NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் 6 வாயில்களையும் காக்கும் 6 மிருகங்கள்: முழு விவரம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் 6 வாயில்களையும் காக்கும் 6 மிருகங்கள்: முழு விவரம் 
    புதிய நாடாளுமன்றத்தின் 6 வாயில்களுக்கும் 6 வெவ்வேறு உயிரினங்களின் பெயரிடப்பட்டுள்ளன.

    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் 6 வாயில்களையும் காக்கும் 6 மிருகங்கள்: முழு விவரம் 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 18, 2023
    06:40 pm

    செய்தி முன்னோட்டம்

    நாளை முதல் இந்திய சட்டமன்றம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாற உள்ளது.

    இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருக்கும் ஒரு சிறப்பம்சம் குறித்து இப்போது பார்க்கலாம்.

    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மொத்தம் 6 வாயில்கள் இருக்கின்றன. இந்த 6 வாயில்களுக்கும் 6 வெவ்வேறு உயிரினங்களின் பெயரிடப்பட்டுள்ளன.

    இந்த உயிரினங்கள் ஒவ்வொன்றும் 140 கோடி இந்தியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்றத்தின் வெவ்வேறு அம்சங்களைக் குறிக்கிறது.

    கஜ துவாரம், அஸ்வ துவாரம், கருட துவாரம், மகர துவாரம், ஷர்துலா துவாரம் மற்றும் ஹம்ச துவாரம் ஆகியவை நாடாளுமன்ற வாயில்களின் பெயர்களாகும்.

    புதிய நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு வாயிலிலும் அந்த வாயிலின் பெயரை கொண்ட உயிரினத்தின் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது.

    பைஜ்க்வெக்

    கஜ துவாரம்

    புத்தி, நினைவாற்றல், செல்வம் மற்றும் ஞானம் ஆகியவற்றைக் குறிக்கும் யானையின் பெயரான 'கஜம்' நாடாளுமன்றத்தின் முதல் வாயிலுக்கு வைக்கப்பட்டுள்ளது.

    இந்த வாயில் கட்டிடத்தின் வடக்குப் பகுதியில் உள்ளது.

    வாஸ்து சாஷ்திரத்தின் படி, வடக்கு திசை புதனுடன் தொடர்புடையது. இது புத்திசாலித்தனத்திற்கான இடமாக நம்பப்படுகிறது.

    வாயில்களில் யானை உருவங்களை வைப்பது மிக பிரபலமான ஒரு நடைமுறையாகும்.

    வாஸ்து சாஸ்திரத்தின் படி, யானை உருவங்கள் செழிப்பையும் மகிழ்ச்சியையும் தரும்.

    டொய்ஜ்வ்கிய

    அஸ்வ துவாரம்

    அஸ்வம் என்பது குதிரைக்கான இன்னொரு பெயராகும்.

    பொதுவாக, சக்தி, வலிமை மற்றும் தைரியத்தை குதிரை குறிக்கிறது. ஒரு அரசாங்கத்திற்கு தேவையான குணங்களாக இவை கருதப்படுகின்றன.

    இந்திய பாரம்பரியத்தில் குதிரைகளின் முக்கியத்துவத்தை வேத இலக்கியங்களிலும், ராமாயணம் மற்றும் மகாபாரதத்திலும் காண முடியும்.

    1250 CEஇல் கிழக்கு கங்கா வம்சத்தின் நரசிம்மதேவனால் கட்டப்பட்ட கோனார்க் சூரிய கோவிலில் உள்ள குதிரையின் சிற்பம் தான் அஸ்வ துவாரத்தை அமைக்க தூண்டியது.

    ட்ஜ்வ்க்

    கருட துவாரம்

    மூன்றாவது வாயிலுக்கு பறவைகளின் ராஜாவான கருடனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    18ஆம் நூற்றாண்டில் , நாயக்கர் காலத்தில், தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் வடிவமைக்கப்பட்ட கருடனின் சிலையை குறிக்கும் வகையில் புதிய நாடாளுமன்றத்தின் மூன்றாவது வாயிலில் கருட சிற்பம் வைக்கப்பட்டுள்ளது.

    ராமாயணத்தின் படி, கருடன் இந்து கடவுள் விஷ்ணுவின் வாகனமாகும்.

    மும்மூர்த்திகளில் பாதுகாவலரான விஷ்ணுவின் வாகனம் கருடன் என்பதால், அது சக்தி மற்றும் தர்மத்தின் சின்னமாக பார்க்கப்படுகிறது.

