NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி
    இந்தியா

    கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி

    கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி
    எழுதியவர் Nivetha P
    Jan 02, 2023, 04:04 pm 1 நிமிட வாசிப்பு
    கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி
    போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த செவிலியர்கள்

    கடந்த 2019-2020 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. அப்போது மருத்துவமனைகளில் செவிலியர்கள் போதுமான அளவில் இல்லை என்பதால் தற்காலிக செவிலியர்களை அப்போதைய அதிமுக அரசு உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் விதிமுறைகள் மற்றும் விகிதாசாரங்களை பின்பற்றாமல் பணியமர்த்தியது. விகிதாசாரங்கள் எதையும் பின்பற்றாமல் பணியில் சேர்ந்த செவிலியர்களை 2022 ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட துவங்கினர். இதனையடுத்து, "ஆபத்து காலத்தில் உதவிய ஒப்பந்த செவிலியர்களை திமுக அரசு நட்டாற்றில் விட்டுள்ளது. கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.

    பணி நீக்கம் செய்தது நீதிமன்ற உத்தரவு காரணமாகவே தவிர, அது அரசின் நோக்கமல்ல-மா.சுப்பிரமணியம்

    இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது நீதிமன்ற உத்தரவால் தானே தவிர, அது தமிழக அரசின் நோக்கம் அல்ல. பொது சுகாதாரத்துறையில் 2200 காலியிடங்கள், 'மக்களை தேடி மருத்துவம்' இடைநிலை சுகாதார சேவைக்காக உள்ள 270 காலியிடங்கள் போன்ற சுகாதாரத்துறையில் உள்ள காலியிடங்களில் இந்த செவிலியர்கள் நிரப்பப்படுவார்கள். கொரோனா காலத்தில் பணியாற்றியதால் மாற்றுப்பணி வழங்கப்படவுள்ளது. ரூ.14,000 வாங்கிய இவர்கள் ஊதியம் ரூ.18,000ஆக உயரவுள்ளது. பணி நிரந்தரம் சாத்யமில்லையென்பதை செவிலியர்கள் உணர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழக அரசு
    போராட்டம்

    சமீபத்திய

    ரூ.239 இலவச ரீசார்ஜ் திட்டம் உண்மை இல்லை! PIB எச்சரிக்கை தொழில்நுட்பம்
    மார்ச் 27க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸின் 2வது நாள் போராட்டம் இந்தியா
    இன்று உலக தியேட்டர் தினம் 2023 : மேடை கலையின் முக்கியத்துவத்தை கொண்டாடுவோம் உலகம்

    தமிழக அரசு

    தமிழகத்தில் பெண்கள் உரிமை தொகை ரூ.1000 குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் எடப்பாடி கே பழனிசாமி
    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்தி கார்த்தி
    டி.எம்.சவுந்தர ராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் பெயரில் ஒரு சாலை: தமிழக அரசு அறிக்கை கோலிவுட்
    தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்வு தமிழ்நாடு

    போராட்டம்

    மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள்-ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் தமிழ்நாடு
    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள் விழுப்புரம்
    கிருஷ்ணகிரியில் எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுப்பு-200 பேர் கைது தமிழ்நாடு
    அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் வாபஸ் இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023