NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு காஷ்மீரின் தோடாவில் என்கவுன்டர் நடவடிக்கை: 4 இராணுவ வீரர்கள் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜம்மு காஷ்மீரின் தோடாவில் என்கவுன்டர் நடவடிக்கை: 4 இராணுவ வீரர்கள் பலி 

    ஜம்மு காஷ்மீரின் தோடாவில் என்கவுன்டர் நடவடிக்கை: 4 இராணுவ வீரர்கள் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 16, 2024
    10:11 am

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நேற்று அதிக ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் ஒரு அதிகாரி உட்பட 4 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டனர்.

    இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமதுவின் (JeM) நிழல் குழுவான 'காஷ்மீர் புலிகள்' பொறுப்பேற்றுள்ளது.

    ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல்துறையின் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மற்றும் சிறப்பு நடவடிக்கைக் குழுவின்(SOG) துருப்புக்கள் நேற்று மாலை தோடா நகரத்திலிருந்து 55 கிமீ தொலைவில் உள்ள தேசா வனப் பகுதியில் இருக்கும் தாரி கோடே உரார்பாகியில் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியபோது என்கவுண்டர் வெடித்தது.

    ஜம்மு காஷ்மீர் 

    என்கவுன்டரில் ஐந்து வீரர்கள் படுகாயம் 

    ஒரு சிறிய துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, பயங்கரவாதிகள் தப்பிக்க முயன்றனர்.

    ஆனால் ஒரு அதிகாரி தலைமையிலான துருப்புக்கள் சவாலான நிலப்பரப்பு மற்றும் அடர்த்தியான மரங்கள் இருந்தபோதிலும் பயங்கரவாதிகளை துரத்தினர்.

    அதனால், கிட்டத்தட்ட இரவு 9 மணியளவில் காட்டில் மற்றொரு துப்பாக்கிச் சண்டை வெடித்தது.

    என்கவுன்டரில் ஐந்து வீரர்கள் படுகாயமடைந்தனர். அதன் பிறகு, படுகாயமடைந்தவர்களில் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    முஜாஹிதீன்களை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டபோது மோதல் மற்றும் துப்பாக்கிச் சூடு வெடித்ததாக காஷ்மீர் டைகர்ஸ் என்ற பயங்கரவாத அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    ஜூலை 9-ம் தேதி கதுவாவில் ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் 'காஷ்மீர் புலிகள்' அமைப்புதான் பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    ஜம்மு காஷ்மீர்

    'காசாவுக்கு நேர்ந்த கதிதான் காஷ்மீருக்கும்': பூஞ்ச் ​​தாக்குதலை அடுத்து ஃபரூக் அப்துல்லா சீற்றம்  இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் ராஜ்நாத் சிங்: பூஞ்ச் தாக்குதலை அடுத்து ராணுவ தளபதிகளுடன் பாதுகாப்பு ஆய்வு கூட்டம் பாதுகாப்பு துறை
    "தீவிரவாதிகளை எதிர்த்து போரிடுங்கள், நாட்டு மக்களை காயப்படுத்த வேண்டாம்"- காஷ்மீரில் ராஜநாத் சிங் ராஜ்நாத் சிங்
    பெரும் விபத்தில் சிக்கியது ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி சென்ற கார்  மெகபூபா முப்தி

    இந்தியா

    ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது மத்திய பட்ஜெட் 2024 மத்திய அரசு
    இந்தியாவிலேயே அதிவேகமாக தயாரிக்கப்பட்ட 'ஜோராவார்' என்ற பீரங்கி அறிமுகம் இந்திய ராணுவம்
    2026இல் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது ஹூண்டாயின் இன்ஸ்டர் EV ஹூண்டாய்
    சட்டவிரோதமாக கட்டப்பட்ட 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததால் குஜராத்தில் 7 பேர் பலி  குஜராத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025