    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கிழக்கு நுழைவாயிலுக்கு தான் கருட துவாரம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

    பொதுவாகவே, கழுகுகளும் பருந்துகளும் அதிகாரத்தின் சின்னமாக கருதப்படுகின்றன.

    அதனால் தான், அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் அதிகாரபூர்வ சின்னமாக கழுகுளை வைத்திருக்கின்றன.

    பிவெஜ்ஜில்ன்

    மகர துவாரம்

    இந்திய புராணங்களின் படி, மகரம் என்பது வெவ்வேறு விலங்குகளின் கலவையான கடல் உயிரினம் ஆகும்.

    தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பரவியுள்ள இந்து மற்றும் புத்த நினைவுச் சின்னங்களில் மகர சிற்பங்கள் காணப்படுகின்றன.

    வெவ்வேறு உயிரினங்களின் கலவையாக மகரம் இருப்பதால், அது இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையை குறிக்கிறது.

    மேலும், வாசல்களில் வைக்கப்படும் மகர சிற்பங்கள் சக்திவாய்ந்த பாதுகாவலர்களாகக் கருதப்படுகின்றன.

    புதிய நாடாளுமன்றத்தின் மகர துவாரம் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் நுழைவாயிலை பார்த்தபடி அமைக்கப்பட்டுள்ளது.

    எடித்வ்க்ன்

    ஷர்துல துவாரம்

    ஐந்தாவது வாயிலுக்கு 'ஷர்துலா' என்ற மற்றொரு புராண உயிரினத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த உயிரினம் சிங்கத்தின் உடலையும், குதிரை, யானை அல்லது கிளியின் தலையையும் கொண்டதாகும்.

    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் வாயிலில் ஷர்துலா இருப்பது நாட்டு மக்களின் சக்தியை குறிக்கிறது என்று அரசு குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மேலும், இது வலிமை மற்றும் கருணையின் சமநிலையை பிரதிபலிப்பதாகவும் கூறப்படுகிறது.

    மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் உள்ள குஜ்ரி மஹால் அருங்காட்சியகத்தில் இருக்கும் ஷர்துலா சிலையின் நினைவாக நாடாளுமன்றத்தின் தென்கிழக்கு பொது நுழைவாயிலுக்கு ஷர்துலா என்று பெயரிடப்பட்டுள்ளது.

    சிஜேகஃவ்ன்

    ஹம்ச துவாரம்

    அன்னப்பறவையை குறிக்கும் 'ஹம்சா' என்ற பெயர் புதிய நாடாளுமன்றத்தின் ஆறாவது வாயிலுக்கு வைக்கப்பட்டுள்ளது.

    அன்னப்பறவை, இந்து கடவுளான சரஸ்வதியின் வாகனமாகும்.

    மேலும், அன்னப்பறவை மோட்சத்தை குறிக்கிறது. பிறப்பு மற்றும் இறப்பு என்ற சுழற்சியில் இருந்து ஆன்மா விடுதலை பெறுவதே மோட்சமாகும்.

    சுய-உணர்தல் மற்றும் ஞானத்தை குறிப்பதற்காக புதிய நாடாளுமன்றத்தின் ஆறாவது வாயிலில் அன்னப்பறவையின் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புதிய நாடாளுமன்றம்
    நாடாளுமன்றம்

    சமீபத்திய

    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா
    வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது நடிகர் சூர்யா
    2024-25 நிதியாண்டிற்கான ஐடிஆர் தாக்கல்: முக்கிய காலக்கெடு மற்றும் விபரங்கள்; வரி செலுத்துபவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை வருமான வரி அறிவிப்பு

    புதிய நாடாளுமன்றம்

    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருக்கும் ஃபூக்கோவின் ஊசல் எதற்காக நிறுவப்பட்டது நாடாளுமன்றம்
    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்றம்
    செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நாடாளுமன்றம்
    நாடாளுமன்ற ஊழியர்களுக்கு இந்திய பாணியில் விதவிதமான சீருடை அறிமுகம்  நாடாளுமன்றம்

    நாடாளுமன்றம்

    பாஜக அரசை கலைக்க முயற்சி: நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு எப்போது நடைபெறும்? மக்களவை
    ஆளுநரை திரும்பப்பெறும் விவகாரம் - திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மக்களவையில் நோட்டீஸ் திமுக
    இணைய பாதுகாப்புக்கு தனி ஒழுங்குமுறை ஆணையம் நிறுவ நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை சைபர் கிரைம்
    டெல்லி அவசர சட்டம் தொடர்பான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு  தாக்கல் செய்தது டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025