NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி
    போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த செவிலியர்கள்

    கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி

    எழுதியவர் Nivetha P
    Jan 02, 2023
    04:04 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 2019-2020 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது.

    அப்போது மருத்துவமனைகளில் செவிலியர்கள் போதுமான அளவில் இல்லை என்பதால் தற்காலிக செவிலியர்களை அப்போதைய அதிமுக அரசு உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் விதிமுறைகள் மற்றும் விகிதாசாரங்களை பின்பற்றாமல் பணியமர்த்தியது.

    விகிதாசாரங்கள் எதையும் பின்பற்றாமல் பணியில் சேர்ந்த செவிலியர்களை 2022 ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனை தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட துவங்கினர்.

    இதனையடுத்து, "ஆபத்து காலத்தில் உதவிய ஒப்பந்த செவிலியர்களை திமுக அரசு நட்டாற்றில் விட்டுள்ளது. கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.

    சம்பள உயர்வு குறித்தும் அறிக்கை

    பணி நீக்கம் செய்தது நீதிமன்ற உத்தரவு காரணமாகவே தவிர, அது அரசின் நோக்கமல்ல-மா.சுப்பிரமணியம்

    இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர், "கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது நீதிமன்ற உத்தரவால் தானே தவிர, அது தமிழக அரசின் நோக்கம் அல்ல.

    பொது சுகாதாரத்துறையில் 2200 காலியிடங்கள், 'மக்களை தேடி மருத்துவம்' இடைநிலை சுகாதார சேவைக்காக உள்ள 270 காலியிடங்கள் போன்ற சுகாதாரத்துறையில் உள்ள காலியிடங்களில் இந்த செவிலியர்கள் நிரப்பப்படுவார்கள்.

    கொரோனா காலத்தில் பணியாற்றியதால் மாற்றுப்பணி வழங்கப்படவுள்ளது.

    ரூ.14,000 வாங்கிய இவர்கள் ஊதியம் ரூ.18,000ஆக உயரவுள்ளது.

    பணி நிரந்தரம் சாத்யமில்லையென்பதை செவிலியர்கள் உணர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    போராட்டம்
    தமிழக அரசு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    போராட்டம்

    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு தமிழ்நாடு
    2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு தமிழ்நாடு

    தமிழக அரசு

    திருவள்ளூரில் ரூ.1.97 கோடி செலவில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் - 70 சதவிகித பணிகள் நிறைவு தமிழ்நாடு
    டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம் தமிழ்நாடு
    தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம் மாநிலங்கள்
    8 வழிச்சாலை: அதிமுக செய்தால் தவறு, திமுக செய்தால் சரியா? அதிமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025