NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட விவகாரம் - 9 தனிப்படைகள் அமைப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட விவகாரம் - 9 தனிப்படைகள் அமைப்பு 
    சென்னையில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட விவகாரம் - 9 தனிப்படைகள் அமைப்பு

    சென்னையில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட விவகாரம் - 9 தனிப்படைகள் அமைப்பு 

    எழுதியவர் Nivetha P
    Apr 28, 2023
    02:50 pm

    செய்தி முன்னோட்டம்

    பாஜக'வில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவில் மாநில பொருளாளராக பதவி வகித்தவர் பிபிஜி சங்கர். வளர்புர ஊராட்சி மன்ற தலைவராகவும் அவர் உள்ளார்.

    இந்நிலையில் நேற்று(ஏப்ரல்.,27) இரவு சென்னை கொளத்தூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    பின்னர் மீண்டும் வளர்புரம் நோக்கி செல்கையில் பூந்தமல்லி அருகே சென்னை-பெங்களூரு தேசியநெடுஞ்சாலை நஸ்ரத்பேட்டை சந்திப்பில் கார் சிக்னலில் நின்றபொழுது அவரது காரினை பின்தொடர்ந்து வந்த 2 காரில் வந்த மர்ம நபர்கள் திடீரென 3 நாட்டுவெடிகுண்டுகளை காரின் மீது சரமாரியாக வீசியுள்ளனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிபிஜி சங்கர் உடனடியாக காரினை விட்டு இறங்கி தப்பியோட முயற்சித்தார்.

    சாலையின் மறுபக்கம் சென்று தப்பி செல்ல முயன்ற அவரை விடாமல் அந்த மர்ம கும்பலும் பின்தொடர்ந்து துரத்தி சென்றது.

    பாஜக

    செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து விசாரணை 

    பின்னர் பிபிஜி சங்கரை சுற்றிவளைத்த அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளது.

    பிபிஜி சங்கரை வெட்ட முயற்சித்தப்பொழுது அவரும் அவர்களுக்கு எதிராக கத்தியினை வீசி எதிர்தாக்குதல் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    எனினும் அவரால் அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க முடியாமல் உயிரிழந்துள்ளார்.

    மீண்டும் அந்த கும்பல் அந்த இடத்தில் 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளது.

    இதனைதொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ஆவடி காவல்ஆணையராக இணைஆணையர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சுமார் 9 தனிப்படைகள் அமைத்து அந்த மர்மகும்பலினை தீவிரமாக தேடிவருகிறார்கள்.

    சங்கருக்கு வந்த செல்போன் அழைப்புகள், சம்பவ இடத்தில் கிடைத்த செல்போனில் உள்ள அழைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் என பல கோணத்தில் போலீசார் தங்கள் விசாரணையினை நடத்திவருகிறார்கள் என்பது குறிப்பிடவேண்டியவை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    பாஜக

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    சென்னை

    "நாங்க பாத்துகிறோம்..நீங்க ஒடம்ப பாத்துக்கோங்க ஆன்ட்டி": குட்டி பத்மினிக்கு நக்கலாக பதிலளித்த அபிராமி கோலிவுட்
    புதிய உச்சத்திற்கு மீண்டும் சென்ற தங்கம் விலை - இன்றைய நிலவரம்!  தங்கம் வெள்ளி விலை
     சென்னையில் போக்குவரத்துக்கு ஒரே பயண டிக்கெட்! சட்டப்பேரவையில் அறிவிப்பு தமிழ்நாடு
    தமிழ் புத்தாண்டு மற்றும் வார இறுதி விடுமுறை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு  தமிழ்நாடு

    பாஜக

    தமிழக பள்ளிக்கல்வித்துறையில் ஊழல் நடப்பதாக குற்றச்சாட்டு - பாஜக மாநில துணை தலைவர் தமிழ்நாடு
    மத்திய அரசுக்கு எதிரான மனு: ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றசாட்டு இந்தியா
    மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது: மத்திய அரசு இந்தியா
    புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கு - திருச்சி நீதிமன்றத்தில் 7 பேர் சரண் புதுச்சேரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025