NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - பணம் பறிமுதல்
    இந்தியா

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - பணம் பறிமுதல்

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - பணம் பறிமுதல்
    எழுதியவர் Nivetha P
    Mar 15, 2023, 06:49 pm 0 நிமிட வாசிப்பு
    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - பணம் பறிமுதல்
    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - பணம் பறிமுதல்

    லஞ்ச புகார் எதிரொலியாக தற்போது தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். திருவண்ணாமலை, நாகை, பொன்னேரி, தேனி, கடலூர், அரக்கோணம் ஆகிய இடங்களில் உள்ள தாலுக்கா அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதே போல் பொன்னேரி, தேனி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். நாகை வாட்டாட்சியர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. சேலம் ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் அறைகளை பூட்டிய அதிகாரிகள், உள்ளே யாரையும் அனுமதிக்காமல் சோதனை செய்து வருகிறார்கள்.

    புதுப்பாளையம் இயங்கும் 2 கட்டுமான வரப்பட அனுமதி பெறும் அலுவலகத்திலும் சோதனை

    தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ. அலுவலகம் ஆகிய 2 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். கடலூர் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு போலீசார் ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் கதவுகளை மூடி சோதனை நடத்தப்பட்டது. புதுப்பாளையம் பகுதியில் இயங்கும் 2 கட்டுமான வரப்பட அனுமதி பெறும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து நீலகிரி மாவட்டம் குன்னூர் பத்திர பதிவு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் போது சிக்கிய பணம் மற்றும் பொருட்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு
    காவல்துறை
    காவல்துறை

    தமிழ்நாடு

    தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  ஆர்ப்பாட்டம்
    வருமான வரிசோதனை விவகாரம் - 2 திமுக கவுன்சிலர்கள் உள்பட 10 பேர் கைது  திமுக
    தமிழ் ஆதீன குருமார்களுக்கு அமோக கவனிப்பு: மத்திய அரசு என்னென்ன செய்தது பாஜக
    '10ஆம் வகுப்பில் தோல்வியடைந்தேன்': திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் ஊக்கமளிக்கும் கதை  திருப்பூர்

    காவல்துறை

    டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் கைது - முதல்வர் ஸ்டாலின் கண்டனம் மு.க ஸ்டாலின்
    மூன்று மத குருமார்கள் முன்னிலையில் மகளுக்கு திருமணம்: வைரலாகும் டிஎஸ்பி வீட்டு திருமண பத்திரிகை!  காவல்துறை
    பிரபலமான அவினாசி லிங்கேஸ்வரர் கோயிலில் திருட்டு முயற்சி  திருப்பூர்
    தமிழ்நாடு காவல் துறை மோப்ப நாய் பிரிவில், பெண் காவலர்கள் நியமனம்!  தமிழ்நாடு

    காவல்துறை

    சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து - உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு  விருதுநகர்
    கலாஷேத்ரா விவகாரம் - 10க்கும் மேற்பட்ட மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம்  சென்னை
    சயனைடு கலந்த மது குடித்து 2 பேர் பலி - டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம்  தமிழ்நாடு
    சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி  காவல்துறை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023