NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் இன்று(ஏப்ரல்.,14) நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் துவக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் இன்று(ஏப்ரல்.,14) நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் துவக்கம் 
    தமிழகத்தில் இன்று(ஏப்ரல்.,14) நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் துவக்கம்

    தமிழகத்தில் இன்று(ஏப்ரல்.,14) நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் துவக்கம் 

    எழுதியவர் Nivetha P
    Apr 14, 2023
    04:45 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் இந்த காலகட்டத்தில் மீன்பிடிக்க தடை விதிப்பது வழக்கம்.

    அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரையுள்ள கடல் பகுதிகளில் இன்று(ஏப்ரல்.,14) நள்ளிரவு முதல் வரும் ஜூன் 14ம் தேதி வரை 60 நாட்கள் விசைப்படகுகளில் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதே போல் மேற்கு கடற்கரை எல்லையான கன்னியாகுமரி முதல் நீரோடி வரை ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை மீன்பிடிக்க தடை விதிக்க படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் சென்னை காசிமேடு துறைமுகத்தில் ஏற்கனவே கடலுக்குள் சென்ற படகுகளும் திரும்பிய நிலையில் 1000க்கும் மேற்பட்ட விசை படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தடைகாலம் 

    மீன்வளத்துறை கமிஷனர் கே.எஸ்.பழனிச்சாமி அறிக்கை 

    இந்த மீன்பிடி தடை காலத்தில் பாரம்பரிய மீன்பிடி கலன்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மீன்வளத்துறை கமிஷனர் கே.எஸ்.பழனிச்சாமி கூறுகையில், படகுகள் கரை திரும்ப வேண்டும் என்பது உத்தரவு.

    எனவே இந்த அறிவிப்புக்கு முன்னர் கடலுக்குள் சென்ற படகுகளும் இன்று இரவு 12 மணிக்குள் கரைக்கு திரும்ப வேண்டும்.

    ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றோருக்கு இது குறித்த தகவல்களை அளித்து கரை திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.

    அதே போல் மீன்பிடி தடைகாலம் துவங்கிய பின்னர் கரை திரும்பும் விசைப்படகுகளின் விவரங்கள் உடனடியாக தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

    அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    கடற்கரை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    தமிழக நிதியமைச்சர் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு - பணம் கேட்டு மெசேஜ் அனுப்பியதால் அதிர்ச்சி இன்ஸ்டாகிராம்
    கீழடியில் திடீர் போராட்டத்தில் குதித்த இயக்குனர் பேரரசு; காரணம் தெரியுமா? சிவகங்கை
    சென்னையில் நடக்கவிருந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிக வாபஸ் சென்னை
    சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் 2 புகார்கள் பதிவு சமூக வலைத்தளம்

    கடற்கரை

    கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி கருணாநிதி
    ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம்
    திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு - போலீஸ் மறுப்பு திருச்செந்தூர்
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025