NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சுதந்திர தினம் 2024: தலைநகர் டெல்லியில் துவங்கிய சுதந்திர தின கொண்டாட்டங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சுதந்திர தினம் 2024: தலைநகர் டெல்லியில் துவங்கிய சுதந்திர தின கொண்டாட்டங்கள்

    சுதந்திர தினம் 2024: தலைநகர் டெல்லியில் துவங்கிய சுதந்திர தின கொண்டாட்டங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 14, 2024
    06:01 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா தனது 78 வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் இன்று துவங்கியது.

    நாடு முழுவதும் இந்த கொடாட்டங்கள் களைகட்ட துவங்கிய நேரத்தில், தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் துவங்குகிறது.

    மோடி தனது உரையின் போது, ​​மத்திய அரசின் அறிக்கை, கொள்கை மற்றும் திட்ட அறிவிப்புகளை முன்வைப்பார்.

    அதற்கு முன்னதாக நேற்று இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான அட்டாரி- வாகா பார்டரில் பீட்டிங் ரெட்ரீட் நடைபெற்றது.

    விருந்தினர்கள்

    விழாவில் கலந்து கொள்ள 6000 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்

    சுதந்திர தின விழாவைக் காண 6,000 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

    இளைஞர்கள், பழங்குடியினர் சமூகம், விவசாயிகள், பெண்கள், ஆஷா பணியாளர்கள், செவிலியர் மருத்துவச்சி, அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் விழாவைக் காண உள்ளனர்.

    சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்தியக் குழுவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. -

    பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருந்து கிட்டத்தட்ட 2,000 பேர் பாரம்பரிய உடை அணிந்து பிரமாண்ட விழாவில் கலந்துகொள்வார்கள்.

    நிகழ்ச்சி நிரல் 

    இன்றைய நிகழ்ச்சி நிரல்

    பிரதமர் மோடியை, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், பாதுகாப்பு (MoS)சஞ்சய் சேத் மற்றும் பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அரமனே ஆகியோர் வரவேற்பார்கள்.

    பின்னர், கார்டு ஆஃப் ஹானரை பிரதமர் ஆய்வு செய்வார். அக்குழுவில் ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் டெல்லி காவல்துறையைச் சேர்ந்த தலா ஒரு அதிகாரி மற்றும் 24 பணியாளர்கள் இருப்பர்.

    அதனைத்தொடர்ந்து பிரதமர் செங்கோட்டைக்கு செல்வார்.

    அங்கே ஜெனரல் ஆபீசர் கமாண்டிங், டெல்லி ஏரியா லெப்டினன்ட் ஜெனரல் பவ்னிஷ் குமார், தேசியக் கொடியை ஏற்றி வைப்பதற்காக பிரதமரை மேடைக்கு அழைத்துச்செல்வார்.

    லெப்டினன்ட் சஞ்சீத் சைனி, தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரதமருக்கு உதவுவார்.

    21 குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, கொடியை பிரதமர் ஏற்றுவார்.

    உரை

    பிரதமர் உரை 

    தேசியக் கொடி ஏற்றப்பட்டவுடன், லைன் ஆஸ்டர்ன் ஃபார்மேஷனில் உள்ள இந்திய விமானப்படையின் இரண்டு மேம்பட்ட இலகுரக துருவ் ஹெலிகாப்டர்கள் மூலம் தேசிய கோடிக்கு மலர் இதழ்கள் தூவப்படும்.

    அதனைத் தொடர்ந்து பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அவரது உரையின் முடிவில், தேசிய கேடட் கார்ப்ஸின் (NCC) கேடட்கள் தேசிய கீதத்தைப் பாடுவார்கள்.

    நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 2,000 கேடட்கள் (இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை) கொண்டாட்டங்களில் பங்கேற்பர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சுதந்திர தினம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    சுதந்திர தினம்

    பிரதமரின் சுதந்திர தின உரையில் கலந்துகொள்ள இருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடி
    தொடர் விடுமுறை எதிரொலி - புதிய அறிவிப்பினை வெளியிட்ட மெட்ரோ நிர்வாகம்  மெட்ரோ
    சுதந்திர தினம் : வெள்ளையரை எதிர்த்து போராடிய முதல் தமிழ் பெண் ஆட்சியாளர் வேலு நாச்சியார் சிவகங்கை
    வெள்ளையர்களின் கொட்டத்தை அடக்கிய பெண் போராளி: யாரிந்த குயிலி? சிவகங்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025