Page Loader
ஓரினச் சேர்க்கையாளர் டேட்டிங் செயலியால் பணத்தை இழந்த பெங்களூர் நபர்; இருவர் கைது
ஓரினச் சேர்க்கையாளர் டேட்டிங் செயலியால் பணத்தை இழந்த பெங்களூர் நபர்

ஓரினச் சேர்க்கையாளர் டேட்டிங் செயலியால் பணத்தை இழந்த பெங்களூர் நபர்; இருவர் கைது

எழுதியவர் Sekar Chinnappan
Jul 20, 2025
06:57 pm

செய்தி முன்னோட்டம்

பெங்களூரைச் சேர்ந்த 31 வயது நபர், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான டேட்டிங் செயலியில் அறிமுகம் இல்லாத நபருடன் தொடர்பு கொண்ட பிறகு, தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. வடக்கு பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான பாதிக்கப்பட்டவர், வெறும் 1 ரூபாய்க்கு டேட்டிங் செயலியில் மூன்று நாள் சந்தாவை பெற்று, சூஃபி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபருடன் அரட்டையடிக்கத் தொடங்கியுள்ளார். வீடியோ அழைப்பு மற்றும் தொலைபேசி எண்களைப் பரிமாறிக் கொண்டதைத் தொடர்ந்து, ஜூலை 5 ஆம் தேதி கோவிந்த்புராவில் சந்திக்க முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், அங்கு சென்றவுடன் சூஃபி பாதிக்கப்பட்டவரை வயலிகாவல் லேஅவுட்டில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான கொட்டகைக்கு அழைத்துச் சென்றார்.

சட்டவிரோதம்

சட்டவிரோத நடவடிக்கை

அங்கு, திடீரென வந்த மற்றொரு நபர், பாதிக்கப்பட்டவரின் தொலைபேசியைப் பறித்து பாதிக்கப்பட்டவரை கடுமையாக தாக்கியுள்ளார். அதே நேரத்தில் சூஃபிக்கும் இந்த திட்டத்தில் பங்கிருப்பது தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்டவரின் டிஜிட்டல் வாலட்டை ஓபன் செய்து கொடுக்குமாறு தாக்குதல் நடத்தியவர்கள் வற்புறுத்தி உள்ளனர். அவர்கள் ரூ.1,000 பரிமாற்றம் செய்யுமாறு கட்டாயப்படுத்தியதோடு, மேலும் ரூ.2,260 கேட்டு நண்பர்களைத் தொடர்பு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினர். சமூகத்தில் அசிங்கத்தை எதிர்கொள்ள நேரிடும் என அஞ்சி ஆரம்பத்தில் குற்றத்தைப் புகாரளிக்கத் தயங்கினாலும், பாதிக்கப்பட்டவர் இறுதியில் ஜூலை 9 அன்று காவல்துறையில் புகார் அளித்தார். விசாரணையைத் தொடர்ந்து பெங்களூர் போலீசார் 26 வயதான சுஃபியான் என்ற சுஃபி மற்றும் அவரது 24 வயது கூட்டாளி மத்தீனை கைது செய்தனர்.