NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியது - அதிர்ச்சி தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியது - அதிர்ச்சி தகவல்
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியது - அதிர்ச்சி தகவல்

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியது - அதிர்ச்சி தகவல்

    எழுதியவர் Nivetha P
    Mar 24, 2023
    11:55 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் நேற்றைய(மார்ச்.,23) அறிக்கையின்படி 86 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பானது உறுதியாகியுள்ளது.

    இதனால் தமிழகத்தில் தற்போது செயலில் உள்ள கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 500ஐ தாண்டி 517ஆக பதிவாகியுள்ளது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    முன்னதாக RTPCR சோதனைக்காக 3,162 நபர்களிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன,

    இதனை தொடர்ந்து வாராந்திர பாசிட்டிவிட்டி விகிதமும் நேற்று 2 சதவிகிதத்தை தாண்டியது என்று கூறப்பட்டுள்ளது.

    அதன்படி சென்னையில் 19, செங்கல்பட்டில் 12, சேலம் மற்றும் கோவையில் தலா 8, கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் தலா 5 என புது கொரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளது.

    மேலும் ஈரோட்டில் 3 பாதிப்புகள், மாநிலத்தின் மற்ற 17 மாவட்டங்களில் 1 முதல் 2 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    மத்திய சுகாதாரத்துறை செயலாளர்

    எக்ஸ்.பி.பி.,-1.16 என்னும் புதிய உருமாறிய கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

    தமிழகத்தில் 517 செயலில் உள்ள கொரோனா பாதிப்புகளில் 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    எனினும், யாருக்கும் ஆக்சிஜன் ஆதரவோ, தீவிர சிகிச்சையோ தேவைப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் 'இன்சகாக்' என்னும் இந்திய கொரோனா பகுப்பாய்வு அமைப்பானது புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

    அதில் எக்ஸ்.பி.பி.,-1.16 என்னும் புதிய உருமாறிய கொரோனா தற்போது அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

    தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகளவில் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் நேற்று தெரிவித்தார்.

    அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, இமாச்சல் பிரதேஷ், கேரளா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா அதிகளவு பரவி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    கொரோனா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    தமிழ்நாடு பெண் காவலர்களின் நலம் சார்ந்த 9 அறிவிப்புகளை அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    தமிழக பள்ளிக்கல்வித்துறையில் ஊழல் நடப்பதாக குற்றச்சாட்டு - பாஜக மாநில துணை தலைவர் பள்ளி மாணவர்கள்
    தமிழகத்தில் ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்கும் - ஆவின் விளக்கம் சென்னை
    தமிழகத்திற்கு வர இருக்கும் மெகா டெக்ஸ்டைல் ​​பார்க்: பிரதமர் மோடி அறிவிப்பு இந்தியா

    கொரோனா

    மீண்டும் கொரோனா பரபரப்பு: மத்திய மாநில அரசுகள் ஆலோசனை! தமிழ்நாடு
    கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மையம் தொடக்கம்-விமான நிலைய இயக்குனர் துவக்கி வைத்தார் கோவிட்
    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி கோவிட்
    மூக்கு வழியே செலுத்தத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு கோவிட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025