NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நிலவை 'இந்து ராஜ்ஜியம்' என்று அறிவிக்க வேண்டும்: பிரபல மத குரு கோரிக்கை 
    நிலவை 'இந்து ராஜ்ஜியம்' என்று அறிவிக்க வேண்டும்: பிரபல மத குரு கோரிக்கை 
    இந்தியா

    நிலவை 'இந்து ராஜ்ஜியம்' என்று அறிவிக்க வேண்டும்: பிரபல மத குரு கோரிக்கை 

    எழுதியவர் Sindhuja SM
    August 28, 2023 | 11:40 am 1 நிமிட வாசிப்பு
    நிலவை 'இந்து ராஜ்ஜியம்' என்று அறிவிக்க வேண்டும்: பிரபல மத குரு கோரிக்கை 
    இதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதை அடுத்து, நிலவை 'இந்து ராஜ்ஜியம்' என்றும், விண்கலம் தரையிறங்கிய இடத்தை அதன் தலைநகராகவும் அறிவிக்க வேண்டும் என்று இந்து மதகுருவான சுவாமி சக்ரபாணி மகாராஜின் ஒரு வினோத கோரிக்கையை விடுத்துள்ளார். அனைத்திந்திய இந்து மகாசபையின் தேசியத் தலைவரான இவர், பிற மதத்தினர் நிலவின் மீது உரிமை கொண்டாடுவதற்கு முன்பு, இந்திய-அரசு நிலவில் தனது உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். மேலும், இதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கடந்த புதன்கிழமை நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து, அது தரையிறங்கிய இடம் இனி 'சிவ்சக்தி பாயிண்ட்' என்று அழைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

    கொரோனா பரவலை தடுக்க கோமியத்தை குடிக்க சொன்னவர்

    இந்நிலையில், ட்விட்டரில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருக்கும் சுவாமி சக்ரபாணி மகாராஜின், "எந்த பயங்கரவாதிகளும் நிலவிற்கு சென்றடையாத வகையில் இந்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும்" என்று கூறியுள்ளார். சுவாமி சக்ரபாணி மகாராஜின் தனது வினோத கருத்துக்களுக்கு பெயர் போனவர். 2020ஆம் ஆண்டு கொரோனா பரவல் அதிகமாக இருந்த போது, இவர் பசு மாட்டின் கோமியத்தை குடித்தால் கொரோனா பரவாது என்று கூறி, டெல்லியில் "கோமிய விருந்து" ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். "விலங்குகளைக் கொன்று உண்பவர்களால்தான் கொரோனா வைரஸ் வந்துள்ளது. கொரோனாவை தடுக்க உலகத் தலைவர்கள் மாட்டு மூத்திரத்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். ஏனென்றால், கடவுள் இந்திய பசுவில் மட்டுமே வசிக்கிறார்." என்று சுவாமி சக்ரபாணி அப்போது கூறியிருந்தார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    சந்திரயான் 3
    பிரதமர்

    இந்தியா

    உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்க வாய்ப்பை இழந்தாலும் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற பருல் சவுத்ரி உலக சாம்பியன்ஷிப்
    சீன-இந்திய போர்: 60 வருடங்களுக்கு முன் இந்திய-சீன எல்லைப் பிரச்சனைகள் எப்படி தொடங்கியது? வரலாற்று நிகழ்வு
    முஸ்லீம் சிறுவன் வகுப்பறையில் தாக்கப்பட்ட சம்பவம்: பள்ளியை இழுத்து மூட அரசு உத்தரவு உத்தரப்பிரதேசம்
    புழுங்கல் அரிசியை தொடர்ந்து பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு மத்திய அரசு

    சந்திரயான் 3

    சந்திராயன் 3: நிலவில் ஆராய்ச்சியை தொடங்கியது ChaSTE இஸ்ரோ
    சந்திரயான் 3: புதிய வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ  இந்தியா
    செப்.2ஆம் தேதி விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் ஆதித்யா L1  இஸ்ரோ
    இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் உரையாட பெங்களூர் வந்தார் பிரதமர் மோடி  பெங்களூர்

    பிரதமர்

    'ஏழை மக்களின் நிலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது' : பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    'நான் பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்துள்ளேன்' - இங்கிலாந்து பிரதமர் சிறப்புரை  இங்கிலாந்து
    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி இந்தியா
    77வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி  டெல்லி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023