NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகார் வாலிபர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகார் வாலிபர் கைது
    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகார் வாலிபர் கைது

    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகார் வாலிபர் கைது

    எழுதியவர் Nivetha P
    Mar 30, 2023
    02:52 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் பல வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் இங்கு வந்து தங்கி பணிபுரிந்து வருகிறார்கள்.

    இந்நிலையில் தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, அவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று அண்மை காலமாக புகார்கள் எழுந்து வந்தன.

    இதற்கு காரணம் சமூக வலைத்தளங்களில் அதுபோன்ற வீடியோக்கள் பெருமளவில் பரவியது தான்.

    இது பெரும் அதிர்வலைகளை எழுப்பிய நிலையில், தமிழ்நாடு போலீசார் இது குறித்து தீவிர விசாரணையினை மேற்கொண்டு வந்தது.

    இந்த விசாரணையில் வதந்தி பரப்பிய பீகார் மாநிலத்தை சேர்ந்த பாஜக பிரமுகர்கள் 2 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தது.

    அதில் ஒருவர் விஷயம் தெரிந்து நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்று விட்டார் என்று கூறப்படுகிறது.

    பலத்த பாதுகாப்பு

    சென்னை மாநகர காவல் ஆணையரக அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட குற்றவாளி

    இதனையடுத்து மற்றோரு நபரை தமிழ்நாடு போலீசார் மிக தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் தற்போது போலீசாரால் தேடப்பட்டு வந்த மற்றொரு நபரான மணீஷ் காஷ்யப் என்பவரை பீகார் மாநிலம் பாட்னாவில் வைத்து தமிழ்நாடு தனிப்படை போலீசார் கைது செய்துள்ளார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    கைது செய்யப்பட்ட அந்த பீகார் மாநில வாலிபரான மணீஷ் காஷ்யப்'பை தமிழ்நாடு தனிப்படை போலீசார் பாட்னாவில் இருந்து விமானம் மூலம் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.

    அதன் பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து சென்னை மாநகர காவல் ஆணையரக அலுவலகத்திற்கு பாதுகாப்போடு அழைத்து சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    காவல்துறை
    காவல்துறை
    சமூக வலைத்தளம்

    சமீபத்திய

    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்

    தமிழ்நாடு

    மற்றுமொரு குட்டி யானையை தத்தெடுத்த 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' தம்பதி ஆஸ்கார் விருது
    பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதாமல் ஆப்சென்ட்டான 50,000 மாணவர்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் பள்ளி மாணவர்கள்
    வானிலை அறிக்கை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை வானிலை அறிக்கை
    தமிழகத்தின் முதல் மிதவை உணவகம் அறிமுகம் - சுற்றுலாத்துறை செயலாளர் சுற்றுலாத்துறை

    காவல்துறை

    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் உத்தரப்பிரதேசம்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    தமிழக டிஜிபி பொதுமக்களுக்கு எச்சரிக்கை-'இரிடியம் முதலீடு' என்னும் பெயரில் மோசடி தமிழ்நாடு

    காவல்துறை

    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு தூத்துக்குடி
    வைரல் வீடியோ: காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கிய 'பாஜக MLAவின் ஆட்கள்' மத்திய பிரதேசம்
    ஆந்திராவில் இறந்த மனைவியை 115கி.மீ., தோளில் சுமந்தவாறு நடக்க துவங்கிய கணவன்-உதவிய காவல்துறை ஆந்திரா
    கர்நாடகாவில் மாணவியை பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்ட கல்லூரி முதல்வர் கர்நாடகா

    சமூக வலைத்தளம்

    தமிழகத்தில் புதுவித சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் - எச்சரிக்கை விடுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை
    சித்தமருத்துவர் ஷர்மிகா மீது புகார்-இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டிஸ் மருத்துவ ஆராய்ச்சி
    சித்த மருத்துவர் ஷர்மிகா விசாரணைக்காக கல்லூரி அலுவலகத்தில் நேரில் ஆஜர் சென்னை
    ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உணவு மிக அருமை! சமூகவியலாளர் சால்வடோர் பாபோன்ஸ் பதிவு! ரயில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025