NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் இன்று(ஏப்ரல்.,14) நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் துவக்கம் 
    தமிழகத்தில் இன்று(ஏப்ரல்.,14) நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் துவக்கம் 
    இந்தியா

    தமிழகத்தில் இன்று(ஏப்ரல்.,14) நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் துவக்கம் 

    எழுதியவர் Nivetha P
    April 14, 2023 | 04:45 pm 0 நிமிட வாசிப்பு
    தமிழகத்தில் இன்று(ஏப்ரல்.,14) நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் துவக்கம் 
    தமிழகத்தில் இன்று(ஏப்ரல்.,14) நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் துவக்கம்

    தமிழ்நாடு மாநிலத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் இந்த காலகட்டத்தில் மீன்பிடிக்க தடை விதிப்பது வழக்கம். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரையுள்ள கடல் பகுதிகளில் இன்று(ஏப்ரல்.,14) நள்ளிரவு முதல் வரும் ஜூன் 14ம் தேதி வரை 60 நாட்கள் விசைப்படகுகளில் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் மேற்கு கடற்கரை எல்லையான கன்னியாகுமரி முதல் நீரோடி வரை ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை மீன்பிடிக்க தடை விதிக்க படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை காசிமேடு துறைமுகத்தில் ஏற்கனவே கடலுக்குள் சென்ற படகுகளும் திரும்பிய நிலையில் 1000க்கும் மேற்பட்ட விசை படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மீன்வளத்துறை கமிஷனர் கே.எஸ்.பழனிச்சாமி அறிக்கை 

    இந்த மீன்பிடி தடை காலத்தில் பாரம்பரிய மீன்பிடி கலன்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மீன்வளத்துறை கமிஷனர் கே.எஸ்.பழனிச்சாமி கூறுகையில், படகுகள் கரை திரும்ப வேண்டும் என்பது உத்தரவு. எனவே இந்த அறிவிப்புக்கு முன்னர் கடலுக்குள் சென்ற படகுகளும் இன்று இரவு 12 மணிக்குள் கரைக்கு திரும்ப வேண்டும். ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றோருக்கு இது குறித்த தகவல்களை அளித்து கரை திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டும். அதே போல் மீன்பிடி தடைகாலம் துவங்கிய பின்னர் கரை திரும்பும் விசைப்படகுகளின் விவரங்கள் உடனடியாக தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    கடற்கரை

    தமிழ்நாடு

    தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: வானிலை அறிக்கை  புதுச்சேரி
    தமிழ் புத்தாண்டு மற்றும் வார இறுதி விடுமுறை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு  சென்னை
     சென்னையில் போக்குவரத்துக்கு ஒரே பயண டிக்கெட்! சட்டப்பேரவையில் அறிவிப்பு சென்னை
    'தமிழ் நமது பெருமை' - ஈஷா நிறுவனர் சத்குரு புத்தாண்டு வாழ்த்து  புத்தாண்டு

    கடற்கரை

    கோடைவிடுமுறைக்கு நீங்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய, இந்தியாவின் அழகிய 'நீல' கடற்கரைகள்  இந்தியா
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்
    திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு - போலீஸ் மறுப்பு திருச்செந்தூர்
    ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023