
டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
செய்தி முன்னோட்டம்
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதல்வர் பதவியை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) ராஜினாமா செய்து, அதிஷியிடம் ஆட்சியை ஒப்படைத்தார்.
மதுபானக் கொள்கை வழக்கில் கெஜ்ரிவால் ஜாமீனில் வெளிவந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் தனது ராஜினாமா கடிதத்தை லெப்டினன்ட் கவர்னர் விகே சக்சேனாவிடம் சமர்ப்பித்தார்.
இந்த வழக்கில் ஏற்கனவே ஜாமீனில் வெளியில் இருக்கும் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் அதிஷியுடன் சென்று அவர் கடிதத்தை கொடுத்தார்.
இதையடுத்து புதிய முதலமைச்சராக பொறுப்பேற்க உரிமை கோரியுள்ள அதிஷி, டெல்லி மக்களுக்காக உழைத்து, வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.
ஒரே முதல்வர்
டெல்லிக்கு ஒரே முதல்வர் எனக் கூறிய அதிஷி
டெல்லிக்கு ஒரே ஒரு முதல்வர், அது கெஜ்ரிவால் மட்டுமே என்று அதிஷி அறிவித்தார். அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) கெஜ்ரிவாலுக்கு எதிராக போலி குற்றச்சாட்டுகளுடன் சதி செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.
முன்னதாக, ஆம் ஆத்மி தனது சட்டமன்றக் கட்சியின் தலைவராக அதிஷியை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்ததை அறிவித்தது.
பிப்ரவரியில் அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரை கட்சியை வழிநடத்த அவரை நிலைநிறுத்தியது. இருப்பினும் கெஜ்ரிவால் அடுத்த மாதம் விரைவில் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சிறையில் இருந்து வெளிவந்த பிறகு, கெஜ்ரிவால் சட்ட அமைப்பில் தனக்கு நீதி கிடைத்தாலும், இப்போது டெல்லி மக்களிடம் நீதி கேட்க விரும்புகிறேன் என வலியுறுத்தினார்.
மக்கள் மன்றத்தில் வென்று மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பேன் என நம்பிக்கை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
கெஜ்ரிவால் ராஜினாமா; ஆட்சியமைக்க உரிமை கோரினார் அதிஷி
Kejriwal resigns as Delhi CM, Atishi stakes claim to form government
— ANI Digital (@ani_digital) September 17, 2024
Read @ANI Story | https://t.co/hpClT9lfxu#ArvindKejriwal #Atishi #DelhiChiefMinister #AAP pic.twitter.com/Inxrhusx9U