NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'பெங்களூர் சீரியல் கில்லிங்': கொலை செய்தவர்களை கண்டறிந்த போலீசார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'பெங்களூர் சீரியல் கில்லிங்': கொலை செய்தவர்களை கண்டறிந்த போலீசார்
    டிசம்பர் மாதத்தில் இருந்து மூன்று பெண்களின் உடல் பெங்களூர் ரயில் நிலையங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    'பெங்களூர் சீரியல் கில்லிங்': கொலை செய்தவர்களை கண்டறிந்த போலீசார்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 16, 2023
    04:26 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூரில் உள்ள ரயில் நிலையத்தின் பிளாஸ்டிக் டிரம்மில் ஒரு பெண்ணின் உடல் திங்களன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பெங்களூரில் "தொடர் கொலைகள்" நடந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பாஜக மீது காங்கிரஸ் இந்த குற்றசாட்டை வைத்துள்ளது.

    டிசம்பர் மாதத்தில் இருந்து மூன்று பெண்களின் உடல் பெங்களூர் ரயில் நிலையங்களில் கண்டெடுக்கப்பட்டது.

    2022 டிசம்பர் இரண்டாவது வாரத்தில், SMVT ரயில் நிலையத்தில் ஒரு பயணிகள் ரயில் பெட்டியில் மஞ்சள் சாக்கு மூட்டையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

    2023, ஜனவரி 4அன்று, பெங்களூர் யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் எண்-1இல் நீல நிற பிளாஸ்டிக் டிரம்முக்குள் இளம் பெண்ணின் அழுகிய உடலை ரயில்வே போலீஸார் கண்டுபிடித்தனர்.

    இந்தியா

    இவை தொடர் கொலை அல்ல: பெங்களூர் போலீசார்

    இந்த இரு பெண்கள் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

    கடந்த திங்கள்கிழமை, பெங்களூரில் உள்ள சர் எம்.விஸ்வேஸ்வரயா டெர்மினல் (SMVT) ரயில் நிலையத்தின் பிரதான வாயில் அருகே இருந்த டிரம்மில் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

    இதை விசாரித்த போலீசார், இறந்தது தமன்னா என்ற 27 வயதான பெண் என்பதை கண்டறிந்தனர்.

    விசாரணையில் அவரை கொன்றது அவரது மைத்துனர் என்பதும் தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தமன்னா தனது கணவர் அஃப்ரோஸை பீகாரின் அராரியாவில் விட்டுவிட்டு உறவினரான இன்டெக்வாப் என்பவருடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார். அது தான் கொலைக்கான காரணம் என்று போலீசார் கூறியுள்ளனர்.

    ஆகவே, இவை தொடர் கொலை அல்ல என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பெங்களூர்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்

    இந்தியா

    குரங்கு கடியால் இறந்தவர்கள் பற்றிய பதிவுகள் இல்லை: மத்திய அரசு நாடாளுமன்றம்
    இந்திய ஆன்லைன் படிப்பில் கலந்து கொள்ள இருக்கும் தாலிபான் உறுப்பினர்கள் உலகம்
    மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வேண்டும்!மத்திய அரசுக்கு வலியுறுத்தல் இந்திய ரயில்வே
    சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் ஒருவர் மாணவர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம் சென்னை

    பெங்களூர்

    வைரல் வீடியோ: இந்தி எழுத்துக்கள் மீதிருக்கும் ஸ்டிக்கர்களைக் கிழித்தெறியும் இளைஞர் கர்நாடகா
    இசைக்கான மூன்றாம் கிராமி விருது வென்ற பெங்களூரை சேர்ந்த பாப் இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் இசையமைப்பாளர்கள்
    ஏரோ இந்தியா 2023: 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா என பிரதமர் மோடி பேச்சு பிரதமர் மோடி
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - ஒருவரை கைது செய்த காவல்துறை திருவண்ணாமலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025