NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இன்னும் 5 நாட்களில் முடிவடைகிறது ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு: நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியவை
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்னும் 5 நாட்களில் முடிவடைகிறது ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு: நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியவை
    ரூ.2,000 நோட்டுகள் இனி செல்லாது என்று கடந்த மே 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

    இன்னும் 5 நாட்களில் முடிவடைகிறது ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு: நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியவை

    எழுதியவர் Sindhuja SM
    Sep 25, 2023
    01:16 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய ரிசர்வ் வங்கியின் "சுத்தமான நோட்டுக் கொள்கையின்" படி, இந்தியாவின் 2,000 ரூபாய் நோட்டுகள், செப்டம்பர் 30, 2023க்குப் பிறகு அதன் சட்டப்பூர்வ டெண்டர் அந்தஸ்தை இழக்கும்.

    ரூ.2,000 நோட்டுகள் இனி செல்லாது என்று கடந்த மே 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

    மக்கள் தங்களிடம் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றலாம் அல்லது டெபாசிட் செய்யலாம் என்று அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், ரூ.2,000 நோட்டுகளை செப்டம்பர் 30, 2023 வரை மட்டுமே மாற்ற முடியும் என்றும் அப்போது காலக்கெடு அறிவிக்கப்பட்டிருந்தது.

    அந்த காலக்கெடு இன்னும் 5 நாட்களில் முடிவடையுள்ள நிலையில், உடனடியாக 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு என்ன செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

    ஜேடன்வ்க்

    ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான விதிமுறைகள்

    தனிநபர்கள் ரூ.2,000 நோட்டுகளை வரம்புகள் ஏதுமின்றி தங்களது வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    எனினும், வழக்கமான KYC தேவைகள் மற்றும் பிற சட்டப்பூர்வ டெபாசிட் விதிமுறைகள் பின்பற்றப்படும்.

    BSBD(அடிப்படை சேமிப்பு வங்கி வைப்புத்தொகை) அல்லது ஜன்தன் கணக்கைப் பயன்படுத்துபவர்களுக்கு, வழக்கமான வைப்பு நிதி வரம்புகள் தொடர்ந்து பின்பற்றப்படும்.

    அதாவது, இந்தக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்கு மேல் ரூ.2000 நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியாது.

    மேலும், வருமான வரி விதிகளின் படி(விதி 114B), ஒரு தனிநபர், வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் ஒரே நாளில் ரூ.50,000க்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்யும்போது அவர்களின் பான் நம்பரை அவர்கள் வழங்க வேண்டும்.

    போடன்வ்ஜ்

    ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான விதிமுறைகள் 

    செப்டம்பர் 30ஆம் தேதி வரை, ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில்(ROs) தனிநபர்கள் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

    அதுமட்டுமின்றி, அருகில் உள்ள எந்த வங்கிக் கிளையிலும் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை தனிநபர்கள் மாற்றிக்கொள்ளலாம்.

    ரூ.2000 நோட்டுகள் செப்டம்பர் 30ஆம் தேதி வரை செல்லும் என்பதால், அதுவரை எந்த ஒரு ஆவணமும், செல்லானும் இல்லாமல் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற முடியும்.

    இருப்பினும், சில பொதுத்துறை வங்கிகள் வேறுபட்ட அணுகுமுறையை செயல்படுத்தியுள்ளன. அதனால், வங்கிக்கு செல்லும் போது அடையாள சான்றுகளை கையில் வைத்திருப்பது நல்லது.

    சிஜின்ல்

    இந்த வார வங்கி விடுமுறை நாட்கள் 

    இந்த வாரம் வங்கிகள் திங்கள் முதல் புதன்கிழமை வரை(செப்டம்பர் 25 முதல் செப்டம்பர் 27 வரை) திறந்திருக்கும்.

    செப்டம்பர் 28, வியாழன் அன்று, மிலாடி நபியை முன்னிட்டு வங்கிகள் இயங்காது.

    அதன் பிறகு, வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்(செப்டம்பர் 29 மற்றும் செப்டம்பர் 30) ​​வங்கிகள் வழக்கம் போல் செயல்படும்.

    அதனால், இந்த வார வியாழக்கிழமையை தவிர மற்ற நாட்களில் நீங்கள் வங்கிக்கு சென்று ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

    ட்விட்டர் அஞ்சல்

    ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கு இதுவே கடைசி வாரம் 

    This week marks the final opportunity for people to exchange or deposit Rs 2,000 notes.
    As per the RBI's "clean note policy", Rs 2,000 will lose its status as legal tender after September 30, 2023.#twothousandnote #Currency #rupee #2k #India #RBI #News #Topindiannews pic.twitter.com/L0kItLAqPx

    — Top Indian News (@topindiannews_) September 25, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ரிசர்வ் வங்கி

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா

    இந்தியா, கனடா விசா சேவைகள் 'மறுஅறிவிப்பு' வரும்வரை நிறுத்தப்பட்டுள்ளன கனடா
    டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மோதும் இந்தியா டேவிஸ் கோப்பை
    முற்றும் இந்தியா-கனடா பதற்றம்: விசா சேவைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை கனடா
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் அருணாச்சல பிரதேச வீரர்களுக்கு அனுமதி மறுத்த சீனா ஆசிய விளையாட்டுப் போட்டி

    ரிசர்வ் வங்கி

    ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல்  மகாராஷ்டிரா
    'e-ரூபி'யை கட்டண முறையாக ஏற்றக் கொள்ளும் ரிலைன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ்!  இந்தியா
    பணமோசடி குற்றச்சாட்டு: கேரளாவில் உள்ள மணப்புரம் பைனான்ஸில் ரெய்டு இந்தியா
    ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல்  மும்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025