Page Loader
பெங்களூரு விடுதிகளில் காலரா பரவும் அபாயம் அதிகரித்துள்ளதால் பரபரப்பு 

பெங்களூரு விடுதிகளில் காலரா பரவும் அபாயம் அதிகரித்துள்ளதால் பரபரப்பு 

எழுதியவர் Sindhuja SM
Apr 10, 2024
07:04 pm

செய்தி முன்னோட்டம்

பெங்களூரு நகரில் உள்ள பெங்களூரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில்(பிஎம்சிஆர்ஐ) கல்வி கற்கும் மாணவர்களிடையே இரண்டு காலரா வழக்குகள் கண்டறியப்பட்டதை அடுத்து, தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கம் விடுதி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலிக்கான் சிட்டியில் உள்ள தங்கும் விடுதிகளில் நோய் பரவுவதைத் தடுக்க வழிகாட்டுதல்களை உருவாக்கி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு அந்த சங்கம் அறிவுறுத்தியுள்ளது. அந்த சங்கம் வரும் வாரத்தில் இதற்கான அவசரக் கூட்டத்தை நடத்தி விரிவான உத்தரவுகளை வெளியிடும். வழிகாட்டுதல்களின்படி, காலரா பரவுவதைத் தடுக்க, PGகள் குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பெங்களூரு 

நோய் மேலும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் 

சமையலறையில் வழக்கமான சுகாதாரம், RO நிறுவல், சூடான உணவு ஏற்பாடுகள் மற்றும் குடியிருப்பாளர்களின் ஆரோக்கியத்தை தொடர்ந்து சரிபார்த்து கண்காணித்தல் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலரா அறிகுறிகள் தென்படும் நபர்கள் உடனடியாக PG உரிமையாளரிடம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள் குறிப்பாக சமையலறைகளை அடிக்கடி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேதி, நீரிழப்பு உள்ளிட்ட அறிகுறிகள் கொண்ட 47 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த 47 நபர்களில் காலரா வந்த இரண்டு மாணவர்களும் இருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். நோய் மேலும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.