NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆட்டிசம் குறைபாடு: குழந்தையை சேர்க்க மறுத்த பள்ளிக்கு கண்டனம்
    இந்தியா

    ஆட்டிசம் குறைபாடு: குழந்தையை சேர்க்க மறுத்த பள்ளிக்கு கண்டனம்

    ஆட்டிசம் குறைபாடு: குழந்தையை சேர்க்க மறுத்த பள்ளிக்கு கண்டனம்
    எழுதியவர் Sindhuja SM
    Feb 24, 2023, 01:56 pm 0 நிமிட வாசிப்பு
    ஆட்டிசம் குறைபாடு: குழந்தையை சேர்க்க மறுத்த பள்ளிக்கு கண்டனம்
    புனிதரின் பெயரை மட்டும் வைத்திருந்தால் போதாது; புனிதரின் கொளகைகளையும் பின்பற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம்

    ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தையை சேர்த்து கொள்ள மறுத்த பள்ளிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. வேலூரில் உள்ள ஒரு கிருஸ்தவ பள்ளி ஆட்டிசம் குறைபாடு உள்ள தனது குழந்தையை சேர்த்துக்கொள்ள மறுத்ததாக தாய் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். "1870களில் இருந்து 1960ஆம் ஆண்டு வரை வாழ்ந்து மறைந்த புனிதர், தொழு நோயாளிகளுக்கும் பெண்களுக்கும் பல சேவைகளை செய்துள்ளார். அந்த புனிதரின் சேவைகளை பின்பற்றாமல் அவரது பெயரை மட்டும் பயன்படுத்துவது வருத்தம் அளிக்கிறது. குழந்தைக்கு அனுமதி மறுத்த அந்த பள்ளி குழந்தைக்கு மட்டுமல்லாமல் தனது பெயரை தாங்கி இருக்கும் புனிதருக்கும் துரோகம் இழைத்துவிட்டது." என்று இதை விசாரித்த உயர்நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.

    ஆட்டிசம் குறைபாடு என்றால் என்ன?

    இந்த வழக்கு விசாரணை ஆரம்பித்த பிறகு குறிப்பிட்ட அந்த பள்ளி ஆட்டிசம் உள்ள அந்த குழந்தையை சேர்த்துக்கொள்ள முன்வந்தது. இதை சுட்டிக்காட்டிய நீதிபதி அதை முதலிலேயே செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், குழந்தையை எந்த பள்ளியில் சேர்க்க தாய் விரும்புகிறாரோ அங்கேயே சேர்க்கலாம் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆட்டிசம் என்பது ஒரு நரம்பியல் வளர்ச்சிக் கோளாறாகும். இந்த கோளாறு ஸ்பெக்ட்ரத்தில் இருப்பதால் இதன் தீவிரத்தன்மை ஒவ்வொருவருக்கும் வேறுபட்டு இருக்கும். இது சரியாக எதனால் ஏற்படுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. ஆட்டிசம் உள்ளவர்களில் சிலர் பேசுவதற்கும் சமூக செயல்பாடுகளிலும் சிக்கலை எதிர்கொள்வர். குழந்தைகள் முகம் பார்த்து கற்றக்கொள்ளவில்லை என்றாலோ கண்களை பார்த்து பேசவில்லை என்றாலோ மருத்துவரை நாடுவது நல்லது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    மன ஆரோக்கியம்
    சென்னை
    சென்னை உயர் நீதிமன்றம்

    மன ஆரோக்கியம்

    உலக ஸ்கிசோஃப்ரினியா தினம்: இந்த சிக்கலான மனநல நிலை பற்றிய தகவல்!  மன அழுத்தம்
    சர்வதேச உயர் இரத்த அழுத்தம் தினம்: உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள் ஆரோக்கியம்
    மகிழ்ச்சியை உணர வைக்க நம் உடலில் இருக்கும் நான்கு ஹார்மோன்கள் உடற்பயிற்சி
    இறுக்கமான அலுவலக சூழ்நிலையை ஃபன்னாக மாற்ற சில வழிகள் மன அழுத்தம்

    சென்னை

    இரவு நேர வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு ஒளிரும் ஆடை கட்டாயம் காவல்துறை
    சென்னையில் போக்குவரத்து போலீசாருக்கு குடிநீர், குளிர்பானம் வழங்கும் முகாம்  தமிழ்நாடு
    சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பதில் மாற்றம் மு.க ஸ்டாலின்
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு  தமிழ்நாடு

    சென்னை உயர் நீதிமன்றம்

    சிபிஎஸ்சி அங்கீகாரம் பெற்ற பள்ளி என போலி விளம்பரம் - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்  தமிழ்நாடு
    RTE-ல் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவது அரசின் கடமை - சென்னை உயர்நீதிமன்றம்  தமிழ்நாடு
    நீலகிரி கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை திட்டத்திற்கு தடை ஊட்டி
    புகையிலைக்கு அரசு தடை விதிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சென்னை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023