NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரப்பிரேதேசத்தில் கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய வீணை
    இந்தியா

    உத்தரப்பிரேதேசத்தில் கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய வீணை

    உத்தரப்பிரேதேசத்தில் கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய வீணை
    எழுதியவர் Nivetha P
    Dec 26, 2022, 02:04 am 1 நிமிட வாசிப்பு
    உத்தரப்பிரேதேசத்தில் கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய வீணை
    வாகனக் கழிவுகளால் உருவாக்கப்பட்ட 'ருத்ர வீணை'

    உத்தரப்பிரதேசம், போபால் மாவட்டத்தில் உள்ள ஒரு கைவினை கலைஞர் குழு வாகனக் கழிவுகளை கொண்டு உலகிலேயே மிக பெரிய வீணையை உருவாக்கியுள்ளார்கள். 15 கலைஞர்கள் கொண்ட குழு இந்த 'ருத்ர வீணை' உருவாக்கும் பணியில் 6 மாதங்களாக ஈடுபட்டு வந்துள்ளார்கள். 28 அடி நீளமும், 10 அடி அகலமும், 12 அடி உயரமும் கொண்டுள்ள இந்த ருத்ர வீணை முழுக்க முழுக்க கம்பிகள், சங்கிலிகள், கியர்கள் போன்ற வாகன கழிவுகளை கொண்டே உருவாகியுள்ளது. 5 டன் எடை கொண்ட இந்த வீணையை உருவாக்க ரூ.10 லட்சம் வரை செலவாகியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும், உலகிலேயே இது தான் மிக பெரிய 'ருத்ர வீணை' என்று இதனை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்திய கலாச்சாரம் குறித்து அறிந்துக்கொள்ள ஓர் முயற்சி

    இந்த வீணையை உருவாக்கிய கலைஞர்களுள் ஒருவரான பவன் தேஷ்பாண்டே ஓர் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "இந்த வீணையானது 'கபாட் சே கஞ்சான்' என்ற தீம் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இளையத்தலைமுறையினர் இந்திய கலாசாரம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால், இந்திய கருப்பொருளில் வேலை செய்ய நினைத்து தான் தனித்துவமான 'ருத்ர வீணையை' நாங்கள் உருவாக்கியுள்ளோம்" என்று கூறியுள்ளார். இந்த வீணை பொதுமக்கள் பார்வைக்காக நகரின் முக்கிய இடத்தில் ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டு பார்வைக்கு வைக்கப்படும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    வைரல் செய்தி

    சமீபத்திய

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    அரியலூர் மாவட்டத்தில் சிறுவர்கள் ஓட்டிய 25 வாகனங்கள் பறிமுதல் மாவட்ட செய்திகள்
    19 திரையரங்குகளில் வெளியீடு: சிங்கப்பூரில் சாதனை படைத்த சிம்புவின் 'பத்து தல' திரைப்படம் திரையரங்குகள்
    காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் தேறி வருவதாக அறிக்கை காங்கிரஸ்

    இந்தியா

    ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி காங்கிரஸ்
    மளமளவென உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி உலக செய்திகள்
    பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம் பாகிஸ்தான்

    வைரல் செய்தி

    'Iron Man' திரைப்பட நாயகன் ராபர்ட் டௌனி ஜூனியர் சாப்பிட்ட சுவிங்கம் ஏலம்! பொழுதுபோக்கு
    சினிமாவில் இருக்கும் ஊதிய வேறுபாடு குறித்து தெரிவித்த சமந்தா சமந்தா ரூத் பிரபு
    கடலூரில் ஆன்லைனில் வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்திய பரபரப்பு சம்பவம் கடலூர்
    சமந்தாவின் மாஜி கணவர், பொன்னியின் செல்வன் நடிகையுடன் காதலா? வைரலாகும் புகைப்படங்கள் சமந்தா ரூத் பிரபு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023