NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உயர்நீதிமன்றத்தில் மனு: உடனடியாக விடுதலை செய்ய கோரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உயர்நீதிமன்றத்தில் மனு: உடனடியாக விடுதலை செய்ய கோரிக்கை 

    கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உயர்நீதிமன்றத்தில் மனு: உடனடியாக விடுதலை செய்ய கோரிக்கை 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 23, 2024
    07:04 pm

    செய்தி முன்னோட்டம்

    அமலாக்க இயக்குநரகத்தின் காவலில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தன்னைக் காவலில் வைத்திருப்பதை எதிர்த்து இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    மார்ச் 24, ஞாயிற்றுக்கிழமைக்குள் அந்த மனுவை உடனடியாக விசாரிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த வியாழக்கிழமை மத்திய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சி(ஏஏபி) தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை, 6 நாள் அமலாக்க இயக்குனரக காவலில் வைக்க நேற்று டெல்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி அளித்தது.

    இந்நிலையில், அவர் அதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    டெல்லி 

     உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வாபஸ் 

    உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனக்கு எதிரான கைது மற்றும் ரிமாண்ட் உத்தரவு இரண்டும் சட்டவிரோதமானது என்றும், தன்னை உடனடியாக காவலில் இருந்து விடுவிக்க உரிமை உண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.

    அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே அவர் ஒரு மனு அளித்திருந்தார்.

    ஆனால், முதலில், ரிமாண்ட் உத்தரவை எதிர்த்து அவர் போரிட விரும்பியதால், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு திரும்பபெறப்பட்டது.

    ரிமாண்ட் விண்ணப்ப விசாரணையின் போது, ​​டெல்லி மதுபான கொள்கை ஊழலின் "முக்கிய சதிகாரர் மற்றும் மன்னன்" கெஜ்ரிவால் தான் என்று அமலாக்க இயக்குனரகம், நீதிமன்றத்தில் வாதிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவால்

    சமீபத்திய

    JNUவைத் தொடர்ந்து ஜாமியா மிலியா பல்கலைக் கழகமும் துருக்கியுடனான தொடர்பை முறித்துக் கொள்வதாக அறிவிப்பு பல்கலைக்கழகம்
    இந்திய சிஎன்ஜி வாகன சந்தையில் அறிமுகமாகும் சிட்ரோயன்; சி3  ஹேட்ச்பேக்கிற்கான சிஎன்ஜி கிட் வெளியீடு சிட்ரோயன்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25க்கான பரிசுத் தொகை அறிவிப்பு; 3வது இடம் பிடித்த இந்தியாவிற்கு எவ்வளவு? டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    மே 17ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மண்டல வானிலை மையம் கனமழை

    டெல்லி

    விவசாயிகள் போராட்டம்: டெல்லி-குருகிராம் எல்லையில் போக்குவரத்து நெரிசல் விவசாயிகள்
    6 மாதத்திற்கு தேவையான பெட்டி படுக்கையுடன் போராட்டத்தில் குதித்த விவசாயிகள்: உளவுத்துறை கூறுவது என்ன? பஞ்சாப்
    தடுப்புகளை உடைத்து ஹரியானா-பஞ்சாப் எல்லையை கடக்க முயன்ற விவசாயிகள்: கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு  பஞ்சாப்
    'MSP குழுவுக்கான உறுப்பினர்களை விவசாய அமைப்புகள் ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை': மத்திய அரசு குற்றச்சாட்டு  மத்திய அரசு

    அரவிந்த் கெஜ்ரிவால்

    மத்திய அரசு Vs எதிர்க்கட்சிகள்: மம்தா பானர்ஜி-அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு இந்தியா
    மம்தா பானர்ஜியை தொடர்ந்து உத்தவ் தாக்கரேவின் ஆதரவையும் பெற்றார் கெஜ்ரிவால்  இந்தியா
    அவசர சட்ட விவகாரம்: மு.க.ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா
    டெல்லி அவசர சட்டத்திற்கு எதிராக காங்கிரஸின் ஆதரவை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025