NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பக்கத்து வீட்டு வாசலில் தொங்கி கொண்டிருந்த 2 வயது சிறுமியின் உடல்
    பக்கத்து வீட்டு வாசலில் தொங்கி கொண்டிருந்த 2 வயது சிறுமியின் உடல்
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    பக்கத்து வீட்டு வாசலில் தொங்கி கொண்டிருந்த 2 வயது சிறுமியின் உடல்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 10, 2023
    02:42 pm
    பக்கத்து வீட்டு வாசலில் தொங்கி கொண்டிருந்த 2 வயது சிறுமியின் உடல்
    குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாகிவிட்டார், ஆனால் போலீஸ் குழுக்கள் அவரைத் தேடி வருகின்றன

    உத்தர பிரதேசத்தில் இரண்டு நாட்களாக காணாமல் போயிருந்த 2 வயது சிறுமியின் சடலம் பக்கத்து வீட்டு வாசலில் தொங்கிய நிலையில் இருந்த பையில் கண்டெடுக்கப்பட்டது. கடந்த வாரம் குழந்தை காணாமல் போனபோது, ​​அண்டை வீட்டுக்காரர் சிறுமியை தேடுவதற்கு பெற்றோருக்கு உதவுவது போல் நடித்துள்ளார். அவரது வீட்டில் இருந்து பிணத்தின் வாடை எடுக்க ஆரம்பித்ததும் அவர் தப்பி ஓடிவிட்டார் என்று கூறப்படுகிறது. இரண்டு வயது மான்சியின் பெற்றோரும் அவளது ஏழு மாத சகோதரனும் கிரேட்டர் நொய்டாவின் தேவ்லா கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சிறுமியின் பெற்றோர் இருவரும் அருகிலுள்ள தொழிற்சாலையில் தினசரி கூலி வேலை செய்பவர்கள் ஆவர். வெள்ளிக்கிழமை அன்று, சிறுமியின் பெற்றோர் இருவரும் வெளியே சென்றுவிட்டு வீடு திருப்பியபோது, மான்சியைக் காணவில்லை.

    2/2

    குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் பிரேத பரிசோதனையில் தெரியவரவில்லை

    மான்சியைக் கண்டுபிடிக்க முடியாததால், பெற்றோர் சிறுமியைக் காணவில்லை என்று புகார் அளித்தனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு, சிறுமியின் தந்தை சிவகுமார் தனது பக்கத்து வீட்டுக்காரரான ராகவேந்திராவின் பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக புகார் அளித்தார். போலீசாரின் உதவியுடன் அந்த வீட்டிற்குள் நுழைந்து பார்த்த போது, ஒரு கதவில் தொங்கவிடப்பட்டிருந்த பையில் மான்சியின் உடல் இருந்தது. கொலையாளி அந்த குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. "முதலில் இது பலாத்காரமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாகிவிட்டார். ஆனால் போலீஸ் குழுக்கள் அவரைத் தேடி வருகின்றன" என்று மூத்த நொய்டா காவல்துறை அதிகாரி ராஜீவ் தீட்சித் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    டெல்லி
    உத்தரப்பிரதேசம்

    இந்தியா

    உத்தராகண்ட் சிறையில் 1 பெண் உட்பட 44 பேருக்கு HIV பாசிட்டிவ் உத்தரகாண்ட்
    சிறுவனுக்கு உதட்டில் முத்தம் கொடுத்ததற்கு மன்னிப்பு கேட்டார் தலாய் லாமா தலாய் லாமா
    உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற தமிழக வீரர்க குகேஷ் இந்திய அணி
    ஏப்ரல் 10இல் தங்கம் விலை அதிரடியாக சரிவு - வாங்க உடனே முந்துங்கள் தங்கம் வெள்ளி விலை

    டெல்லி

    ஏர் இந்தியா விமானத்தில் விமான பணியாளர்களை தாக்கிய பயணி ஏர் இந்தியா
    இண்டிகோ: போதையில் விமான அவசர கதவை திறக்க முயற்சித்த விமான பயணி இந்தியா
    டெல்லி மெட்ரோவில் 'ஆபாசமாக' உடை அணிந்து சென்ற பெண் பேட்டி இந்தியா
    ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக தகவல் இந்தியா

    உத்தரப்பிரதேசம்

    உத்திரபிரதேசத்தில் மாலில் பெண் ஊழியரை பாலியல் வன்புணர்வு செய்த செக்யூரிட்டி இந்தியா
    உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது காவல்துறை
    உத்தரப்பிரேதேசத்தில் சொத்திற்காக கணவன், இரு மகன்களை கொன்ற பெண் - அதிர்ச்சி தகவல் இந்தியா
    உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023