NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராணுவ வீரர் மனைவி தாக்கப்பட்ட விவகாரம் - திருவண்ணாமலை எஸ்.பி. கார்த்திகேயன் விளக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராணுவ வீரர் மனைவி தாக்கப்பட்ட விவகாரம் - திருவண்ணாமலை எஸ்.பி. கார்த்திகேயன் விளக்கம் 
    ராணுவ வீரர் மனைவி தாக்கப்பட்ட விவகாரம் - திருவண்ணாமலை எஸ்.பி. கார்த்திகேயன் விளக்கம்

    ராணுவ வீரர் மனைவி தாக்கப்பட்ட விவகாரம் - திருவண்ணாமலை எஸ்.பி. கார்த்திகேயன் விளக்கம் 

    எழுதியவர் Nivetha P
    Jun 12, 2023
    05:55 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தில் ஹவில்தாரராக பணிபுரிபவர் பிரபாகரன்.

    இவரது மனைவி கீர்த்தி, திருவண்ணாமலை கலசப்பாக்கம் படவேடு ரேணுகாம்பாள் கோயில் அருகேயுள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் பேன்சி கடை ஒன்றினை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் பிரபாகரன் அண்மையில் ஒரு வீடியோ பதிவினை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார்.

    அதில் அவர், தனது மனைவி நடத்திவரும் கடையில் சில மர்மநபர்கள் நுழைந்து, நிலப்பிரச்சனை காரணமாக கடையினை அடித்து நொறுக்கியதோடு, 120க்கும் மேற்பட்டவர்கள் தனது மனைவியினை அரைநிர்வாணமாக்கி தாக்கியதாக கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.

    இந்த வீடியோ வெளியாகி வைரலான நிலையில், கீர்த்தி அளித்த புகாரின்பேரில், தாக்குதலில் ஈடுபட்ட ஹரிஹரன் என்னும் ஹரிதாஸ் மற்றும் செல்வராஜ் என்னும் 2 நபரை கைது செய்தனர் என தெரிவிக்கப்பட்டது.

    விளக்கம் 

    ராணுவ வீரருக்கு தவறான தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் 

    இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.கார்த்திகேயன் மறுப்புத்தெரிவித்து ஓர் விளக்கத்தினை அளித்துள்ளார்.

    அதில் அவர், "ராணுவ வீரர் மனைவி நடத்திவந்த கடை குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவரிடம் வாடகைக்கு எடுத்துள்ளனர்.

    கடை சம்பந்தமாக ராமுக்கும், கீர்த்திக்கும் பிரச்சனை இருந்துள்ளது.

    இதனால் கடையினை காலிசெய்யுமாறு நடந்த தகராறில் கீர்த்தியின் சகோதரர் ஜீவா ராமுவை கத்தியால் குத்தியுள்ளார்.

    இதுகுறித்து இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது" என்று கூறியுள்ளார்.

    மேலும், "ராணுவ வீரர் பிரபாகரனுக்கு தவறான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

    அவரது மனைவியை யாரும் மானபங்கப்படுத்தவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதில் குற்றம்ச்செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனையளிக்கப்படும்.

    தயவுசெய்து யாரும் வதந்திகளை நம்பி பரப்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்" என்று விளக்கமளித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    திருவண்ணாமலை

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    ஜம்மு காஷ்மீர்

    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல் பாரத் ஜோடோ யாத்ரா
    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் தீவிரவாதிகள்
    ஜோஷிமத் போலவே ஜம்மு காஷ்மீரில் ஒரு புதையும் கிராமம் இந்தியா

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாட்டம் பர்வதமலை
    பர்வதமலையில் சாலை மற்றும் ரோப் கார் வசதி அமைக்க திட்டம் - ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு பர்வதமலை
    பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு
    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025