NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு
    மல்லிகார்ஜுன் கார்கேவின் அலுவலகத்தில் எதிர்க்கட்சிகள் இன்று கூடி விவாதினர்

    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Feb 03, 2023
    07:20 pm

    செய்தி முன்னோட்டம்

    பங்குச் சந்தை சரிவுக்கு வழிவகுத்த அதானி நிறுவனத்தைப் பற்றிய விவாதம் மற்றும் விசாரணைக்கு அழைப்பு விடுப்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருந்ததால், இரு நாடாளுமன்ற அவைகளும் இன்று(பிப் 3) எந்த வேலையும் இல்லாமல் ஒத்திவைக்கப்பட்டன.

    விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று முன்கூட்டியே ஒத்திவைக்கப்பட்டன.

    இந்நிலையில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் அறையில் 16 எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் மீண்டும் ஒருமுறை இன்று கூடினர்.

    அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை, அதிக கடன் வைத்திருக்கும் நிறுவனம் என்றும் வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க "வரி ஏமாற்று புகலிடங்களை" பயன்படுத்தும் நிறுவனம் என்றும் அதானி குழுமத்தை விமர்சித்திருந்தது.

    இந்த விமர்சனங்களுக்கு பின், அதானி குழுமத்தின் பங்குகள் வெகுவாக வீழ்ச்சி அடைந்து வருகிறது.

    நாடாளுமன்றம்

    அதானி குழும பிரச்சனையைப் பற்றி விவாதிக்க மறுப்பு

    இதனால் ஏற்படும் பொருளாதார பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

    மேலும், இதை விசாரிக்க நாடாளுமன்றக் குழு அல்லது உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரி வருகின்றனர்.

    அதானி குழுமத்தின் மிகப்பெரும் முதலீட்டாளர்களான அரசாங்கத்தால் நடத்தப்படும் LIC மற்றும் SBIயில் முதலீடு செய்திருப்பவர்களும் இதனால் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது என்பதால் இந்த விவாதம் மிக முக்கியமானது என்கின்றன எதிர்க்கட்சிகள்.

    ஆனால், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்து, "ஆதாரமற்ற கூற்றுக்களை கூற வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார்.

    மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜகதீப் தன்கர், எதிர்க்கட்சிகளின் அனைத்து தீர்மானங்களும் "சரியாக இல்லை" என்று கூறி நிராகரித்திருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    நாடாளுமன்றம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    வந்துவிட்டது சோனி வாக்மேன் NW-ZX707 - அம்சங்கள் என்னென்ன? தொழில்நுட்பம்
    பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: இந்தியா கடும் கண்டனம் பாகிஸ்தான்
    மோர்பி பால விபத்து: ஓவேரா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் நீதிமன்றத்தில் சரணடைந்தார் குஜராத்
    மைலேஜில் மற்ற கார்களை அலறவிடும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் அறிமுகம்! ஆட்டோமொபைல்

    நாடாளுமன்றம்

    ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது - இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வின் மூலம் தகவல் இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025