NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'அம்மான்னா சும்மா இல்ல டா' - கன்றுக்குட்டியை காப்பாற்ற 5 கிமீ வரை ஆட்டோவுக்கு பின்னால் ஓடிய தாய் பசு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'அம்மான்னா சும்மா இல்ல டா' - கன்றுக்குட்டியை காப்பாற்ற 5 கிமீ வரை ஆட்டோவுக்கு பின்னால் ஓடிய தாய் பசு 
    'அம்மான்னா சும்மா இல்ல டா' - தாய் பசுவின் பாச போராட்டம் : தஞ்சையில் நெகிழ்ச்சி

    'அம்மான்னா சும்மா இல்ல டா' - கன்றுக்குட்டியை காப்பாற்ற 5 கிமீ வரை ஆட்டோவுக்கு பின்னால் ஓடிய தாய் பசு 

    எழுதியவர் Nivetha P
    Oct 24, 2023
    03:57 pm

    செய்தி முன்னோட்டம்

    நாடு, மொழி, இனம் என பல வேறுபாடுகள் இருந்தாலும் உலகம் முழுவதும் தாய் பாசம் என்பது ஒன்றுதான்.

    இது மனிதர்களுக்கு மட்டுமில்லை விலங்களுக்கும் பொருந்தும்.

    இதற்கு சான்றாக தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூரில் ஓர் நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

    அது என்னவென்று தான் நாம் இந்த செய்திக்குறிப்பில் காணவுள்ளோம்.

    தஞ்சாவூர் மாவட்டம் செக்கடி பகுதியினை சேர்ந்தவர் சபரிநாதன்.

    ஆட்டோ ஓட்டுநரான இவரது வீட்டில் பசுமாடு ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது.

    அந்த வீட்டில் உள்ளோர் இதனை தங்கள் பிள்ளை போல் பேணி வளர்த்து வருகிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இந்நிலையில் சபரிநாதன் தினமும் காலை தனது பசு மாட்டினை மேய்ச்சலுக்காக வெளியில் அனுப்புவதை வழக்கமாக வைத்துளளார்.

    அவ்வாறு மேய்ச்சலுக்காக அனுப்பப்பட்ட இந்த பசு நிறைமாத கர்ப்பிணி.

    பசு 

    ஆட்டோவை வழிமறித்த பசு மாடு 

    இந்நிலையில், தொம்பன்குடிசை பகுதியருகே சபரிநாதனின் பசு மேய்ந்து கொண்டிருந்தப்பொழுதே பிரசவ வலி ஏற்பட்டதாக தெரிகிறது.

    அங்கேயே அது கன்றுக்குட்டியினை ஈன்றுள்ளது.

    இதனிடையே வெகுநேரம் ஆகியும் பசு வீடு திரும்பவில்லை என்று சபரிநாதன் தேடி அலைந்த பொழுது கன்றுக்குட்டியுடன் பசுமாடு நிற்பதை பார்த்துள்ளார்.

    அதனையடுத்து, கன்றுக்குட்டியினை மீட்டு ஆட்டோவில் தனது வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.

    இதனை கண்டு தனது கன்று தன்னிடமிருந்து பிரித்து எடுத்துச்செல்வதாக கருதி, பாசத்தில் ஆட்டோவை பின்தொடர்ந்து ஓடியுள்ளது.

    கிட்டத்தட்ட 5கிமீ.,தூரம்வரை பசு ஓடி சென்று ஆட்டோவை வழிமறித்து நிறுத்தியுள்ளது.

    அதையடுத்து கன்றுக்குட்டியை அதன் தாயிடம் அவிழ்த்துவிட்டுள்ளார் சபரிநாதன், அப்போது கன்றை அரவணைத்து பசு பாலூட்டியது.

    பின்னர் தாயையும் சேயையும் சபரிநாதன் வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    இச்சம்பவம் பார்ப்போரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    உலகம்

    இந்தியாவின் GDP வளர்ச்சிக் கணிப்பை உயர்த்திய சர்வதேச நாணய நிதியம் இந்தியா
    லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்: பல நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இன்று இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் அமெரிக்கா
    பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்து இஸ்ரேலுக்கு கணடனம் தெரிவித்தது பாகிஸ்தான்  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    ஆயுத பூஜை கொண்டாட்டம் - சென்னையிலிருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்  சென்னை
    தமிழகம்-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி இலங்கை
    'ஆப்ரேஷன் அஜய்'- இஸ்ரேலில் இருந்து தமிழகம் திரும்பிய 28 தமிழர்கள் இஸ்ரேல்
    11 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025