NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பீகாரில் 3 லட்சம் மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கம் - அதிரடி நடவடிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பீகாரில் 3 லட்சம் மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கம் - அதிரடி நடவடிக்கை
    பீகாரில் 3 லட்சம் மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கம் - அதிரடி நடவடிக்கை

    பீகாரில் 3 லட்சம் மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கம் - அதிரடி நடவடிக்கை

    எழுதியவர் Nivetha P
    Sep 27, 2023
    03:54 pm

    செய்தி முன்னோட்டம்

    பீகார் மாநிலத்தில் இயங்கி வரும் அரசு பள்ளிகளில் பயின்று வந்த 3 லட்ச பள்ளி மாணவ-மாணவியர்கள் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.

    பீகார் அரசு பள்ளி மாணவர்கள் கடந்த 15 நாட்களுக்கு மேல் எவ்வித முன்னறிவிப்பு மற்றும் காரணமும் இல்லாமல் பள்ளிக்கு வராமல் விடுமுறை எடுத்ததாக தெரிகிறது.

    இதன் அடிப்படையில் தான் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் விடுப்பு எடுக்க வேண்டுமென்றால் அதற்கு உரியமுறையில் பெற்றோர்கள் கடிதம் எழுதி சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    அதன்படி விடுமுறை எடுத்த மாணவர்களுள் பலரது பெற்றோர் விடுமுறைக்கான காரணங்களை குறிப்பிட்டு கடிதம் எழுதி கல்வித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

    பள்ளி 

    3 நாட்கள் விடுமுறை எடுத்தால் பள்ளி நிர்வாகத்திடம் தகவலளிக்க வேண்டும் 

    எனினும், இதனுள் சுமார் 3 லட்சத்து 32 ஆயிரத்தி மாணவர்களின் பெற்றோர் விடுமுறை கடிதம் அளிக்காமல் இருந்துள்ளனர்.

    இதனால் தான் அம்மாநில அரசு இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

    மேலும் இதுகுறித்து கல்வித்துறை, 4ம் வகுப்பு மாணவர்கள் 46,000 பேர், 5ம் வகுப்பு மாணவர்கள் 44,000 பேர், 6ம்-வகுப்பு மாணவர்கள் 39 ஆயிரம் பேர் மற்றும் மற்ற வகுப்புகளை சேர்ந்தவர்களும் நீக்கப்பட்டுள்ளனர் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இதனிடையே அண்மையில் தான் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் 75% வருகைப்பதிவினை பெற்றிருக்க வேண்டும் என்று கல்வித்துறை அறிவித்திருந்தது.

    அதேபோல் பள்ளிக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை எடுத்தால் தகுந்த காரணத்தினை பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பள்ளி மாணவர்கள்
    பீகார்

    சமீபத்திய

    இப்போது நீங்கள் கூகிள் சர்ச்சிலேயே ஆடைகளை ட்ரை செய்து பார்க்கலாம் கூகிள் தேடல்
    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா

    பள்ளி மாணவர்கள்

    2023-24ம் ஆண்டின் தமிழக பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கான முக்கியத்துவம் பட்ஜெட் 2023
    பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதாமல் ஆப்சென்ட்டான 50,000 மாணவர்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் சட்டமன்றம்
    சென்னைக்கான பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு மாலை ஸ்நாக்ஸ் திட்டம் சென்னை
    ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் 2% ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை - அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு

    பீகார்

    பீகார் பாலம் இடிந்து விழுந்ததற்கு முதல்வர் நிதிஷ் குமார் அளித்த பதில் இந்தியா
    முகங்களை அடையாளம் கண்டு கள்ள ஓட்டுகளை தடுக்கும் புதிய தொழிநுட்பம் இந்தியா
    கலைஞர் கோட்டம் திறப்பு விழா - பீகார் முதல்வரின் தமிழக வருகை திடீர் ரத்து  கருணாநிதி
    தேசியளவிலான எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் - பாட்னா செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025