NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காதலி தூக்குபோட்டு உயிரிழந்ததை வீடியோ காலில் பார்த்து ரசித்த காதலன் 
    காதலி தூக்குபோட்டு உயிரிழந்ததை வீடியோ காலில் பார்த்து ரசித்த காதலன் 
    இந்தியா

    காதலி தூக்குபோட்டு உயிரிழந்ததை வீடியோ காலில் பார்த்து ரசித்த காதலன் 

    எழுதியவர் Nivetha P
    April 20, 2023 | 08:24 pm 0 நிமிட வாசிப்பு
    காதலி தூக்குபோட்டு உயிரிழந்ததை வீடியோ காலில் பார்த்து ரசித்த காதலன் 
    காதலி தூக்குபோட்டு உயிரிழந்ததை வீடியோ காலில் பார்த்து ரசித்த காதலன்

    தமிழ்நாடு, நாகபட்டினம் மாவட்டம் திருவெண்காடு அருகிலுள்ள மருதூர் பகுதியினை சேர்ந்தவர் அர்ச்சனா(வயது24). இவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் எழில் நகரில் உள்ள அன்னபூர்ணா பைனான்ஸ் என்னும் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12ம்தேதியன்று வேலைக்கு சென்ற இவர் மதியஉணவு நேரத்திற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக வயிற்றுவலி என்று கூறி வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அவரின் தோழி உணவு இடைவெளிக்காக வந்து பார்த்தப்பொழுது அர்ச்சனா வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து நன்னிலம் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், அவர்கள் அர்ச்சனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அதனையடுத்து அர்ச்சனாவின் போனை கைப்பற்றிய போலீசார் விசாரணையினை துவங்கியுள்ளனர். அதில் அர்ச்சனா சத்தியராஜ்(26) என்பவரை காதலித்து வந்தது தெரியவந்துள்ளது.

    விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் 

    இவர்கள் இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்கள். இதற்கு இடையில், சத்யராஜுக்கு அவருடைய உறவினர் பெண்ணுடன் மற்றொரு காதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அர்ச்சனாவுக்கு சந்தேகம் வந்ததன் பேரில், அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது. சம்பவத்தினத்தன்றும் தான் தூக்கு போட்டு கொள்வதற்கு முன்னர் 45 நிமிடங்கள் சத்தியராஜுடன் போனில் பேசியுள்ளார். அந்த உரையாடலில் நீ தொலைந்துவிடு எனக்கூறிய சத்யராஜ் வீடியோ காலில் வரும்படி வற்புறுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து வீடியோ காலில் அர்ச்சனா தூக்குபோட்டு கொள்வதை பார்த்து ரசித்துள்ளார். மேலும் தூக்கு மாட்டிக்கொள்வதற்கு முன்னர் எனக்கு டாடா காட்டு என்று ஈவு இறக்கம் இன்றி கூறியுள்ளார். இதனை கண்டறிந்த போலீசார் தற்போது சத்தியராஜை கைது செய்துள்ளனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    காவல்துறை
    காவல்துறை

    தமிழ்நாடு

    அதிமுக இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும் - எடப்பாடி பழனிச்சாமி  தேர்தல் ஆணையம்
    அண்ணா பல்கலைக்கழக பதவியினை ராஜினாமா செய்தார் உதயநிதி ஸ்டாலின்  உதயநிதி ஸ்டாலின்
    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் வானிலை அறிக்கை
    சென்னையில் நடமாடும் ஆவின் ஐஸ்க்ரீம் விற்பனை வாகனம்-உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்  சென்னை

    காவல்துறை

    இந்தியாவிலேயே சென்னை மாநகரம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் - மு.க.ஸ்டாலின்  இந்தியா
    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிட விவகாரம் - விளக்கமளிக்க மாநகராட்சி நோட்டீஸ்  சென்னை
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் திருநெல்வேலி
    திருப்பூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.81 லட்சம் மோசடி - வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது  திருப்பூர்

    காவல்துறை

    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப்பணியில் தீயணைப்புத்துறை சென்னை
    சென்னையில் மது அருந்திய கணவருக்காக போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இளம்பெண் சென்னை
    கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதற்காக கடத்திய பேராசிரியை கணவர் கைது  கோவை
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு  திருநெல்வேலி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023