரத்து காவல்துறை

    சென்னையில் போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் 7 வாரங்களில் ரூ.6 கோடி அபராதம் வசூல் தமிழ்நாடு
    சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம் சென்னை
    சென்னையில் நம்பர் பிளேட் விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி துவக்கம் சென்னை
    சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மீது இரும்பு கம்பியால் தாக்குதல் சென்னை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023