NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா-கொடியேற்றத்துடன் துவக்கம்
    இந்தியா

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா-கொடியேற்றத்துடன் துவக்கம்

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா-கொடியேற்றத்துடன் துவக்கம்
    எழுதியவர் Nivetha P
    Dec 28, 2022, 01:04 pm 0 நிமிட வாசிப்பு
    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா-கொடியேற்றத்துடன் துவக்கம்
    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம்

    கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, கோயில் கருவறை முன்பு உள்ள கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் நடராஜ குஞ்சுதபாத தீட்சிதர் கொடியேற்றி இத்திருவிழாவை துவக்கி வைத்தார். கொடி மரத்திற்கு நூறுக்கும் மேற்பட்ட பொது தீட்சிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க, மேளத் தாளத்துடன் இந்த கொடியேற்றும் நிகழ்வு அரங்கேறியது. இதனையடுத்து, 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் சுவாமி வீதி உலா சிறப்புமிக்க பல்வேறு பல்லக்குகளில் நடைபெறும்.

    500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு

    இதனையடுத்து ஜனவரி 5ம் தேதி தேர்த்திருவிழா நடைபெறவுள்ளதோடு, அன்றிரவு 8 மணிக்கு முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறவுள்ளது. 6ம் தேதி சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மாகாபிஷேகம் நடைபெறும். அதன் பின்னர் சொர்ண அபிஷேகமும் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து 7ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை தீட்சிதர்கள் சிறப்பாக செய்து வரும் நிலையில், சிதம்பரம் நகராட்சி சார்பில் குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த திருவிழா நடந்து முடியும் வரை பாதுகாப்பு கருதி, போலீஸ் சூப்பரண்டு சக்தி கணேசன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    சிதம்பரம் கோவில்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் 2 ட்ரைலர், வெளியானது திரைப்பட அறிவிப்பு
    ஆண்டுக்கு ரூ.5000 முதலீட்டில் 66,000 லாபம்! சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள் சேமிப்பு திட்டங்கள்
    ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி திணிப்பு - தமிழக முதல்வர் எச்சரிக்கை இந்தியா
    இன்ஸ்ட்டாகிராமில் பிரபலமான 9 வயது சிறுமியின் விபரீத முடிவு இன்ஸ்டாகிராம்

    சிதம்பரம் கோவில்

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் ஆர்.என்.ரவி

    தமிழ்நாடு

    பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி இந்தியா
    இந்தி திணிப்பு: தயிர் பாக்கெட்டுகளில் 'தாஹி' என்ற பெயரை போட அறிவுறுத்தல் கர்நாடகா
    சென்னையில் 1 கோடி மதிப்பிலான நகைகளை பறித்து சென்ற வழக்கு - உண்மை அம்பலமானது சென்னை
    தமிழக மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023