NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாடு ரேஷன் கடைகளில் ஆவின் - புதிய வசதிகள் அறிமுகம் 
    தமிழ்நாடு ரேஷன் கடைகளில் ஆவின் - புதிய வசதிகள் அறிமுகம் 
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    தமிழ்நாடு ரேஷன் கடைகளில் ஆவின் - புதிய வசதிகள் அறிமுகம் 

    எழுதியவர் Nivetha P
    Apr 27, 2023
    11:18 am
    தமிழ்நாடு ரேஷன் கடைகளில் ஆவின் - புதிய வசதிகள் அறிமுகம் 
    தமிழ்நாடு ரேஷன் கடைகளில் ஆவின் - புதிய வசதிகள் அறிமுகம்

    தமிழ்நாடு ரேஷன் கடைகளில் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பல புதிய வசதிகளை தமிழக அரசு தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. டிஜிட்டல் முறையில் குடும்ப அட்டைகள், கைரேகைப்பதிவு போன்ற அம்சங்களுடன் கூடிய புதிய வசதிகளும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று(ஏப்ரல்.,26) கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் விழுப்புரத்தில் கூட்டுறவு வங்கி உறுப்பினர்களுக்கு வங்கி கடனுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் 1,254கோடி ரூபாய் வர்த்தகம் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆவினுடன் கூட்டுறவுத்துறை இணைந்து ஆவின் விற்பனையகத்தை துவங்க திட்டமிட்டுள்ளோம். அதுமட்டுமல்லாமல் ஆவின் பொருட்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

    2/2

    பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் ஏலம் விடப்படும் 

    தொடர்ந்து பேசிய அவர், இதுதவிர UPI என்னும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு சேவையினையும் துவங்கவுள்ளோம். இந்த வசதிகள் யாவும் வரும் மே 10ம்தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், இந்த வசதிகள் செயல்பாட்டிற்கு வந்த பின்னர் வாடிக்கையாளர்கள் GPay, Phonepay, Paytmபோன்றவைகளை பயன்படுத்தி ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக 784 புதிய நியாய விலை கடைகள் துவங்கப்பட்டுள்ளது. 812 கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகள் நடந்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. அதனுள் 385 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனை ஏலம் விட்டு பணத்தினை வசூல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    தமிழக அரசு

    தமிழ்நாடு

    கோடை காலம் என்பதால் வழக்கறிஞர்கள் கவுன் அணிவதில் விலக்கு - சென்னை உயர்நீதிமன்றம்  சென்னை
    சமூக வலைத்தளங்களில் பரவிய ஆடியோ பதிவு குறித்து விளக்கமளிக்கும் நிதியமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்
    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    உதயநிதி, சபரீசனிடம் இருந்து என்னைப் பிரிக்க முயற்சிக்கிறார்கள்: ஆடியோ சர்ச்சை பற்றி பேசிய PTR  உதயநிதி ஸ்டாலின்

    தமிழக அரசு

    அரசு வாகன ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை - தமிழக அரசு உத்தரவு  தமிழ்நாடு
    திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு NO : அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு  தமிழ்நாடு
    இனி, திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாறலாம்: தமிழக அரசு தமிழ்நாடு
    திருவேடகத்தில், திருஞானசம்பந்தர் பாடல் எழுதப்பட்ட தங்க ஏடு கண்டுபிடிப்பு தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023