NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தனியொரு நபரால் திருடப்பட்ட 114 கிலோ எடைகொண்ட புராதன புத்தர் சிலை - க்ரைம் ஸ்டோரி
    அடுத்த செய்திக் கட்டுரை
    தனியொரு நபரால் திருடப்பட்ட 114 கிலோ எடைகொண்ட புராதன புத்தர் சிலை - க்ரைம் ஸ்டோரி
    தனியொரு நபரால் திருடப்பட்ட 114 கிலோ எடைகொண்ட புராதன புத்தர் சிலை - க்ரைம் ஸ்டோரி

    தனியொரு நபரால் திருடப்பட்ட 114 கிலோ எடைகொண்ட புராதன புத்தர் சிலை - க்ரைம் ஸ்டோரி

    எழுதியவர் Nivetha P
    Sep 24, 2023
    06:49 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தவார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி: அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் சுமார் 1.5 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பிற்கு ரூ.12.5 கோடி மதிப்புள்ள பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஜப்பானிய நாட்டினை சேர்ந்த வெண்கல புத்தர் சிலை ஒன்று கலை பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அரங்கில் இருந்து கடந்த வாரம் திருடப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்த செய்திகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    க்ரைம் 

    செப்டம்பர் 18ம் தேதி அதிகாலை 3.45 மணியளவில் அரங்கேறிய சம்பவம் 

    அதன்படி, இது குறித்து காவல்துறையினர், சுமார் 250 பவுண்டுகள் அதாவது 114 கிலோ எடைகொண்ட அந்த சிலை பெவர்லி குரோவில் பரகத் என்னும் கேலரியில் கடந்த செப்டம்பர் 18ம் தேதி அதிகாலை 3.45 மணியளவில் திருடப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

    இந்த சம்பவம் மிக தெளிவாக சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள நிலையில், அதனை பார்த்த காவல்துறையினர் ஆச்சர்யம் அடைந்தனர் என்பது குறிப்பிடவேண்டியவை.

    சிசிடிவி 

    சிசிடிவி பதிவுகளை கண்டு ஆச்சர்யத்தில் ஆழ்ந்த காவல்துறை 

    சிசிடிவி பதிவில், சந்தேகத்திற்குட்பட்ட நபர் ஒருவர் ஒரு ட்ரைவ்வே கேட் மூலம் நுழைவு வாயிலை உடைத்து, அந்த 114 கிலோ எடைகொண்ட புத்தர் சிலையினை ஒரு ட்ரக்கில் நகர்த்த ஓர் டிராலியை பயன்படுத்தியுள்ளார்.

    தனி ஒரு நபராக இந்த கொள்ளை சம்பவத்தினை அந்த நபர் வெறும் 25 நிமிடத்தில் செய்து முடித்தது ஆச்சரியமளிக்கிறது.

    திருடுபோன சிலை ஜப்பானின் 1603-1867 எடோ காலத்தின் போது உருவாக்கப்பட்டது என்றும்,

    ஒளிவட்டத்துடன் சுமார் 4 அடி உயரமுள்ள அந்த புத்தர் சிலை அரிய வகையான கலைப்பொருட்களுள் ஒன்று என்றும் கூறப்படுகிறது.

    சோதனை 

    முன்னொரு காலத்தில் கோயிலில் இடம்பெற்றிருக்கலாம்

    அதேபோல் முந்தைய காலங்களில் இந்த சிலை கோயிலில் வைத்திருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.

    தொடர்ந்து, இந்த சிலையானது பூமி, நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் உள்ளிட்ட 5 உலக கூறுகள் கொண்ட ஆன்மீக உணர்வுடன், ஒருமைப்பாட்டினையும் குறிக்கும் வண்ணம் வடிக்கப்பட்டுள்ளது.

    சந்தையில் இதுபேன்ற சிலை வேறெங்கும் இல்லை என்று அந்த கலை அரங்க உரிமையாளர் கூறியுள்ளார்.

    இந்நிலையில் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளதோடு, மேலும் சில பாதுகாப்பு கேமரா பதிவுகளுக்கான சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    திட்டம் 

    திருட்டுப்போன கலையரங்கம் 2017ல் திறக்கப்பட்டதென தகவல் 

    இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ள பரகாத் கேலரி, லண்டன், ஹாங்காங், சியோட் உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே உள்ள நிலையில் கடந்த 2017ம் ஆண்டு தான் அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது கிளையினை திறந்ததுள்ளது.

    இந்த கலைப்பொருள் அரங்கத்தில் வெளிப்புறம் முக்கியமான இடத்தில் இந்த சிலை இடம் பிடித்திருந்த நிலையில், இந்த சிலை கடத்தல் சம்பவம் திட்டமிடப்பட்ட கொள்ளை தான் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    க்ரைம் ஸ்டோரி
    அமெரிக்கா
    கொள்ளை
    கடத்தல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    க்ரைம் ஸ்டோரி

    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 1 - க்ரைம் ஸ்டோரி கைது
    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 2 - க்ரைம் ஸ்டோரி காவல்துறை
    நர்ஸ் வேடமிட்டு விஷ ஊசிப்போட்டு மனைவியை கொலை செய்ய முயற்சித்த முன்னாள் காதலி - க்ரைம் ஸ்டோரி  கேரளா
    மாணவிகளை மசாஜ் செய்ய வற்புறுத்தி அத்துமீறிய தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது-க்ரைம் ஸ்டோரி  கைது

    அமெரிக்கா

    புயல் ஹிலாரி பாதிப்புக்கு மத்தியில் கலிபோர்னியாவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உலகம்
    காவல்துறையில் சரணடைய உள்ளார் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  டொனால்ட் டிரம்ப்
    உச்சத்தை தொட்டது துப்பாக்கியால் கொல்லப்பட்ட அமெரிக்க குழந்தைகளின் எண்ணிக்கை உலகம்
    முக்கிய அறிவிப்பு: செப்டம்பரில் இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா

    கொள்ளை

    சிங்கப்பூர் மாரியம்மன் கோவில் நகைகளை அடகு வைத்த அர்ச்சகர்-6 ஆண்டு சிறை  சிங்கப்பூர்
    ரூ.8½ கோடி கொள்ளையடித்த தம்பதியை ஜூஸ் கொடுத்து மடக்கிய போலீஸ்  பஞ்சாப்
    63 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை பலாத்காரம்
    மகாராஷ்டிராவில் 'பாஸ்ட் அண்ட் பியூரியஸ்' பட பாணியில் கொள்ளை சம்பவம் மகாராஷ்டிரா

    கடத்தல்

    கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தங்க கடத்தல் அதிகரிப்பு - IRS அதிகாரி அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா
    கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் கேரளா
    குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல்  குஜராத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025