NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொது மக்களை சரமாரியாக சுட்ட பயங்கரவாதிகள்: காஷ்மீரில் பரபரப்பு!
    இந்தியா

    பொது மக்களை சரமாரியாக சுட்ட பயங்கரவாதிகள்: காஷ்மீரில் பரபரப்பு!

    பொது மக்களை சரமாரியாக சுட்ட பயங்கரவாதிகள்: காஷ்மீரில் பரபரப்பு!
    எழுதியவர் Sindhuja SM
    Jan 02, 2023, 12:33 pm 1 நிமிட வாசிப்பு
    பொது மக்களை சரமாரியாக சுட்ட பயங்கரவாதிகள்: காஷ்மீரில் பரபரப்பு!
    பயங்கரவாத தாக்குதலால் 4 பேர் பலி(படம்: India Today)

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி என்ற பகுதியில் நேற்று(ஜன:1) இரவு வீடுகளுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால், பொது மக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த டிசம்பர் 28ஆம் தேதி 4 பயரங்கவாதிகளைப் பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர். சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து AK ரக துப்பாக்கிகள்(7), M4 ரக துப்பாக்கி(1), பிஸ்டல்கள்(3) மற்றும் ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சம்பவத்தின் போது தப்பி ஓடிய பிற பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வந்தனர். இந்நிலையில், பயங்கரவாதிகள் பொது மக்களை தாக்கியதில் ரஜோரி பகுதியில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். டாங்கிரி பகுதியில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இறந்தவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு!

    இதையடுத்து, காஷ்மீரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது போன்ற தாக்குதல்கள் மீண்டும் நடந்துவிட கூடாது என்பதற்காக அந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத செயல்களை எதிர்த்து பொதுமக்கள் டாங்கிரி பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் பொது மக்களை பாதுகாக்க தவறிவிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதற்கிடையில், பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்ற அதே இடத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் இருவர் காயமடைந்துள்ளனர். உயிழிந்த நான்கு பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலை வழங்கப்படும் என்றும் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்திருக்கிறார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை மீறல் ஆணையத்தில் புகார் தமிழ்நாடு
    "நாட்டு நாட்டு" முதல் புஷ்பா வரை: கோலாகலமாக நடந்த ஐபிஎல் 2023 தொடக்க விழா ஐபிஎல் 2023
    மாட்ரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் காலிறுதியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சித் தோல்வி இந்திய அணி
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு மாநில அரசு

    இந்தியா

    'தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் தான்' - சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி பேச்சு தமிழ்நாடு
    இந்தூர் கோவில் விபத்து: உயிரிழந்த 8 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன மத்திய பிரதேசம்
    இந்தியாவில் டெக்னோவின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் - எப்போது வெளியீடு! ஸ்மார்ட்போன்
    இந்திய விற்பனையில் கலக்கும் சிட்ரோன் சி3 காரின் ஏற்றுமதி தொடக்கம்! சிட்ரோயன்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023