NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்லும் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    இலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்லும் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை
    இலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்லும் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை

    இலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்லும் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை

    எழுதியவர் Nivetha P
    Feb 09, 2023
    05:27 pm

    செய்தி முன்னோட்டம்

    இலங்கை பயணம்:கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் யாழ்ப்பாணம் கலாச்சார மைய கட்டிடத்தினை கட்ட அடிக்கல் நாட்டினார்.

    இப்பொழுது அந்த கலாச்சார மைய கட்டிடத்தின் திறப்பு விழா இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங் தலைமையில் வரும் பிப்ரவரி 11ம் தேதி நடைபெறவுள்ளது.

    இந்த கட்டிடம் 11 தளங்களுடன், 600 நபர்கள் அமரும் வகையில் திரையரங்குடன் கூடிய அரங்குகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

    இந்திய அரசின் நிதி உதவியோடு அமைக்கப்பட்டுள்ள இதன் திறப்புவிழா நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க.மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

    இதனை தொடர்ந்து வேறு சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க திட்டமிட்டு இவர்கள் இருவரும் 3 நாள் பயணமாக இலங்கைக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பி சென்றுள்ளனர்.

    எல்.முருகன் பேட்டி

    தமிழக மீனவர்களின் படகுகள் அடிக்கடி சிறைபிடிக்கப்படும் விவகாரம் குறித்து பேசப்படும்

    இந்த இலங்கை பயணம் குறித்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் செய்தியாளர்களை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில், இந்த இலங்கை பயணத்தில் தமிழக மீனவர்களின் படகுகள் அடிக்கடி இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படுவது குறித்து பேசபடும் என்று கூறினார்.

    மேலும், தமிழ் அமைப்புகளின் தலைவர்களை சந்திப்பதற்கும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.

    தொடர்ந்து, இந்தியா-இலங்கை இடையே கூட்டு கட்டத்தை மீண்டும் நடத்துவது குறித்தும் இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேசவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இதனிடையே இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் கடந்த 1987ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 13ம் அரசியல் திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது குறித்தும் மத்திய இணை அமைச்சரான எல்.முருகன் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இலங்கை
    பாஜக அண்ணாமலை
    இந்தியா

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    இலங்கை

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! கோவிட்
    திருச்சியில் இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது! இந்தியா
    ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை உலகம்
    போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள்

    பாஜக அண்ணாமலை

    ஈரோடு இடைத்தேர்தல்-அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளித்து அறிக்கை வெளியிட்ட பாஜக மாநில தலைவர் ஈரோடு

    இந்தியா

    பட்ஜெட் தாக்கலுக்கு பின் தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய விலை விபரம்; தங்கம் வெள்ளி விலை
    ராணா அய்யூப் வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    இது அதானியின் பிரச்சனை, இந்தியாவுக்கு இல்லை - மார்க் மோபியஸ் நம்பிக்கை! தொழில்நுட்பம்
    துருக்கி நிலநடுக்கம்: உதவி செய்ய இந்தியா எடுத்த நடவடிக்கைகள் உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025