NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெங்களூரு பிஜியில் வைத்து பெண்ணைக் கொலை செய்த நபர் மத்தியப் பிரதேசத்தில் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்களூரு பிஜியில் வைத்து பெண்ணைக் கொலை செய்த நபர் மத்தியப் பிரதேசத்தில் கைது 

    பெங்களூரு பிஜியில் வைத்து பெண்ணைக் கொலை செய்த நபர் மத்தியப் பிரதேசத்தில் கைது 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 27, 2024
    10:46 am

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூரு கோரமங்களாவில் உள்ள விடுதிக்குள் வைத்து 24 வயது பீகார் பெண்ணைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மத்தியப் பிரதேசத்தில் இன்று கைது செய்யப்பட்டார்.

    அபிஷேக் என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி, ஜூலை 23 அன்று இரவு கிருத்தி குமாரி என்ற பெண்ணை கொடூரமாகக் கொன்றுவிட்டு மத்தியப் பிரதேசத்திற்குத் தப்பிச் சென்றுவிட்டார்.

    கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்க பெங்களூரில் குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அந்த பெண், தாக்குதல் நடத்தியவரது காதலியின் சக ஊழியராவார்.

    செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் விஆர் லேஅவுட்டில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்குள் நுழைந்த குற்றவாளி, கிருத்தியின் கழுத்தை அறுத்து கொன்றதாக போலீஸார் தெரிவித்தனர்.

    இந்தியா 

    தாக்குதலின் போது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியீடு 

    மூன்றாவது மாடியில் உள்ள அந்த பெண்ணின் அறைக்கு அருகே கிருத்தியின் கழுத்தை அவர் அறுத்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    முதற்கட்ட விசாரணையில் கொலையாளி அந்த பெண்ணுக்கு தெரிந்த நபர் என்பது தெரியவந்துள்ளது.

    தங்கும் விடுதி உரிமையாளரின் அலட்சியமே இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்றும் போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.

    தாக்குதலின் போது பதிவான சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளது.

    பீகாரைச் சேர்ந்த குமாரி, பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

    இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி வீடியோவை வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    கொலை

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    பெங்களூர்

    பெங்களூரில் சோதனையில் உள்ள ஜப்பானிய போக்குவரத்து சிக்னல் தொழில்நுட்பம் ஜப்பான்
    வீடியோ: ஹெல்மெட் அணியாமல் பிடிபட்ட நபர் போலீஸ்காரரை கடித்ததால் பரபரப்பு  இந்தியா
    தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் ஜெயலலிதாவின் நகைகள்: மார்ச் 6ஆம் தேதி, தமிழக உள்துறை செயலாளரிடம் ஒப்படைக்கப்படும் ஜெயலலிதா
    பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் காயம் இந்தியா

    கொலை

    மத்திய பிரதேசம்: நாய் குரைத்ததால் நாயின் உரிமையாளரை கொலை செய்த நபர் கைது மத்திய பிரதேசம்
    க்ரைம் ஸ்டோரி: செங்கல்பட்டில் முன்னாள் காதலியை பிறந்தநாள் அன்று கொலை செய்த திருநம்பி செங்கல்பட்டு
    தகாத உறவு வைத்திருந்த மனைவி - எரித்து கொன்ற கணவன் கைது  கைது
    $5 மில்லியன் மதிப்பிலான அமெரிக்க மாளிகையில் இறந்து கிடந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பம்  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025