NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரூ.11.6 கோடி நன்கொடையாக வழங்கிய பெயர் வெளியிட விரும்பாத நபர்
    ரூ.11.6 கோடி நன்கொடையாக வழங்கிய பெயர் வெளியிட விரும்பாத நபர்
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    ரூ.11.6 கோடி நன்கொடையாக வழங்கிய பெயர் வெளியிட விரும்பாத நபர்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 22, 2023
    11:03 am
    ரூ.11.6 கோடி நன்கொடையாக வழங்கிய பெயர் வெளியிட விரும்பாத நபர்
    குழந்தையின் மருத்துவ செலவுக்கு இன்னும் ரூ.80 லட்சம் மட்டுமே தேவை

    கேரளாவை சேர்ந்த சாரங் மேனன்-ஆதித்தி நாயர் என்ற தம்பதி மும்பையில் தங்கள் 15 மாத குழந்தை நிர்வானுடன் வசித்து வருகின்றனர். நிர்வானுக்கு 'ஸ்பைனல் மஸ்குலர் ஆன்ட்ரோபி' என்ற அரிய வகை மரபணு கோளாறு இருக்கிறது. அதை குணப்படுத்த கிட்டத்தட்ட ரூ.17.5 கோடி தேவை. இவ்வளவு தொகை அவர்களிடம் இல்லாததால், அவர்கள் ஆன்லைன் மூலம் நன்கொடை வசூலிக்க ஆரம்பித்தனர். இதை மிலாப் என்ற கிரௌட் பண்டிங் தளத்தின் மூலம் செய்ய அவர்கள் முடிவு செய்தனர். அவர்களுக்கு நன்கொடை வழங்கும் படி மலையாள நடிகை ஆஹனா கிருஷ்ணாவும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேட்டுக்கொண்டார்.

    2/2

    ரூ.11 கோடியே 60 லட்சம் நன்கொடை

    "17 லட்சம் பேர் தலா 100 ரூபாய் நன்கொடையாக வழங்கினால் ரூ.17 கோடி கிடைத்து விடும்." என்று அவர் கூறி இருந்தார். மிலாப் கிரௌட் பண்டிங் தளத்தின் மூலம் 56 ஆயிரம் பேர் நன்கொடை வழங்கி இருந்தனர். எனவே மொத்தமாக ரூ.15 கோடிக்கு மேல் நிதி திரட்டப்பட்டு இருந்தது. இதில், பெயர் வெளியிட விரும்பாத ஒரு நபர் ரூ.11 கோடியே 60 லட்சம் நன்கொடையாக வழங்கி இருந்தார். அவருக்கு நன்றி தெரிவித்த பெற்றோர், தங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை என்று கூறியுள்ளனர். மேலும், தங்கள் குழந்தையின் மருத்துவ செலவுக்கு இன்னும் ரூ.80 லட்சம் மட்டுமே தேவை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    மும்பை
    இந்தியா
    கேரளா

    மும்பை

    பிபிசி அலுவலகத்தில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை 'ஆய்வு' இந்தியா
    தற்கொலை செய்து கொண்ட தலித் IIT மாணவர் நண்பர்களால் அவமானப்படுத்தப்பட்டாரா இந்தியா
    ரயிலை காணவில்லை: 90 கண்டைனர்களை ஏற்றி சென்ற கூட்ஸ் ரயிலை காணவில்லை இந்தியா
    IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா இந்தியா

    இந்தியா

    ஹைதெராபாத்தில் 5 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள் தெலுங்கானா
    ஊழியர்களின் சம்பளம் பாதியாக குறைப்பு! அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தரும் விப்ரோ தொழில்நுட்பம்
    சீன எல்லைக்கு ராணுவத்தை அனுப்பியது பிரதமர் மோடி தான், ராகுல் காந்தி அல்ல: அமைச்சர் இந்தியா-சீனா மோதல்
    ரெப்போ உயர்வுக்கு பின் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகள்! வீட்டு கடன்

    கேரளா

    இந்தியாவின் இளம் வயது உறுப்பு தானர்; தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த 17 வயது கேரளா சிறுமி வைரல் செய்தி
    கேரளாவில் ஆற்றுப்பாலத்தில் காதல் பூட்டு போட்டு சாவியை ஆற்றில் வீசிச்செல்லும் காதலர்கள் இந்தியா
    முதன்முதலாக கேரளா கோயிலில் சேவை செய்யப்போகும் ரோபோ யானை இந்தியா
    மாசி மாத பூஜை - பிப்., 12ம் தேதி சபரிமலை கோயில் நடை திறப்பு இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023