NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெட்ரா பாக்கெட்டில் மது விற்பனை - அமைச்சர் முத்துசாமி விளக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெட்ரா பாக்கெட்டில் மது விற்பனை - அமைச்சர் முத்துசாமி விளக்கம் 
    டெட்ரா பாக்கெட்டில் மது விற்பனை - அமைச்சர் முத்துசாமி விளக்கம்

    டெட்ரா பாக்கெட்டில் மது விற்பனை - அமைச்சர் முத்துசாமி விளக்கம் 

    எழுதியவர் Nivetha P
    Jul 12, 2023
    07:14 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில், சமீப காலமாக டாஸ்மாக் விற்பனை குறைந்ததாக கூறப்பட்டதையடுத்து, அதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

    அதில், 180மில்லி லிட்டர் மதுவினை இரண்டாக பிரித்து குடிப்பதற்கே ஒரு தனி கூட்டம் கடையின் வாசலில் காத்திருக்கிறது என்பது தெரியவந்தது.

    இதனால் 90மி.லிட்டர் கொண்ட டெட்ரா பாக்கெட்டில் மது விற்பனை செய்யலாம் என்று அமைச்சர் முத்துசாமி அண்மையில் கூறியிருந்தார்.

    இதற்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், டெட்ரா பாக்கெட்டில் மது விற்பனை குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளதே தவிர இன்னமும் முடிவு எடுக்கவில்லை என்றும், டாஸ்மாக்கில் பல்வேறு பிரச்சனைகள் நிலவும் நிலையில், அரசின் கொள்கையினை கருத்தில் கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

    விளக்கம் 

    கோயில்கள் மற்றும் பள்ளிகள் அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளில் ஆய்வு நடத்த உத்தரவு 

    தொடர்ந்து, இந்த டெட்ரா பாக்கெட் மது விற்பனை என்பது அரசின் முடிவு அல்ல, விருப்பம் இல்லையெனில் அந்த திட்டம் கைவிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    மேலும், சிறுவர்கள் மற்றும் வயதானோர் டாஸ்மாக் கடைகளுக்கு வருவதனை தடுத்து அவர்களுக்கான கவுன்சலிங் கொடுக்கப்படவுள்ளது என்றும் கூறியுள்ளார்.

    கோயில்கள் மற்றும் பள்ளிகள் அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளை மீண்டும் ஒருமுறை ஆய்வுநடத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையினை அதிகரிப்பது தமிழக அரசின் நோக்கம் அல்ல என்று கூறும் அமைச்சர், "டாஸ்மாக் கடைகளில் வருமானம் குறைவதனை கண்காணிப்பது நிஜத்தில் மக்கள் குடிப்பதை நிறுத்தி விட்டார்களா? இல்லை வேறு ஏதேனும் தவறான பாதைக்கு சொல்கிறார்களா? என்பதனை கண்டறியதான்" என்றும் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டாஸ்மாக்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு

    டாஸ்மாக்

    500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி மது
    தமிழகத்தில் 500 சில்லறை மதுபான கடைகள் மூடப்படும் - டாஸ்மாக் நிர்வாகம்  தமிழ்நாடு

    தமிழ்நாடு

    மதிப்பெண் சான்று வழங்காத மதுரை காமராஜர் பல்கலைக்கழக விவகாரம் - பதிவாளருக்கு பிடிவாரண்ட்  காவல்துறை
    தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு  வானிலை ஆய்வு மையம்
    செந்தில் பாலாஜி தம்பிக்கு 3வது முறையாக சம்மன் அனுப்பிய வருமான வரித்துறை  திமுக
    13 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  புதுச்சேரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025