NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைக்கு பெயர் வைக்கப்பட்டது
    அடுத்த செய்திக் கட்டுரை
    அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைக்கு பெயர் வைக்கப்பட்டது

    அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைக்கு பெயர் வைக்கப்பட்டது

    எழுதியவர் Sindhuja SM
    Jan 23, 2024
    06:50 pm

    செய்தி முன்னோட்டம்

    அயோத்தி ராமர் கோவிலில் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைக்கு 'பாலக் ராம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

    ஐந்து வயது பாலகனாக பகவான் ராமர் அருள்புரிவதால் அந்த சிலைக்கு 'பாலக் ராம்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    "ஜனவரி 22 அன்று கும்பாபிஷேகம் செய்யப்பட்ட ராமர் சிலைக்கு 'பாலக் ராம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. அவர் ஐந்து வயது குழந்தையைப் போல காட்சியளிப்பதனால், ராமர் சிலைக்கு 'பாலக் ராம்' என்று பெயர் சூட்டப்பட்டது." என்று கும்பாபிஷேக விழாவுடன் தொடர்புடைய பூசாரி அருண் தீட்சித் கூறியுள்ளார்.

    "அந்த சிலையை முதன்முதலாகப் பார்த்தபோது, ​​நான் சிலிர்த்துப் போனேன். என் முகத்தில் கண்ணீர் வழியத் தொடங்கியது. அப்போது நான் அனுபவித்த உணர்வை என்னால் விளக்க முடியாது," என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

    ட்ஜ்வ்க்க் 

    நேற்று நடந்த பிரம்மாண்ட கும்பாபிஷேக விழா

    அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு, நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    நேற்று நடந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான அரசியல்வாதிகளும் பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

    அயோத்தி ராமர் கோவிலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தலைமை தாங்கினார்.

    அதன் பிறகு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ராமர் இனி ஒரு கூடாரத்தில் வாசம் செய்யமாட்டார் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

    மேலும், "பல தலைமுறை காத்திருப்புக்குப் பிறகு இன்று நம் ராமர் திரும்பிவிட்டார். இந்த இனிய சந்தர்ப்பத்தில், அனைவருக்கும் வாழ்த்துகள்" என்றும் பிரதமர் மோடி கூறியிருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    அயோத்தி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    உத்தரப்பிரதேசம்

    சஹாரா குழுமத்தின் தலைவரான சுப்ரதா ராய் காலமானார்  வணிகம்
    உத்தரப்பிரதேச பயணிகள் விரைவு ரயிலில் தீ விபத்து  விபத்து
    உத்தரப்பிரதேசம் விரைவு ரயிலில் தீ விபத்து - 19 பேர் காயம் ரயில் நிலையம்
    சூரியனை வழிபடும் சத் பூஜை: எங்கு, எவ்வாறு, எதற்காக கொண்டாடப்படுகிறது? பீகார்

    அயோத்தி

    அயோத்தியில் புதிய விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்படுகிறது- தகவல் ராமர் கோயில்
    பிரதமர் மோடியின் வருகையையொட்டி அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு: என்எஸ்ஜி கமாண்டோக்கள், 5,000 போலீசார் குவிப்பு பிரதமர் மோடி
    பிரதமரின் வருகைக்கு தயாராகும் அயோத்தி: ரயில் நிலையம், புதிய விமான நிலையம் இன்று திறக்கப்பட உள்ளன பிரதமர் மோடி
    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் பங்கேற்பதை தவிர்க்க பிரதமர் வேண்டுகோள் பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025