NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர் கைது - கைதான ஷங்கர் மிஸ்ராவின் தந்தை பேட்டி
    அடுத்த செய்திக் கட்டுரை
    விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர் கைது - கைதான ஷங்கர் மிஸ்ராவின் தந்தை பேட்டி
    கைதான ஷங்கர் மிஸ்ரா தந்தை பேட்டி

    விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர் கைது - கைதான ஷங்கர் மிஸ்ராவின் தந்தை பேட்டி

    எழுதியவர் Nivetha P
    Jan 07, 2023
    05:00 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த நவம்பர் 26ம் தேதி நியூயார்க் நகரில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஷங்கர் மிஸ்ரா என்னும் பயணி ஒருவர் போதையில் சக பெண் பயணியின் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

    இது குறித்து அந்த பெண் பயணி டாடா நிறுவன தலைவருக்கு புகார் கடிதம் அனுப்பிய நிலையில், அவருக்கு 30 நாட்கள் விமானங்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டதோடு, போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.

    இதனையடுத்து போலீசார் அந்த நபரை தீவிரமாக தேடி வந்தார்கள்.

    இந்நிலையில் ஷங்கர் மிஸ்ரா பணிபுரிந்து வந்த அமெரிக்க நிறுவனமான 'வெல்ஸ் போர்கோ', அவர் செய்த செயலை கடுமையாக சாடியதோடு, இது தங்கள் நிறுவனத்திற்கே அவமானம் என்று கூறி ஷங்கர் மிஸ்ராவை பணி நீக்கம் செய்துள்ளார்கள்.

    பேட்டியளித்த ஷ்யாம் மிஸ்ரா

    பெங்களூரில் கைதான ஷங்கர் மிஸ்ரா - 'இது போலியான வழக்கு' என்று கூறும் ஷங்கர் மிஸ்ரா தந்தை

    இதனை தொடர்ந்து தலைமறைவான ஷங்கர் மிஸ்ரா தனது நண்பர்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பு கொண்டதோடு, கிரெடிட் கார்டு உபயோகப்படுத்தியதையும் வைத்து போலீசார் அவரை பெங்களூரில் கைது செய்துள்ளனர்.

    இதனையடுத்து, ஷங்கர் மிஸ்ராவின் தந்தை ஷ்யாம் மிஸ்ரா, "எனது மகனுக்கு 34 வயதாகிறது. 72 வயதான பெண்ணிடம் என் மகன் இப்படி அநாகரிகமாக நடந்து கொண்டிருக்க மாட்டான்.

    பயண நாளன்று அவன் 30 மணி நேரம் தூங்காமல் சோர்வாக இருந்துள்ளான்.

    எனவே தூங்கிய அவன், எழுந்த பின்னர் விமான ஊழியர்கள் கூறியபின் தான் இந்த சம்பவம் குறித்து அவனுக்கு தெரியவந்துள்ளது.

    இது முற்றிலும் போலியான வழக்கு" என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமானம்
    அமெரிக்கா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    விமானம்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார் காலெக்ஷன்ஸ் ரஜினிகாந்த்
    இந்தியாவில் நேரம் தவறாத விமான சேவை வழங்கும் நிறுவனமாக இண்டிகோ தேர்வு வானூர்தி
    இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள் விமான சேவைகள்
    விமான நிறுவனங்களால், டிக்கெட்டுகள் தரம் குறைக்கப்பட்ட பயணிகளுக்கு, கட்டணம் திரும்ப தர நடவடிக்கை: DGCA விமான சேவைகள்

    அமெரிக்கா

    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! இந்தியா
    தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர்! இந்தியா
    மூன்றாம் உலகப் போராக மாறுமா உக்ரைன் - ரஷ்யா மோதல்? ரஷ்யா
    ஜி 20 மாநாடு, 10,000 டெல்லி பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்-எதிர்ப்பு தெரிவிக்கும் என்.ஜி.ஓ உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025