NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராணுவ வீரர் மனைவி தாக்கப்பட்டதாக கூறிய விவகாரம் - ராணுவத்திற்கு அறிக்கை அனுப்பிய காவல்துறை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராணுவ வீரர் மனைவி தாக்கப்பட்டதாக கூறிய விவகாரம் - ராணுவத்திற்கு அறிக்கை அனுப்பிய காவல்துறை 
    ராணுவ வீரர் மனைவி தாக்கப்பட்டதாக கூறிய விவகாரம் - ராணுவத்திற்கு அறிக்கை அனுப்பிய காவல்துறை

    ராணுவ வீரர் மனைவி தாக்கப்பட்டதாக கூறிய விவகாரம் - ராணுவத்திற்கு அறிக்கை அனுப்பிய காவல்துறை 

    எழுதியவர் Nivetha P
    Jun 21, 2023
    11:06 am

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தில் அவில்தாரராக பணிபுரிந்து வருபவர் பிரபாகரன்.

    இவரது மனைவி கீர்த்தி திருவண்ணாமலை கலசப்பாக்கம் படவேடு ரேணுகாம்பாள் கோயில் அருகேயுள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் பேன்சி கடை ஒன்றினை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் பிரபாகரன் அண்மையில் ஒரு வீடியோ பதிவினை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார்.

    அதில் அவர், தனது மனைவி நடத்தி வரும் கடையில் சில மர்ம நபர்கள் நுழைந்து நிலப்பிரச்சனை காரணமாக கடையினை அடித்து நொறுக்கியதோடு, 120க்கும் மேற்பட்டவர்கள் தனது மனைவியினை அரைநிர்வாணமாக்கி தாக்கியதாக கண்ணீர் விட்டு கதறியிருந்தார்.

    இந்த வீடியோப்பதிவு வைரலான நிலையில், திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.கார்த்திகேயன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

    விசாரணை துவங்கப்பட்ட நிலையில் பிரபாகரன் மனைவி தாக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.

    அறிக்கை 

    ராணுவ வீரர், மனைவி உள்ளிட்ட 4 பேர் தலைமறைவு 

    இதனிடையே பிரபாகரன் தனது உறவினரோடு பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பகீர் தகவல்களை வெளியே கொண்டுவந்தது.

    அதில் அவர், "நடந்ததை மிகைப்படுத்தி கூற வேண்டும்" என்று பேசியிருந்தார்.

    இந்நிலையில், தற்போது திருவண்ணாமலை காவல்துறை ராணுவத்திற்கு ஓர் விரிவான அறிக்கையினை அனுப்பி வைத்துள்ளது.

    அதில் ராணுவ வீரர் மனைவி தாக்கப்பட்டதாக அளித்த புகாரின்பேரில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் ராணுவ வீரர் பிரபாகரனுடன் சதித்திட்டம் தீட்டிய அவரது உறவினர் வினோத் ஏற்கனேவே கைது செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    மேலும், ஆடியோ பதிவு வெளியாகி உண்மைகள் தெரியவந்த நிலையில், ராணுவ வீரர், அவரது மனைவி உள்ளிட்ட 4 பேர் தலைமறைவாகியுள்ளனர் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    திருவண்ணாமலை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஜம்மு காஷ்மீர்

    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல் ராகுல் காந்தி
    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் தீவிரவாதிகள்
    ஜோஷிமத் போலவே ஜம்மு காஷ்மீரில் ஒரு புதையும் கிராமம் இந்தியா

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாட்டம் பர்வதமலை
    பர்வதமலையில் சாலை மற்றும் ரோப் கார் வசதி அமைக்க திட்டம் - ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு பர்வதமலை
    பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு
    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் காவல்துறை

    காவல்துறை

     கர்நாடகாவில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை உடைத்த கிராம மக்கள்  கர்நாடகா
    பற்களை பிடுங்கிய விவகாரம் - சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 24 பேர் இடமாற்றம்  காவல்துறை
    கடற்கரை பகுதியில் இரவுநேரத்தில் 12 மணிவரை இளைப்பாற அனுமதி வேண்டும் என கோரிக்கை கடற்கரை
    ஈரோட்டில் கல்லூரி மாணவி கடத்தல் - லவ்ஜிகாத் விவகாரம் என சந்தேகம்  ஈரோடு

    காவல்துறை

    சிபிஐயின் புதிய இயக்குநர்: யாரிந்த பிரவீன் சூட் இந்தியா
    சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபமாக உயிரிழந்த சென்னை மாணவி  சென்னை
    நாகர்கோவில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை-மிளகாய் பொடி தூவி தப்பிச்சென்ற மர்ம நபர்கள்  நாகர்கோவில்
    போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தப்படியே அபராதம்  போக்குவரத்து காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025