NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆந்திராவில் இறந்த மனைவியை 115கி.மீ., தோளில் சுமந்தவாறு நடக்க துவங்கிய கணவன்-உதவிய காவல்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆந்திராவில் இறந்த மனைவியை 115கி.மீ., தோளில் சுமந்தவாறு நடக்க துவங்கிய கணவன்-உதவிய காவல்துறை
    இறந்த மனைவியை 115கி.மீ., தோளில் சுமந்தவாறு நடக்க துவங்கிய கணவன்-உதவிய காவல்துறை

    ஆந்திராவில் இறந்த மனைவியை 115கி.மீ., தோளில் சுமந்தவாறு நடக்க துவங்கிய கணவன்-உதவிய காவல்துறை

    எழுதியவர் Nivetha P
    Feb 09, 2023
    05:01 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திரா-ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தை சேர்ந்த பெண்மணி ஈடே குரு(30),இவரது கணவர் சாமுலு. இவர்கள் ஆந்திராவில் வசித்து வந்துள்ளனர்.

    சில நாட்களுக்கு முன்னர் ஈடே குருவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து அவர் விசாகா மாவட்டம் தகரபுவலசாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    கடந்த ஒருவாரமாக அங்கு சிகிச்சை பெற்றுவந்த போதிலும் அவர் குணமடையவில்லை.

    கணவர் சாமுலு கையில் இருந்த பணமும் தீர்ந்துள்ளது.

    இதனையடுத்து தொடர்ந்து சிகிச்சையளிக்க முடியாத காரணத்தினால் தனது மனைவியை நேற்று(பிப்.,8) டிஸ்சார்ஜ் செய்து தனது சொந்த ஊருக்கு அழைத்து செல்ல சாமுலு முடிவெடுத்துள்ளார்.

    தொடர்ந்து, அவர்கள் ஆந்திராவில் தங்கியிருந்த கிராமம் இங்கிருந்து 145கி.மீ., தொலைவில் உள்ளது.

    இதனால் ஒரு ஆட்டோவை பேசி தனது மனைவியை அதில் அழைத்து சென்றுள்ளார்.

    போலீசாருக்கு பாராட்டுக்கள்

    கையில் பணமில்லாமல், மொழி தெரியாமல் தவித்த சாமுலு, உதவிய காவல்துறை

    இந்நிலையில் அந்த ஆட்டோ விஜயநகர மாவட்டம் ராமாவரம் பகுதியில் வந்து கொண்டிருக்கையில், திடீரென எதிர்பாராவிதமாக ஈடேகுரு உயிரிழந்துள்ளார்.

    இதனால் அந்த ஆட்டோஓட்டுநர் இதற்குமேல் அழைத்துசெல்ல முடியாது என்றுகூறி பாதி வழியிலேயே இறக்கிவிட்டு சென்றுள்ளார்.

    கையில் பணமில்லாமல், மொழியும் தெரியாமல் தவித்த சாமுலு தனது ஊருக்கு செல்ல 115கி.மீ.,இருந்த நிலையில் இறந்துபோன மனைவியை தோளில் சுமந்துகொண்டு நடக்க துவங்கியுள்ளார்.

    எந்த திசை என்று தெரியாமல் 4 கி.மீ.கடந்த சாமுலுவை கவனித்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவலளித்துள்ளனர்.

    உடனே அங்குவந்த போலீசார் அவருக்கு உணவு வாங்கிகொடுத்து, பின்னர் தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றையும் வரவழைத்துள்ளார்கள்.

    அதில் இவர்களை ஏற்றி அவர்கள் ஊரில் விட்டுவிடக்கூறி அனுப்பி வைத்துள்ளார்கள்.

    தனியாக தவித்த அந்த நபருக்கு உதவிய காவல்துறைக்கு பெருமளவில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுவருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆந்திரா
    இந்தியா
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    ஆந்திரா

    ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு முதல் அமைச்சர்
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் தெலுங்கானா
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து தெலுங்கானா
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது தெலுங்கானா

    இந்தியா

    JEE மெயின் முடிவுகள் 2023: பெண்கள் யாரும் 100 மதிப்பெண் வாங்கவில்லை இந்தியா
    பட்ஜெட் தாக்கலுக்கு பின் தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய விலை விபரம்; தங்கம் வெள்ளி விலை
    ராணா அய்யூப் வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    இது அதானியின் பிரச்சனை, இந்தியாவுக்கு இல்லை - மார்க் மோபியஸ் நம்பிக்கை! தொழில்நுட்பம்

    காவல்துறை

    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல் இந்தியா
    விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள் இந்தியா
    விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை இந்தியா

    காவல்துறை

    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர் இந்தியா
    அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பினத்தவரை காலால் மிதித்து கொன்ற போலீஸ் அமெரிக்கா
    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் உத்தரப்பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025