NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பலதார மணத்தை தடை செய்ய நடவடிக்கை: நிபுணர் குழுவை அமைத்தது அசாம்
    பலதார மணத்தை தடை செய்ய நடவடிக்கை: நிபுணர் குழுவை அமைத்தது அசாம்
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    பலதார மணத்தை தடை செய்ய நடவடிக்கை: நிபுணர் குழுவை அமைத்தது அசாம்

    எழுதியவர் Sindhuja SM
    May 12, 2023
    05:28 pm
    பலதார மணத்தை தடை செய்ய நடவடிக்கை: நிபுணர் குழுவை அமைத்தது அசாம்
    பலதார மணத்தை தடைசெய்வது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க 60 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

    அசாம் மாநிலத்தில் பலதார மணத்தை(Polygamy) தடைசெய்வதற்கு சட்டம் இயற்ற முடியுமா என்பதை ஆராய நான்கு பேர் கொண்ட ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். நீதிபதி(ஓய்வு) ரூமி பூகன் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. பலதார மணத்தை தடைசெய்வது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க 60 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. அசாம் மாநில அரசு அமைத்த குழுவில் பின் வரும் நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்: 1. நீதிபதி(ஓய்வு) ரூமி பூகன் 2. அட்வகேட் ஜெனரல் தேபாஜித் சைகியா 3. கூடுதல் அட்வகேட் ஜெனரல் நலின் கோஹ்லி 4. வழக்கறிஞர் நெகிபுர் ஜமான்

    2/2

    முஸ்லீம் தனிநபர் சட்டத்தில்(ஷரியத்) இதற்கு இடம் இருக்குமா?

    இந்த குழு, முஸ்லீம் தனிநபர் சட்டம்(ஷரியத்), 1937 மற்றும் அரசியலமைப்பின் 25வது சட்டப்பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்யும் என்று செவ்வாய்க்கிழமை ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறி இருந்தார். சட்டப்பிரிவு-25, அனைத்து குடிமக்களுக்கும் மனசாட்சியின் சுதந்திரம், மதத்தை கூறுவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும் சுதந்திரம் அளிக்கிறது. திருமணம் மற்றும் பரம்பரை தொடர்பான தனிப்பட்ட சட்டங்கள் மிக முக்கியமானவை என்பதால் அவற்றைத் திருத்தவோ அல்லது ரத்து செய்யவோ முடியாது என்று வழக்கறிஞர்கள் கூறி வருகின்றனர். பலதார மணத்தை தடை செய்யும் திட்டம் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானது அல்ல என்று சர்மா வலியுறுத்தியுள்ளார். எனினும், எதிர்கட்சிகள் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    அசாம்
    இந்தியா

    அசாம்

    அசாம் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையினை துவக்கி வைத்தார் மோடி  பிரதமர் மோடி
    14,300 கோடி மதிப்பிலான திட்டங்களை அசாமில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி  இந்தியா
    போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்தியா
    அசாம்: போக்ஸோ சட்டத்தின் கீழ் குழந்தை திருமண வழக்குகள் வருமா இந்தியா

    இந்தியா

    'தி கேரளா ஸ்டோரி' விவகாரம்: தமிழ்நாடு, மேற்கு வங்க அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்  மேற்கு வங்காளம்
    வீடியோ: திருநங்கைகளுக்கு ஆதரவாக ஸ்டார்பக்ஸ் வெளியிட்ட விளம்பரத்தால் பரபரப்பு  திருநர் சமூகம்
    இந்தியாவில் ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்.. என்ன திட்டம்? ஹூண்டாய்
    மிகக் கடுமையான புயலாக வலுப்பெற இருக்கும் மோக்கா புயல்: மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை மேற்கு வங்காளம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023