NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொது தேர்வு: மத்திய அரசு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொது தேர்வு: மத்திய அரசு 
    2024ஆம் கல்வியாண்டு முதல் இந்த புதிய கட்டமைப்பு அமல்படுத்தப்பட உள்ளது.

    11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொது தேர்வு: மத்திய அரசு 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 23, 2023
    02:54 pm

    செய்தி முன்னோட்டம்

    பள்ளி கல்வி முறையில் மிகப்பெரும் மாற்றங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி, இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொது தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    மேலும், 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கண்டிப்பாக இரண்டு மொழிகளை படிக்கச் வேண்டும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

    தேசிய கல்விக் கொள்கை 2020(NEP) இணங்க, பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்ட கட்டமைப்பை மத்திய கல்வி அமைச்சகம் இன்று(ஆகஸ்ட் 23) அறிமுகப்படுத்தியது.

    நிவ்ஜ்க

    ஸ்டேட் போர்டு பள்ளிகளுக்கு இந்த மாற்றங்கள் பொருந்துமா?

    அடுத்த ஆண்டு முதல், அதாவது 2024ஆம் கல்வியாண்டு முதல் இந்த புதிய கட்டமைப்பு அமல்படுத்தப்பட உள்ளது.

    இதற்கான வழிகாட்டுதலைகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான CBSE விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த மாற்றங்கள் மாநில வாரிய(State board) பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டுமா என்பதை அந்தந்த மாநிலங்களின் அரசுகள் முடிவெடுக்கும்.

    ஆனால், திமுக தலைமையிலான தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கைக்கு பல எதிர்ப்புகளை தெரிவித்து வருவதால், தமிழக மாநில வாரிய பள்ளிகளில் இது அமல்படுத்தப்படுமா என்பது சந்தேகமே.

    டியூக்கி

    11, 12ஆம் வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய மாற்றங்கள்

    பொது-தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட்டு, அந்த இரண்டு தேர்வுகளில் எந்த தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்கிறார்களோ அதை தக்கவைத்து கொள்ள அனுமதிக்கப்படும்.

    மனப்பாடம் மற்றும் கோச்சிங்கின் அடிப்படையில் இல்லாமல், மாணவர்கள் எந்த அளவு பாடங்களை புரிந்திருக்கிறார்கள், எவ்வளவு திறன் வளர்ந்திருக்கிறது என்பதன் அடிப்படையில் மாணவர்கள் மதிப்பிடப்படுவார்கள்.

    11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களுக்கு பிடித்த பாடங்களை தேர்வு செய்து கொள்ளலாம். பாடப்பிரிவின் அடிப்படையில் தான் பாடங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற காட்டாயம் இருக்காது. எடுத்துகாட்டாக, கணிதம்,உயிரியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பம் இருந்தால் கணினி-அறிவியலையும் படிக்கலாம்.

    11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் கண்டிப்பாக இரண்டு மொழிகளை படிக்க வேண்டும். குறைந்தது ஒரு மொழியாவது இந்திய மொழியாக இருக்க வேண்டும்.

    சீபா

    பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய மாற்றங்கள்

    கூடுதலாக, 2024 கல்வியாண்டுக்கு புதிய பாடப்புத்தகங்கள் உருவாக்கப்படும்.

    பாட புத்தகங்களுக்கு 'கவர்' போடும் நடைமுறை இனி தவிர்க்கப்படும்.

    பாட புத்தகங்கள் மலிவு விலையில் வழங்கப்படும்.

    தேவையின் அடிப்படையில் சரியான நேரத்தில் தேர்வுகளை பள்ளிகளே நடத்தும் திறன் மேம்படுத்தபடும்.

    பொது தேர்வுகளுக்கு கேள்வி தாளை உருவாக்குபவர்கள் மற்றும் விடை தாளை திருத்துபவர்கள் கண்டிப்பாக புதிதாக அறிமுகப்படுத்த இருக்கும் பல்கலைக்கழக சான்றிதழ் படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

    ட்விட்டர் அஞ்சல்

    கல்விமுறையை மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு 

    #BREAKING | 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்தும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கிறது ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம்!#SunNews | #PublicExams | #UnionGovernment pic.twitter.com/1Dw9MQEBgs

    — Sun News (@sunnewstamil) August 23, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மத்திய அரசு
    தமிழக அரசு

    சமீபத்திய

    புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகு ஜோ பைடனின் முதல் பதிவு ஜோ பைடன்
    ஐபிஎல் 2025 எஸ்ஆர்எச்vsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    உங்கள் வீட்டில் வைஃபை இணைப்பு விரைவில் வலுவாகவும் வேகமாகவும் மாறப்போகிறது தொலைத்தொடர்புத் துறை
    இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது; இலங்கை பிரஜையை நாடுகடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்

    இந்தியா

    இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம் - பெங்களூரில் திறப்பு பெங்களூர்
    உலகின் மிகப்பெரிய சுகாதார சேவை; இந்தியாவின் ஆயுஷ்மான் பாரத்துக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு உலக சுகாதார நிறுவனம்
    'அனைத்து அரசு நிறுவனங்களும் RSS கையில் தான் இருக்கிறது': ராகுல் காந்தி காங்கிரஸ்
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா

    மத்திய அரசு

    NLC கலவரம்: 28 பாமக-வினருக்கு 15 நாட்கள் காவல் நெய்வேலி
    செயலிழந்த பான் கார்டை வைத்து வருமான வரித்தாக்கல் செய்யலாமா? வருமான வரி விதிகள்
    கிருஷ்ணகிரி வெடி விபத்து - ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசு அதிகாரிகள் தமிழ்நாடு
    சர்ச்சைக்குரிய டெல்லி அவசரச் சட்டம் தொடர்பான மசோதாவை அறிமுகப்படுத்த இருக்கும் மத்திய அரசு  டெல்லி

    தமிழக அரசு

    மகளிர் உரிமை தொகை திட்டம் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு  சென்னை
    அரசு பள்ளி ஆசிரியர்கள் துறை மாறுதலுக்கு செல்லலாம் - பள்ளிக்கல்வித்துறை  பள்ளிக்கல்வித்துறை
    தமிழக மகளிர் உரிமைத்தொகை திட்டம் - வங்கி கணக்கு, மொபைல் போன் கட்டாயம்! மு.க ஸ்டாலின்
    இனி சனிக்கிழமைகளிலும் சென்னையில் ஆர்.டி.ஓ அலுவலகங்கள் செயல்படும்  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025