NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்லும் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை
    இந்தியா

    இலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்லும் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை

    இலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்லும் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை
    எழுதியவர் Nivetha P
    Feb 09, 2023, 05:27 pm 1 நிமிட வாசிப்பு
    இலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்லும் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை
    இலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்லும் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை

    இலங்கை பயணம்:கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் யாழ்ப்பாணம் கலாச்சார மைய கட்டிடத்தினை கட்ட அடிக்கல் நாட்டினார். இப்பொழுது அந்த கலாச்சார மைய கட்டிடத்தின் திறப்பு விழா இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங் தலைமையில் வரும் பிப்ரவரி 11ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கட்டிடம் 11 தளங்களுடன், 600 நபர்கள் அமரும் வகையில் திரையரங்குடன் கூடிய அரங்குகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் நிதி உதவியோடு அமைக்கப்பட்டுள்ள இதன் திறப்புவிழா நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க.மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். இதனை தொடர்ந்து வேறு சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க திட்டமிட்டு இவர்கள் இருவரும் 3 நாள் பயணமாக இலங்கைக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பி சென்றுள்ளனர்.

    தமிழக மீனவர்களின் படகுகள் அடிக்கடி சிறைபிடிக்கப்படும் விவகாரம் குறித்து பேசப்படும்

    இந்த இலங்கை பயணம் குறித்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் செய்தியாளர்களை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்த இலங்கை பயணத்தில் தமிழக மீனவர்களின் படகுகள் அடிக்கடி இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படுவது குறித்து பேசபடும் என்று கூறினார். மேலும், தமிழ் அமைப்புகளின் தலைவர்களை சந்திப்பதற்கும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, இந்தியா-இலங்கை இடையே கூட்டு கட்டத்தை மீண்டும் நடத்துவது குறித்தும் இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேசவிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனிடையே இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் கடந்த 1987ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 13ம் அரசியல் திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது குறித்தும் மத்திய இணை அமைச்சரான எல்.முருகன் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    இலங்கை
    பாஜக அண்ணாமலை

    இந்தியா

    'மனதை பிழிந்த புகைப்படங்கள், தூக்கமே வரல' : துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா! மல்யுத்தம்
    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலகம்
    காயம் காரணமாக FBK போட்டியிலிருந்து விலகினார் நீரஜ் சோப்ரா! இந்திய அணி
    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA உயர்நீதிமன்றம்

    இலங்கை

    ஒரே பாலின உறவுகள் குற்றமற்றது: இந்தியாவை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்ட இலங்கை உலகம்
    சூடானில் சிக்கி தவிக்கும் இலங்கை வாசிகள்: உதவி கரம் நீட்டிய இந்தியா இந்தியா
    அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அபார வெற்றி! பிரபாத் ஜெயசூர்யா 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்! டெஸ்ட் கிரிக்கெட்
    இலங்கை கடற்படை கைது செய்த 12 மீனவர்களை விடுதலை செய்ய கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் வெளியுறவுத்துறை

    பாஜக அண்ணாமலை

    'மக்களவை தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை': அண்ணாமலை அதிரடி அறிவிப்பு  தமிழ்நாடு
    சேகர் பாபு மகள் என்னிடம் உதவி கேட்டார் - பாஜக தலைவர் அண்ணாமலை  சேகர் பாபு
    பாஜக தலைவர் அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்குப்பதிவு  திமுக
    கர்நாடகா தேர்தல் - ஹெலிகாப்டர் பயணம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்  கர்நாடகா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023