NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்; கட்டுப்பாட்டை மீறியதால் நடவடிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்; கட்டுப்பாட்டை மீறியதால் நடவடிக்கை
    ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளர் செந்தில்முருகன் அதிமுகவிலிருந்து அதிரடி நீக்கம்

    ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்; கட்டுப்பாட்டை மீறியதால் நடவடிக்கை

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 19, 2025
    03:32 pm

    செய்தி முன்னோட்டம்

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கட்சி உத்தரவை மீறி சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டதற்காக எம்ஜிஆர் இளைஞரணி முன்னாள் துணை செயலாளர் செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) அறிவித்தார்.

    ஈரோட்டைச் சேர்ந்த செந்தில் முருகன், முன்பு 2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அணியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    ஆனால் சின்னப் பிரச்சினை காரணமாக வேட்புமனுவை வாபஸ் பெற்றார். பின்னர், இபிஎஸ் அணியில் இணைந்த அவர், அதிமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார்.

    இந்நிலையில், தற்போதைய இடைத்தேர்தலில் போட்டியை புறக்கணிக்க அதிமுக தலைமை முடிவு செய்தது.

    ஆனால், சுயேச்சை வேட்பாளராக செந்தில் முருகன் தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது.

    கட்சிக் கட்டுப்பாடு

    கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதால் நடவடிக்கை

    அவரது நடவடிக்கை கட்சியின் கொள்கைகளை மீறுவதாகவும், தலைமையின் முடிவுக்கு சவால் விடுவதாகவும் கருதப்பட்டது. செந்தில் முருகனின் நடவடிக்கைகள் அதிமுகவின் கொள்கைகளுக்கும், ஒழுக்கத்துக்கும் எதிரானது என இபிஎஸ் அறிக்கை வெளியிட்டார்.

    அந்த அறிக்கையில், ஒழுக்கம் மற்றும் ஒற்றுமைக்கான கட்சியின் உறுதிப்பாட்டை வலியுறுத்தி, கட்சித் தொண்டர்கள் அவருடன் கட்சி ரீதியான எந்தத் தொடர்பையும் பேண வேண்டாம் என்று எச்சரித்தார்.

    இதற்கிடையே, பிப்ரவரி 5 ஆம் தேதி நடக்க உள்ள ஈரோடு இடைத்தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக உள்ளிட்டவை புறக்கணித்ததால், திமுக - நாம் தமிழர் என இருமுனைபோட்டியாக மாறியுள்ளது.

    திமுக சார்பில் வி.சி.சந்திரகுமாரும், நாம் தமிழர் சார்பில் சீதாலட்சுமியும் போட்டியிடுகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இடைத்தேர்தல்
    ஈரோடு
    அதிமுக
    தமிழ்நாடு

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    இடைத்தேர்தல்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமனம் ஈரோடு
    ஈரோடு இடைதேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டி - ஈபிஎஸ் அறிவிப்பு ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவியேற்பு ஈரோடு
    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன் நாம் தமிழர்

    ஈரோடு

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் குறித்து வீடியோ வெளியீடு சென்னை
    ஈரோடு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 யானைகள் பலி தமிழ்நாடு
    ஈரோட்டில் தாலி கட்டிய கையோடு மனைவியை மாட்டு வண்டியில் அழைத்துச்சென்ற மருத்துவர் வைரல் செய்தி
    காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் தேறி வருவதாக அறிக்கை காங்கிரஸ்

    அதிமுக

    விஜயகாந்த் அரசியல் வரலாறு - தேமுதிக கட்சி துவங்கியது எப்போது ? தேமுதிக
    கொடநாடு வழக்கு: இபிஎஸ் ஜன.30, 31-ல் ஆஜராக உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் ஜெயலலிதா
    அதிமுக சின்னம் விவகாரம்: ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஓ.பன்னீர் செல்வம்
    தமிழ் புத்தாண்டை எப்போது கொண்டாடுவது; தை மாதமா? சித்திரை மாதமா? -பாகம் 1 பொங்கல் திருநாள்

    தமிழ்நாடு

    தமிழகத்தில் 2025ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டையில் தொடங்கியது ஜல்லிக்கட்டு
    பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 17 அன்று அரசு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு விடுமுறை
    சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடித்து விபத்து; 6 பேர் பலி விருதுநகர்
    தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு; சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வாய்ப்பு தமிழ்நாடு செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025