NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
    இந்தியா

    ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

    ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
    எழுதியவர் Sindhuja SM
    May 26, 2023, 12:55 pm 1 நிமிட வாசிப்பு
    ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
    இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    டெல்லியின் முன்னாள் சுகாதார அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான சத்யேந்தர் ஜெயினுக்கு மருத்துவக் காரணங்களுக்காக 6 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று(மே 26) உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சத்யேந்தர் ஜெயின் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சத்யேந்தர் ஜெயின் அனுமதியின்றி டெல்லியை விட்டு வெளியேற கூடாது என்றும், ஊடகங்கள் முன் எந்த கருத்தையும் தெரிவிக்க கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. சிகிச்சைக்கு பின் சத்யேந்தர் ஜெயின் மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறிய உச்ச நீதிமன்றம், அவர் விரும்பிய மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதித்தது.

    ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

    திகார் சிறையின் குளியலறையில் தலைசுற்றல் காரணமாக மயங்கி விழுந்த சத்யேந்தர் ஜெயின், டெல்லியின் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லியின் முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் முதலில் தீன் தயாள் உபாத்யாயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர் மூச்சுத்திணறல் காரணமாக லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் ஆம் ஆத்மி கட்சி கூறியது. இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சத்யேந்தர் ஜெயின், ஷெல் நிறுவனங்கள் மூலம் பணமோசடி செய்ததாகவும், சட்டவிரோதமாக நிலம் வாங்கியதாகவும் கூறி கடந்த ஆண்டு மே மாதம் அமலாக்க இயக்குநரகம்(ED) அவரை கைது செய்தது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்
    டெல்லி
    ஆம் ஆத்மி

    இந்தியா

    இந்தியாவிலும் வெளியிடப்பட்டது ChatGPT-யின் IOS செயலி! சாட்ஜிபிடி
    கர்நாடகாவில் நாளை 24 புதிய அமைச்சர்கள் பதவியேற்க இருக்கிறார்கள் கர்நாடகா
    புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் நரேந்திர மோடி
    விருதுநகர் மாவட்டத்தில் 104 டாஸ்மாக் கடைகளுக்கு சீல்! விருதுநகர்

    உச்ச நீதிமன்றம்

    உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற கே.வி.விஸ்வநாதன் உயர்ந்த கதை  டெல்லி
    ஜல்லிக்கட்டு வெற்றி விழாவினை கொண்டாடுவோம் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஜல்லிக்கட்டு
    ஜல்லிக்கட்டு குறித்த தீர்ப்பு வெளியானது - தமிழக அரசு இயற்றிய அவசர சட்டம் செல்லும்  ஜல்லிக்கட்டு
    ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கிற்கு இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்  தமிழ்நாடு

    டெல்லி

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல்  இந்தியா
    மம்தா பானர்ஜியை தொடர்ந்து உத்தவ் தாக்கரேவின் ஆதரவையும் பெற்றார் கெஜ்ரிவால்  இந்தியா
    மத்திய அரசு Vs எதிர்க்கட்சிகள்: மம்தா பானர்ஜி-அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு இந்தியா
    'மக்களவை தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை': அண்ணாமலை அதிரடி அறிவிப்பு  தமிழ்நாடு

    ஆம் ஆத்மி

    புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை ஒற்றுமையாக புறக்கணிக்கும் 19 எதிர்க்கட்சிகள்  இந்தியா
    டெல்லி அரசின் முடிவுகளுக்கு லெப்டினன்ட் கவர்னர் கட்டுப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு  இந்தியா
    மதுபானக் கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் பெயர் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது இந்தியா
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்  இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023