NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பக்கத்து வீட்டு வாசலில் தொங்கி கொண்டிருந்த 2 வயது சிறுமியின் உடல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பக்கத்து வீட்டு வாசலில் தொங்கி கொண்டிருந்த 2 வயது சிறுமியின் உடல்
    குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாகிவிட்டார், ஆனால் போலீஸ் குழுக்கள் அவரைத் தேடி வருகின்றன

    பக்கத்து வீட்டு வாசலில் தொங்கி கொண்டிருந்த 2 வயது சிறுமியின் உடல்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 10, 2023
    02:42 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தர பிரதேசத்தில் இரண்டு நாட்களாக காணாமல் போயிருந்த 2 வயது சிறுமியின் சடலம் பக்கத்து வீட்டு வாசலில் தொங்கிய நிலையில் இருந்த பையில் கண்டெடுக்கப்பட்டது.

    கடந்த வாரம் குழந்தை காணாமல் போனபோது, ​​அண்டை வீட்டுக்காரர் சிறுமியை தேடுவதற்கு பெற்றோருக்கு உதவுவது போல் நடித்துள்ளார்.

    அவரது வீட்டில் இருந்து பிணத்தின் வாடை எடுக்க ஆரம்பித்ததும் அவர் தப்பி ஓடிவிட்டார் என்று கூறப்படுகிறது.

    இரண்டு வயது மான்சியின் பெற்றோரும் அவளது ஏழு மாத சகோதரனும் கிரேட்டர் நொய்டாவின் தேவ்லா கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    சிறுமியின் பெற்றோர் இருவரும் அருகிலுள்ள தொழிற்சாலையில் தினசரி கூலி வேலை செய்பவர்கள் ஆவர்.

    வெள்ளிக்கிழமை அன்று, சிறுமியின் பெற்றோர் இருவரும் வெளியே சென்றுவிட்டு வீடு திருப்பியபோது, மான்சியைக் காணவில்லை.

    இந்தியா

    குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் பிரேத பரிசோதனையில் தெரியவரவில்லை

    மான்சியைக் கண்டுபிடிக்க முடியாததால், பெற்றோர் சிறுமியைக் காணவில்லை என்று புகார் அளித்தனர்.

    இரண்டு நாட்களுக்குப் பிறகு, சிறுமியின் தந்தை சிவகுமார் தனது பக்கத்து வீட்டுக்காரரான ராகவேந்திராவின் பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக புகார் அளித்தார்.

    போலீசாரின் உதவியுடன் அந்த வீட்டிற்குள் நுழைந்து பார்த்த போது, ஒரு கதவில் தொங்கவிடப்பட்டிருந்த பையில் மான்சியின் உடல் இருந்தது.

    கொலையாளி அந்த குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

    "முதலில் இது பலாத்காரமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாகிவிட்டார். ஆனால் போலீஸ் குழுக்கள் அவரைத் தேடி வருகின்றன" என்று மூத்த நொய்டா காவல்துறை அதிகாரி ராஜீவ் தீட்சித் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    டெல்லி
    உத்தரப்பிரதேசம்

    சமீபத்திய

    இனி இருட்டிலும் தெளிவாக பார்க்கலாம்; புதிய இன்ஃப்ரா ரெட் காண்டாக்ட் லென்ஸ்களை உருவாக்கிய விஞ்ஞானிகள் கண் பராமரிப்பு
    ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸின் டாப் 2 கனவுக்கு வேட்டு வைத்த சிஎஸ்கே; குவாலிபயர் 1 வாய்ப்பு எந்த அணிக்கு கிடைக்கும்? ஐபிஎல் 2025
    ஐபிஎல் 2025 எஸ்ஆர்எச்vsகேகேஆர்: டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீச்சு ஐபிஎல் 2025
    இந்தியாவில் ₹840க்கும் குறைவான விலையில் செயற்கைக்கோள் இன்டர்நெட் சேவை வழங்க ஸ்டார்லிங்க் திட்டம் ஸ்டார்லிங்

    இந்தியா

    முன்னாள் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான கிரண் ரெட்டி பாஜகவில் இணைந்தார் ஆந்திரா
    கொரோனா பரவலின் போது 180+ நாடுகளுக்கு இந்தியா உதவியது: சுகாதார அமைச்சர் கொரோனா
    நாட்டில் ஏழைகள் ஏழையாகி கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடியை சாடிய கபில் சிபல் பாஜக
    அம்ரித்பால் விவகாரம்: ஏப்ரல் 14 வரை காவல்துறையினரின் விடுமுறை ரத்து பஞ்சாப்

    டெல்லி

    போக்குவரத்தில் ஒழுங்கீனமான நகரம் என்றால் டெல்லி தான்! இன்போசிஸ் நாராயண மூர்த்தி தொழில்நுட்பம்
    தடுத்து நிறுத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர்: டெல்லி விமான நிலையத்தில் போராட்டம் இந்தியா
    சிறைக்குள் ஆடம்பரமாக வாழ்ந்த மோசடி நபரின் சிசிடிவி காட்சிகள் இந்தியா
    டெல்லி விமான நிலைய சர்ச்சை: கைது செய்யப்பட்டார் பவன் கேரா இந்தியா

    உத்தரப்பிரதேசம்

    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் காவல்துறை
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை கேரளா
    ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள் நேபாளம்
    உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025