NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா-கொடியேற்றத்துடன் துவக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா-கொடியேற்றத்துடன் துவக்கம்
    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம்

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா-கொடியேற்றத்துடன் துவக்கம்

    எழுதியவர் Nivetha P
    Dec 28, 2022
    01:04 pm

    செய்தி முன்னோட்டம்

    கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, கோயில் கருவறை முன்பு உள்ள கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் நடராஜ குஞ்சுதபாத தீட்சிதர் கொடியேற்றி இத்திருவிழாவை துவக்கி வைத்தார்.

    கொடி மரத்திற்கு நூறுக்கும் மேற்பட்ட பொது தீட்சிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க, மேளத் தாளத்துடன் இந்த கொடியேற்றும் நிகழ்வு அரங்கேறியது.

    இதனையடுத்து, 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் சுவாமி வீதி உலா சிறப்புமிக்க பல்வேறு பல்லக்குகளில் நடைபெறும்.

    ஜனவரி 7ம் தேதியோடு நிறைவடையும் திருவிழா

    500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு

    இதனையடுத்து ஜனவரி 5ம் தேதி தேர்த்திருவிழா நடைபெறவுள்ளதோடு, அன்றிரவு 8 மணிக்கு முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறவுள்ளது.

    6ம் தேதி சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மாகாபிஷேகம் நடைபெறும். அதன் பின்னர் சொர்ண அபிஷேகமும் நடைபெறவுள்ளது.

    இதனை தொடர்ந்து 7ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது.

    விழா ஏற்பாடுகளை தீட்சிதர்கள் சிறப்பாக செய்து வரும் நிலையில், சிதம்பரம் நகராட்சி சார்பில் குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், இந்த திருவிழா நடந்து முடியும் வரை பாதுகாப்பு கருதி, போலீஸ் சூப்பரண்டு சக்தி கணேசன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    எழுத்தாளர் சாரு நிவேதிதாவிற்கு 2022ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது சாரு நிவேதிதா
    2023ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து வெளியாகிய பிரத்யேகமான தகவல்கள் திமுக
    தமிழ் மொழி வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு! இந்தியா
    பிச்சை எடுத்த 1 லட்ச ரூபாயை நன்கொடையாக கொடுத்த பாட்டி! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025