NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சர்க்கரை அளவு அதிகரித்ததையடுத்து திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டது
    அடுத்த செய்திக் கட்டுரை
    சர்க்கரை அளவு அதிகரித்ததையடுத்து திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டது
    சிறையில் அடைக்கப்பட்ட முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இதுவே முதல் இன்சுலின் டோஸ்

    சர்க்கரை அளவு அதிகரித்ததையடுத்து திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டது

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 23, 2024
    09:38 am

    செய்தி முன்னோட்டம்

    நீரிழிவு நோயாளியான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு 320 ஆக உயர்ந்ததையடுத்து, திகார் சிறையில் இன்சுலின் கொடுக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

    இன்சுலின் மறுக்கப்பட்ட சர்ச்சைக்கு பிறகும், அவரது உடல்நிலை குறித்து சிறை நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை மீது அரவிந்த் கெஜ்ரிவால் ஏமாற்றம் தெரிவித்த ஒரு நாள் கழித்தும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குநரகத்தால் கடந்த மார்ச் 21 அன்று கைது செய்யப்பட்ட பின்னர், சிறையில் அடைக்கப்பட்ட முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இதுவே முதல் இன்சுலின் டோஸ் என்று இந்தியா டுடே தெரிவிக்கிறது.

    embed

    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டது

    Arvind Kejriwal was given insulin in Tihar Jail: Sources#ArvindKejriwal #TiharJail #insulin (Pooja Shali) pic.twitter.com/m2krUUIrxv— IndiaToday (@IndiaToday) April 23, 2024

    இன்சுலின் மறுக்கப்பட்டது

    இன்சுலின் மறுக்கப்படுவதாகவும், மெதுவான மரணத்தை எதிர்கொள்வதாகவும் ஆம் ஆத்மி கட்சி குற்றசாட்டு

    மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால், டைப்-2 நீரிழிவு நோயாளி.

    கடந்த வாரம், ஆம் ஆத்மி கட்சி,"பலமுறை கோரிக்கை விடுத்தும் அவருக்கு இன்சுலின் வழங்கப்படவில்லை" என்று குற்றம் சாட்டியது. இதுகுறித்து மதிப்பீடு செய்ய சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட குழுவை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    கெஜ்ரிவால், சிறையில் சுமார் 4.5 கிலோ எடையை குறைந்ததாகவும், அவரது இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்ற இறக்கங்களை அனுபவித்து வருகிறார் எனவும் AAP கூறியது.

    சிறைத்துறை அதிகாரிகள் அளித்த அறிக்கையில், டாக்டர்கள் முதல்வருக்கு இன்சுலின் பரிந்துரைக்கவில்லை என்று கூறினர்.

    அவர்களின் கூற்றுப்படி, கெஜ்ரிவாலின் இரத்த சர்க்கரை அளவு இன்சுலின் போடுமளவுக்கு அபாயகரமானதாக இல்லை எனவும், எனினும் அவருக்கு வாய்வழி நீரிழிவு எதிர்ப்பு மருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அரவிந்த் கெஜ்ரிவால்
    சிறை
    டெல்லி
    ஆம் ஆத்மி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 6வது முறையாக சம்மன் டெல்லி
    ஜம்மு காஷ்மீரில் தனியாகப் போட்டியிட ஃபரூக் அப்துல்லாவின் கட்சி முடிவு  ஜம்மு காஷ்மீர்
    மதுபான கொள்கை வழக்கு: டெல்லி நீதிமன்றத்திற்கு முன் ஆன்லைனில் ஆஜரானார் அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லி
    6வது சம்மனையும் புறக்கணித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்: நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருக்க போவதாக தகவல்  டெல்லி

    சிறை

    பாரதியாரின் 103வது நினைவுநாள் - கடலூர் மத்திய சிறையிலுள்ள சிலைக்கு போலீசார் மரியாதை கடலூர்
    இன்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு - ஓர் அலசல்  தமிழ்நாடு
    இம்ரான் கான் சிறைக்குள் விஷம் வைத்து கொல்லப்படலாம் - வழக்கறிஞர் மனு  பாகிஸ்தான்
    பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து யூடியூபர்

    டெல்லி

    பிஆர்எஸ் தலைவர் கே கவிதாவை மார்ச் 23 வரை காவலில் வைக்க அனுமதி  தெலுங்கானா
    மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9வது சம்மன் அனுப்பியது அமலாக்க இயக்குநரகம்  ஆம் ஆத்மி
    டெல்லி ஜல் போர்டு வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தின் சம்மனை புறக்கணித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்  ஆம் ஆத்மி
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து பிஆர்எஸ் தலைவர் கே கவிதா பணமோசடி செய்ததாக விசாரணையில் தகவல்  அரவிந்த் கெஜ்ரிவால்

    ஆம் ஆத்மி

    டெல்லி அவசர சட்டம் தொடர்பான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு  தாக்கல் செய்தது டெல்லி
    சட்டமாகியது டெல்லி அவசர சட்ட மசோதா: ஒப்புதல் அளித்தார் குடியரசு தலைவர் டெல்லி
    2024 மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதியிலும் போட்டியிட காங்கிரஸ் முடிவு மக்களவை
    ஆம் ஆத்மி தலைவர் ராகவ் சாதாவை கரம் பிடித்தார் 'பாலிவுட்' நடிகை பரினீதி சோப்ரா பாலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025