NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாடு ரேஷன் கடைகளில் ஆவின் - புதிய வசதிகள் அறிமுகம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ்நாடு ரேஷன் கடைகளில் ஆவின் - புதிய வசதிகள் அறிமுகம் 
    தமிழ்நாடு ரேஷன் கடைகளில் ஆவின் - புதிய வசதிகள் அறிமுகம்

    தமிழ்நாடு ரேஷன் கடைகளில் ஆவின் - புதிய வசதிகள் அறிமுகம் 

    எழுதியவர் Nivetha P
    Apr 27, 2023
    11:18 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு ரேஷன் கடைகளில் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பல புதிய வசதிகளை தமிழக அரசு தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.

    டிஜிட்டல் முறையில் குடும்ப அட்டைகள், கைரேகைப்பதிவு போன்ற அம்சங்களுடன் கூடிய புதிய வசதிகளும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

    இதற்கிடையே நேற்று(ஏப்ரல்.,26) கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் விழுப்புரத்தில் கூட்டுறவு வங்கி உறுப்பினர்களுக்கு வங்கி கடனுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

    அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் 1,254கோடி ரூபாய் வர்த்தகம் நடந்து வருகிறது.

    இந்நிலையில் ஆவினுடன் கூட்டுறவுத்துறை இணைந்து ஆவின் விற்பனையகத்தை துவங்க திட்டமிட்டுள்ளோம்.

    அதுமட்டுமல்லாமல் ஆவின் பொருட்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

    ஆவின்

    பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் ஏலம் விடப்படும் 

    தொடர்ந்து பேசிய அவர், இதுதவிர UPI என்னும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு சேவையினையும் துவங்கவுள்ளோம்.

    இந்த வசதிகள் யாவும் வரும் மே 10ம்தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    மேலும் அவர் பேசுகையில், இந்த வசதிகள் செயல்பாட்டிற்கு வந்த பின்னர் வாடிக்கையாளர்கள் GPay, Phonepay, Paytmபோன்றவைகளை பயன்படுத்தி ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் புதிதாக 784 புதிய நியாய விலை கடைகள் துவங்கப்பட்டுள்ளது.

    812 கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகள் நடந்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    அதனுள் 385 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    அதனை ஏலம் விட்டு பணத்தினை வசூல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழக அரசு

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    தமிழ்நாடு

    அண்ணா பல்கலைக்கழக பதவியினை ராஜினாமா செய்தார் உதயநிதி ஸ்டாலின்  உதயநிதி ஸ்டாலின்
    அதிமுக இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும் - எடப்பாடி பழனிச்சாமி  தேர்தல் ஆணையம்
    காதலி தூக்குபோட்டு உயிரிழந்ததை வீடியோ காலில் பார்த்து ரசித்த காதலன்  காவல்துறை
    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை - உச்சநீதிமன்றம் உத்தரவு!  உச்ச நீதிமன்றம்

    தமிழக அரசு

    கருணாநிதி பேனா நினைவு சின்னம் - கருத்துகேட்பு கூட்டத்தில் 22 பேர் ஆதரவு, சீமான் உள்பட 12 பேர் எதிர்ப்பு கருணாநிதி
    நெடுஞ்சாலைகளில் திரியும் மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசல் - தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டிஸ் சென்னை உயர் நீதிமன்றம்
    அம்பாசமுத்திரம் பகுதியில் உயிர்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம் - தமிழக அரசு தமிழ்நாடு
    தமிழக பள்ளியில் இந்து மாணவர்கள் குங்குமம், விபூதி வைக்க தடை விதித்த தலைமை ஆசிரியை - வைரல் வீடியோ திண்டுக்கல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025