NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 60 கிலோ எடையுள்ள சேனை கிழங்கு -அதிகளவு எடையுள்ள சேனைக்கிழங்கை அறுவடை செய்த விவசாயி
    அடுத்த செய்திக் கட்டுரை
    60 கிலோ எடையுள்ள சேனை கிழங்கு -அதிகளவு எடையுள்ள சேனைக்கிழங்கை அறுவடை செய்த விவசாயி
    சேனைக்கிழங்கு செடியுடன் விவசாயி வில்சன்

    60 கிலோ எடையுள்ள சேனை கிழங்கு -அதிகளவு எடையுள்ள சேனைக்கிழங்கை அறுவடை செய்த விவசாயி

    எழுதியவர் Nivetha P
    Dec 22, 2022
    10:18 pm

    செய்தி முன்னோட்டம்

    கன்னியாகுமரி மாவட்டம், வேர்கிளம்பி கல்லங்குழி பகுதியை சேர்ந்தவர் வில்சன். 72 வயதாகும் இவர் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    இவர் விவசாயம் மீது கொண்ட ஆர்வத்தால் சேனை கிழங்கு, வாழை, தென்னை போன்ற பயிர்களை நடவு செய்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    சேனைக்கிழங்கை அதிகளவில் நடவு செய்து அறுவடை செய்து வரும் இவர், சமீபத்தில் கேரளா விவசாயி ஒருவர் 45 கிலோ எடையுள்ள சேனைக்கிழங்கை அறுவடை செய்து சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த செய்தியை படித்துள்ளார்.

    அந்த சாதனையை முறியடிக்க விரும்பிய இவர், அதிகளவில் சேனைக்கிழங்கு செடிகளை சோதனை முயற்சியாக வளர்க்க துவங்கியுள்ளார்.

    அதனையடுத்து தற்போது வளர்ந்துள்ள ஆளுயர சேனைக்கிழங்கு செடிகளை அவர் அறுவடையும் செய்துள்ளார்.

    ஆச்சர்யத்தில் கிராம மக்கள்

    தமிழக தோட்டக்கலை அதிகாரிகளின் உதவியை நாடும் விவசாயி

    அவர் அறுவடை செய்த செடிகளுள், ஒரு செடியில் 60 கிலோ எடையுள்ள பெரியளவு சேனைக்கிழங்கும், மற்றொரு செடியில் 55 கிலோ எடையுள்ள சேனைக்கிழங்கும் கிடைத்துள்ளது. இதனால், விவசாயி வில்சன் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

    அதுமட்டுமில்லாமல், தான் அறுவடை செய்துள்ள பெரியளவு எடைக்கொண்ட சேனைக்கிழங்கை சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்ய தமிழக தோட்டக்கலை அதிகாரிகளின் உதவியை அவர் நாடி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் அந்த கிராமத்தில் வசித்து வரும் மக்கள் வில்சன் தோட்டத்தில் விளைந்த, 60 கிலோ எடையுள்ள பெரியளவு சேனைக்கிழங்கை ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    வைரல் செய்தி

    சமீபத்திய

    கர்நாடகாவில் அதிகரிக்கும் கோவிட்-19 தொற்று: ஒன்பது மாதக் குழந்தைக்கு கோவிட் -19 தொற்று  கோவிட் 19
    அரபிக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: IMD காற்றழுத்த தாழ்வு நிலை
    சிவகார்த்திகேயனின் 'பராசக்தி'க்கு இன்னும் 40 நாள் ஷூட்டிங் தான் பாக்கி என இயக்குனர் சுதா கொங்கரா தகவல் சிவகார்த்திகேயன்
    ஜெர்மனி ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல், 18 பேர் காயம் ஜெர்மனி

    தமிழ்நாடு

    தமிழகத்தை உலுக்கும் மாண்டஸ் புயல்! வெதர்மேன்
    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? சென்னை
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் சென்னை
    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! இந்தியா

    வைரல் செய்தி

    நாளொன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள்: அதிர்ச்சியான ஒரு ரிப்போர்ட்! இந்தியா
    1986 & 2022: 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிஜமாகும் வரலாற்று சாதனை கமல்ஹாசன்
    விவாகரத்து பெறுவதற்கு காரணம் தேடிய கணவர்-கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்திய கொடூரம் இந்தியா
    கர்நாடகாவில் 15 வயது அண்ணன் துப்பாக்கியால் சுட்டு 7 வயது சகோதரன் பலி - அஜாக்கிரதையால் நிகழ்ந்த மரணம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025